வியாழன், 25 ஏப்ரல், 2013

ஒரு நாத்திகரின் ஆத்திக வேடம்!

மூட நம்பிக்கை கூடாதுதான். ஆனாலும் அது, சில நேரங்களில் சிலருக்கு நன்மை பயப்பதும் உண்டு!

கதை:                                    கடவுள் துணை

”டாக்டர் கூப்பிடுறாருங்க.” செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன்.

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் எழிலரசு.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி, அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுளை வேண்டிக்கோங்க. அவர் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் எழிலரசு.

வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“ஏம்ப்பா, நீதான் நாத்திகனாச்சே. அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னே?” டாக்டரைப் பார்க்க வந்திருந்த அவரின் நண்பர் கேட்டார்.

“அதுவா.....?” சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் டாக்டர் எழிலரசு:

“சில நேரங்களில் டாக்டர் கணிப்பையும் மீறி, நோயாளிகள் பிழைச்சுடறது உண்டு. அந்த மாதிரி நேரங்களில், 'இவரெல்லாம் ஒரு டாக்டரா?'ன்னு சம்பந்தப்பட்ட டாக்டரைப் பழிப்பாங்க. கடவுளைக் கைகாட்டி விட்டுட்டா, 'கடவுள் கருணை காட்டினா உண்டுன்னுதான் டாக்டரும் சொன்னாரு. கடவுளும் கண் திறந்துட்டார்'னு சொல்லுவாங்களே தவிர டாக்டரைக் குறை சொல்ல மாட்டாங்க.”

“மக்கள் மனசை நல்லாவே படிச்சி வெச்சிருக்கே. புத்திசாலியப்பா நீ? என்று பாராட்டினார் நண்பர்.

#########################################################################################################

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக