பக்கங்கள்

சனி, 26 அக்டோபர், 2019

தமிழறிஞர்களும் தணியாத தாம்பத்திய சுகமும்!

பழந்தமிழறிஞர் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள்.
கலித்தொகையைப் பதிப்பித்தவராக அடையாளப்படுத்தப்படும் சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு மூன்று மனைவியர்; பத்துப் பிள்ளைகள். 

புதுமைப்பித்தன் ‘சாபவிமோசனம்’ கதையை எழுதுவதற்குக் காரணமாக அமைந்த ‘அகலிகை வெண்பா’ என்னும் நூலை எழுதிய கால்நடை மருத்துவரான வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாருக்கு இரண்டு மனைவியர்; ஆறு பிள்ளைகள். 

1300 ஆண்டுகளுக்கான வானியல் பஞ்சாங்கத்தை உருவாக்கியவரும், கோள்களின் அடிப்படையில் இலக்கிய நூல்களின் காலத்தைக் கணித்தவருமான எஸ்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்; பதினாறு பிள்ளைகள்.

{தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளார், குடும்பத் தலைவனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர்[ஒருத்தி கருவுற்றால் ‘அந்த’ச் சுகத்துக்கு இன்னொருத்தி தேவை. அவளும் கருவுற்றால்...கற்பனை செய்துகொள்க] தேவை என்னும் கொள்கை உடையவர்}.

15 வயதில் திருமணம் செய்துகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார், தம் 48ஆம் வயதில் மறுதிருமணம் செய்தார். [ஆதாரம்: ‘தமிழறிஞர்கள்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். தகவல் உதவி: தமிழ் இந்து 26.10.2019]

இவ்வாறாக நீண்டுகொண்டே போகிறது தமிழறிஞர்களின் தாம்பத்திய மோகம் குறித்த  பட்டியல்.

‘அது’ விசயத்தில் தமிழறிஞர்கள் அதீத ஆர்வம் படைத்தவர்களாக இருந்தமைக்கு.....

அகத்துறை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருந்த, பெண்களின் அண்ணாந்து ஏந்திய[மேல் நோக்கிய] மென் கொங்கைகள் குறித்தும் அகல்[அகன்ற] அல்குல் குறித்தும் ஆழ்நிலை ஆய்வுகளில் ஈடுபட்டது காரணமோ!?

அக்காலத் தமிழறிஞர்கள் அப்படி! இக்காலத் தமிழறிஞர்கள்?
===========================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக