பக்கங்கள்

புதன், 23 அக்டோபர், 2019

நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ ஒரு ‘மொக்கை’க் கதையா?!

பிரபல நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ என்னும் புதினம் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறனால் ‘அசுரன்’ என்னும் பெயரில் சினிமா ஆக்கப்பட்டு விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்த, இயக்குநர் வசந்தபாலனின் மதிப்புரை இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியுள்ளது.
வசந்தபாலன்

பூமணி
#ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையை மரியோ பூஸோ ‘காட்ஃபாதர்’ என எழுதுகிறார். சேதன் பகத் அவரது கல்லூரி வாழ்க்கை, காதல்கள் பற்றி எழுதுகிறார். இதெல்லாம் ஒருத்தருடைய அனுபவமாக இருக்கும். அவருடைய கதையாக இருக்கும். இதை ஸ்கிரிப்ட் ஆக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

இங்கே இலக்கிய அமைப்புடன் இருக்கிற நாவல்கள்தான் அதிகம். காட்சி வடிவத்தில் இருக்கிற நாவல்கள் குறைவு. 90க்குப் பிறகு மாடர்ன் லிட்ரேச்சர் வந்துவிட்டது. கதையே சொல்லக்கூடாது என்ற முடிவில் அவர்கள் இருந்தார்கள். உதாரணமாக ‘வெக்கை’யை எடுக்கலாம்.

‘வெக்கை’யை வைத்துமட்டும் ஒரு முழுப்படம் செய்திட முடியாது. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு புதுக்கதை பண்ணியிருக்கார். ‘விசாரணை’யிலும் அப்படித்தான் செய்தார். எடுக்க முடிகிற, எடுக்க முடியாத நாவல்கள்னு நம்மகிட்டே இரண்டு பக்கமும் இருக்கு. ‘வெக்கை’யை வாசிச்சவங்களைக் கேட்டால் இதிலிருக்கிற எந்தத்தன்மையும் ‘அசுர’னில் இல்லை என்பார்கள். இப்படி முரண்பாடு இருக்கு.

ஆனால், சினிமாவின் மொழி ஒரு ரிதமாக உருவாகணும். திரைவடிவத்திற்கு மாற்றுகிற சிரமங்கள், திரைக்கதை ஆசிரியர்களின் போதாமை என இதெல்லாம் கலந்துதான் நம்மகிட்டே சிக்கல்கள் இருக்கு. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு கதையை எழுதி அதை ‘வெக்கை’
யோடு சேர்த்திருக்கார். அது பெரிய பணி. ‘வெக்கை’ படிச்ச ஒரு லட்சம் வாசகர்கள் இருப்பாங்க. அவங்களை திருப்திப்படுத்தி, படம் பார்க்கிறவங்களையும் திருப்தி பண்றது உயிரை எடுக்கிற வேலை#


‘பூமணியின் நாவலில் கதையே இல்லை. பூமணியின் கதைக்கும் அசுரன் திரைப்படக் கதைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. படத்தின் இரண்டாம் பகுதியில் பூமணியின் கதை நிராகரிக்கப்பட்டு, வெற்றிமாறனின் கதை சேர்க்கப்பட்டுள்ளது’ -வசந்தபாலனின் விமர்சனத்தில் இவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

இந்த விவர்சனம் எழுத்தாளர் பூமணிக்குப் பெருமை சேர்க்கவில்லை. 

இதைப் பூமணி நிச்சயம் வாசித்திருப்பார். ஆனால், இதற்கான மறுப்புரையை அவர் வெளியிட்டதாகத் தெரியவில்லை. 

அவரின் கருத்தை அறிய என் போன்ற கத்துக்குட்டிகள் உட்பட அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!
======================================================================== 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக