எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 26 ஜூன், 2025

22 நிமிடங்களில் மோடி ‘அதை’ச் சாதித்தாராம்! அம்ம்ம்ம்மாடியோவ்!!

அறிவிப்பு:

மோடி குறித்துப் பதிவுகள் எழுதுவதில் எனக்குப் போதிய நாட்டம் இல்லை. எனினும், மனம்போன போக்கில் அவர் பேசுவது அதைத் தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது!

                             *   *   *   *   *

//2025இல் இந்தியா-பாகிஸ்தான்  போர் நான்கு நாட்கள் நீடித்தது. இது மே 7 முதல் 10 வரை நடந்தது// இது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான உலகறிந்த செய்தி.

போர் என்பது, தொடுக்கப்படுவதற்கு முன்னால், பின்விளைவுகளை ஆராய்தல், திட்டமிடல்[எதிரியின் படைபலத்தோடு தன் பலத்தை ஒப்பிடுதல் போன்றவை], மோதலுக்குத் தயாராவது என்று பல நிலைகளை உள்ளடக்கியது.

நினைத்தவுடன் களத்தில் இறங்குவதோ வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதோ 100% நடவாத காரியம்.

நடத்திக் காட்டியதாக மோடி முழங்கியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது; அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

22 நிமிடங்களில்.....!?[கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு கவனித்தாரா?!]

இது மனித இனத்தவருக்கு இயலாத காரியம். மோடி கடவுளால் அனுப்பப்பட்டவர்[இவரும் கடவுளே] என்பதால் சாத்தியமாயிற்றோ!?