எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 6 நவம்பர், 2024

நீங்கள் மனிதரா மிருகமா?!

கீழ்வரும் காணொலியை முழுவதும் பாருங்கள்.

பார்க்க முடிந்தவர்கள் எதையும் தாங்கும் மன வலிமை வாய்க்கப் பெற்றவர்கள்.

பார்த்து முடித்த பிறகு, தேடுபொறியில் ‘வேட்டையாடும் விலங்குகள்’, 'hunting animals and killing'  என்பன போன்ற தலைப்புகளை உள்ளிட்டால், இது போன்ற ஏராளமான குலைநடுங்கச் செய்யும் கொடூரக் காணொலி நிகழ்வுகளை[பக்கவாட்டில் வரிசைகட்டுபவை உட்பட]க் காணலாம்[பொறாமை, சூதுவாது, வஞ்சகம், ஆதிக்க வெறி என்று ஏராளமான தீய குணங்களின் இருப்பிடமான மனிதர் வாழ்வில் இடம்பெறும் பயங்கர நிகழ்வுகள் கற்பனைக்கு எட்டாதவை].

அவற்றைக் கண்டு  கல்நெஞ்சக்காரர்களும் கதிகலங்குவார்கள்; மனம் பதறுவார்கள். காணுகிற அத்தனைப் பேரின் நிலையும் இதுதான்.

விளைவு.....

அவர்கள், கருணை வடிவானவன் என்று கதைக்கப்படும் கடவுள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழப்பார்கள்[உயிர்கள் சித்ரவதைக்கு உள்ளாகக் காரணம் அவை செய்த பாவங்கள் என்பவர்கள் படு அயோக்கியர்கள். பாவம் செய்யத் தூண்டுபவர் யார் என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை].

நம்பிக்கை இழக்காமல், ஆகச் சிறந்த பக்தராகக் கோயில் கோயிலாக ஒருவர்  அலைவாரேயானால்.....

அவர் மனித உருவில் நடமாடும் மனசாட்சியே இல்லாத மிருகம் ஆவார்.

நான் மிருகம்[கடவுள் மறுப்பாளன் என்பதெல்லாம் வெளி வேடம்!]

நீங்கள் மனிதரா மிருகமா?!