எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 18 மே, 2024

‘முஸ்லிம்’... தேர்தல் வெற்றிக்கு, ‘பாஜக’ கையாளும் மந்திரச் சொல்?!?!

“மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11ஆவது இடத்தில் இருந்து இன்று 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது[முதலாவது என்றே சொல்லியிருக்கலாமே?] பெரிய பொருளாதார நாடாக மாறும்” -நட்டா[இந்து தமிழ்]

நட்டாவின் கணக்குப்படி, 11ஆவது இடத்துக்கும் 5ஆவது இடத்துக்கும் இடையிலுள்ள 6 இடங்களைக் கடந்து முன்னேற இந்தியாவுக்கு[மோடி ஆட்சியில்]10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேற[பொருளாதார வளர்ச்சியில்] இடைப்பட்ட ஓர் இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. அதாவது ஓர் இடத்தைக் கடக்க 3 ஆண்டுகள் தேவை என்கிறார் ஜெ.பி. நட்டா.

6க்கு 10 என்றால், 1க்கு 3 தேவையா?

என்ன கணக்கு இதெல்லாம்?

இந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கு ஆதாரம் வைத்திருக்கிறாரா அவர்?

ஆதாரம் உள்ளதோ இல்லையோ, மோடியைப் புகழ்வதற்கு இப்படியெல்லாம் கணக்குக் காட்டியிருக்கிறார்.

அவரின் இந்தக் கணக்கை விமர்சிப்பது நம் நோக்கமல்ல.

உரையின் இறுதியில், கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கக் கர்னாடக அரசு முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்காவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாக நம்புகிறார்களா ‘பாஜக’ தலைவர்கள்?

“ஐயோ பாவம் மோடி கூட்டம்” என்று பரிதாப்படுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை!

                                   *   *   *   *   * 

https://www.hindutamil.in/news/india/1249639-if-modi-becomes-pm-india-will-become-world-s-3rd-largest-economy-in-3-years-jp-nadda.html