பக்கங்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2019

“குருநாதர் புகைத்தால் நாய் புகைவிடும்”... புளுகன் நித்தியின் ஓயாத பொய்யுரைகள்!!!


தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, அந்த கோவிலைக் கடந்த ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது யூடியூப்பில் கணினி வரைகலை உதவியுடன் வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா, சிஷ்யக் கோடிகளுக்குத் தன் சிற்றறிவுக்கு எட்டியதை அருளுரையாக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் புதன்கிழமை வெளியிட்ட அருளுரையில் மேட்டூர் அணையில் நீருக்கு அடியில் உள்ள சிவன் கோவில் குறித்தும், அந்தக் கோவிலின் பழமையான மூலலிங்கம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிலை கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி அவரிடம் உள்ள பழமையான மூல லிங்கத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
அதே போல அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது குருநாதர் ராம் சுரத்குமார் போல எந்த நடிகரும் ஸ்டைலாகப் புகைபிடிக்க முடியாது என்று கூறியுள்ள நித்தி, தனது குருநாதர் புகை பிடித்தால் அருகில் நிற்கும் நாய் புகைவிடும் என்று அளந்துவிட்டதுதான் நித்தி அருளுரையின் உச்சக்கட்ட காமெடி.[நன்றி: பாலிமர் செய்தி]
நடிகை ரஞ்சிதாவினுடனான உறவு அம்பலமானபோதே ஆசிரமம்[பிடதி] நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, தானே கடவுள் என்று பொய் பரப்பி மக்களை ஏமாற்றுவதாக வழக்குத் தொடுத்து இந்த ஆளை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்.
அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாகத் தண்டனையியிலிருந்து தப்பிய இவர்.....

“இன்று காலை நான் தியானத்தை முடிக்கக் காலதாமதம் ஆனது. எனவே, சூரியன் 40 நிமிடம் தாமதமாக உதித்தது” என்பதுபோல அவ்வப்போது புருடா விட்டு மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அரசு வேடிக்கை பார்க்காமல் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது நம் போன்றோர் வேண்டுகோள்.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக