பக்கங்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அரங்கநாதனின் ‘ஆனந்த நாடி’!

ஸ்ரீரங்கம் கோயில். எங்கும் அமைதி சூழ்ந்த ரம்மியமான ராத்திரி நேரம்.

பக்தர் ஒருவர் பகவானைச் சேவிப்பதற்காக வந்தார்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் க்கான பட முடிவு
அரங்கநாதன் சன்னதியிலிருந்து விவரிப்புக்கு அடங்காத ஒரு பேரொளி  வெளிப்பட்டது. பகவான்தான் தனக்குக் காட்சிதரப் போகிறாரோ என்றெண்ணி இமை கொட்டாமல் அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் பக்தர்.

ஒளியில் மையம் கொண்டிருந்த ஒரு பொருள் ‘விர்ர்ர்ர்’ரென வான் வழியாகப் பறந்து போய் ரங்கநாயகி சன்னநிதிக்குள் நுழைந்தது.

நேரம் கழிந்தது.

பறந்து சென்ற அந்தப் பொருள் வந்த வழியே திரும்பி மீண்டும் அரங்கநாதன் சன்னதிக்குள் புகுந்தது.

அந்தப் பொருள் என்ன?!

அதைத் தன் கண்களால் நோக்கிப் பரவசப்பட்ட பக்தரே[ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர்] சொல்கிறார்.....

‘அது அரங்கநாதனின் ஆனந்த நாடி[கடவுளின் ஆணுறுப்பு!?!?!?]. அதாவது, தேக சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பயன்படும் உறுப்பு. நள்ளிரவிலும் பிராட்டியைச் சேரவேண்டும் என்ற ஆசை அரங்கநாதனுக்கு வந்தது. தன் ஆனந்த நாடியை ரங்கநாயகியிடம் அனுப்பித்[அர்ச்சகர் சன்னதிக் கதவைப் பூட்டிட்டுப் போய்ட்டாராம்] தன் இச்சையைத் தீர்த்துக்கொண்டார் அரங்கநாதன்[எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க!].

இந்நிகழ்வைக் குணரத்ன கோசத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் பராசரபட்டர்.

‘ஆணின் போகத்துக்குதான் பெண். எந்த நேரத்திலும் அவளை எப்படியும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு என்பதை அரங்கநாதனின் இந்தச் செயல் உணர்த்துகிறது’ என்பதாக விளக்கம் தந்திருக்கிறாராம் பட்டர்.

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியரின் ‘இந்துமதம் எங்கே போகிறது?’[ஐந்தாம் பதிப்பு: 2013; நக்கீரன் பப்ளிகேசன்ஸ் - சென்னை] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது.

‘கருமாந்தரக் கடவுள்  கதைகள்’ என்னும் தலைப்பில் ஏற்கனவே ஒரு பதிவு வெளியிட்டிருப்பதால், அதே தலைப்பு இங்கு தவிர்க்கப்பட்டது
=================================================================================
அதிதீவிர இந்துமதப் பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இது போல் ஏராள ‘சீச்சீ...சீச்சீ’... அசிங்கக் கதைகளை உங்களின் முன்னோடிகள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். முதலில் இந்தக் குப்பைகளைத் தீக்கிரையாக்குங்கள். அதற்கப்புறம்.....

இம்மாதிரிக் கதைகளைச் சாடுவோரிடம், “இந்துமதத்தை மட்டும் விமர்சிக்கிறாயே, பிற மதங்களைக் கண்டுகொள்வதில்லையே[நான் பிற மதங்களையும் கண்டித்து எழுதியிருக்கிறேன்...’கடவுளின் கடவுள்’ தளத்தில்], ஏன்?” என்று கேள்வி கேட்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக