அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 26 மார்ச், 2022

'கோயில்கள்'... தேவை 'வயாகரா' பிரசாதம்!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 'பாபா ரோட் ஷா' கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்குப் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது[கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு 'பிரசாத மதுவை' வாங்கி குடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது].

பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுபானம் வழங்கும் இந்தச் சடங்கு 90 ஆண்டுகளாக நடந்துவருகிறதாம்[நம் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல்போனது எப்படி?!]. 

பக்தர்கள் முதலில் 'பாபா ரோட் ஷா'வுக்கு வணக்கம் செலுத்துவார்கள். ஒரு குழுவினர் மதுவைச் சேகரித்து ஒரு பெரிய அண்டாவில் ஊற்றுவார்கள். அண்டாவிலிருந்து பாட்டில்களில் எடுத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

***வடை பாயசமோ, கொழுக்கட்டையோ, பொங்கலோ, மட்டன் பிரியாணியோ[அசைவச் சாமிகளுக்கு] முதலில் கடவுள்களுக்குப் படைக்கப்பட்டுப் பின்னர் பக்தகோடிகளுக்கு வழங்கப்படும்போது அவை 'பிரசாதம்' என்று பெயர் பெறுகின்றன.

இன்ப லோகத்தில் மிதக்கச் செய்கிற 'சோம பானம்' அருந்திப் பழக்கப்பட்ட கடவுள்களுக்கு மதுபானம் வைத்து வழிபடுவது ஒரு பெரிய விசயம் இல்லைதான். ஆனாலும், பக்தகோடிகளைப் பொருத்தவரை இது அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிற நடவடிக்கை ஆகும்.

இதைவிடவும், மதுபானம் போல் மிக எளிதாகக் கடைகளில் வாங்க முடியாத கஞ்சா, அபினி என்று தடை செய்யப்பட்ட சரக்குகளையோ, வயாகரா போன்ற நீண்ட நேர உடலுறவுக்குப் பயன்படுகிற மாத்திரைகளையோ, கடவுள்களுக்குப் படைத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், அவர்கள் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்குவார்கள் என்பது உறுதி.

இதை, இந்தப் புண்ணியப் பூமியிலுள்ள அனைத்துக் கோயில் நிர்வாகங்களும் பரிசீலித்து ஆவன செய்திடல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

==========================================================================