செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

'அவர்' போஜனப் பிரியர்! யார் அந்த அருள்மிகு ‘அவர்’?!

வேலைவெட்டி எதுவும் இல்லாதபோது வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்பாத நான், இணையம் வழியாகக் கடவுள் குறித்த ஐயங்களுக்கு விடை தேடுவது[ம்] வழக்கமாகிப்போனது. சற்று முன்னர் ‘கடவுளுக்குப் பசிக்குமா?’ என்றொரு கேள்வியுடன் இணைய உலகில் அலைந்து திரிந்தபோது, நான் அறிந்திராத தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றேன். வாசிப்போருக்குப் பயன்படுவதாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையில் அதைப் பகிர்கிறேன், திருத்தம் ஏதும் செய்யாமல். 

                                  ++++++++++++++++++++++

யான் குறிப்புகடவுளுக்குப் பசிக்குமா?

Posted on December 29, 2016 | By Trichy Farook

நூல்கள்: இயேசு இறை மகனா?

...ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொறித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி… (லூக்கா 24:41-43)

இயேசு… தாகமாயிருக்கிறேன் என்றார்.

(யோவான் 19:28)

ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் தான் அவர் சாப்பிட்டார் என்று நினைத்து விடக் கூடாது. நன்றாக விரும்பிச் சாப்பிடக் கூடியவராக இருந்தார்.

இயேசு மதுபானம் அருந்தியதாகக் கூறும் வசனத்தில் (மத்தேயு 11:19) போஜனப் பிரியர்’ என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் அதிக விருப்பம் உள்ளவராக இயேசு இருந்திருக்கிறார். சாப்பிடுதல் கடவுளின் இலக்கணமாகுமா? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

https://bayan.quranandhadis.com/