பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

தமிழ் எழுத்தாளர்களை மதித்துப் போற்றும் தமிழ்நாட்டு நீதிமன்றம்!

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வார இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் ஆதிதிராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக மதுரைக்காரர் ஒருவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குத் தொடுக்கப் போதிய முகாந்தரம் இல்லையென்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்[‘தமிழ் இந்து’ 25.10.2019]. அவர் எழுத்தாளர் கி.ரா. குறித்துத் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

‘கி.ரா. பிரபல எழுத்தாளர்; பல்வேறு விருதுகளைப் பெற்றவர்’ 

நீதிபதி அவர்கள், குறிப்பிட்டதொரு வகுப்பாரைத் தன் நாவல் மூலமாக இழிவுபடுத்திவிட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் விடுவிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட இரு எழுத்தாளர்களுமே சர்ச்சைக்குரிய நூல்களைத் [கி.ரா...‘பாலுறவுக் கதைகள்’{தலைப்பு நினைவில்லை}; பெ.மு...‘மாதொருபாகன்’, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’] தந்தவர்கள் எனினும், தங்களின் தரமான படைப்புகள் மூலம் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் என்ற வகையில், நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டு மதித்துப் போற்றப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோருக்குத் தமிழ் மக்கள் என்றென்று கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

கி.ராஜநாராயணன் க்கான பட முடிவு
பெருமாள் முருகன் க்கான பட முடிவு







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக