எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 24 மே, 2019

நாத்திகர் ஸ்டாலின்[?] வாழ்க!

ஸ்டாலின் நாத்திகரா ஆத்திகரா என்பது குறித்து நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை; அறியும் முயற்சியிலும் ஈடுபட்டதில்லை.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்..... 

கடவுள்/கடவுள்கள் குறித்துக் கணக்குவழக்கில்லாமல் கற்பனைக் கதைகள் சொல்லிப் பிழைப்பு நடத்திவரும் ஒரு கூட்டத்தார், ''ஸ்டாலின் ஒரு நாத்திகன். மதநம்பிக்கையாளர்களின் மனம் புண்படும் வகையில் பேசுபவர். மறந்தும் அவருக்கோ அவரின் கட்சியினருக்கோ தேர்தலில் வாக்களித்துவிடாதீர்கள்'' என்று கூட்டம் போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஊடகங்களுக்குப் பேட்டி தந்து விதம் விதமாய்ச் சாடினார்கள்.

பத்திரிகைகளிலும்  எழுதினார்கள்.

இயன்ற வகைகளிலெல்லாம் ஓயாமல் ஒழியாமல் மனம் சலிக்காமல் பரப்புரை செய்தார்கள். இரவுபகலாய்க் கண்விழித்து இல்லாத கடவுள்களுக்கெல்லாம் யாகங்கள் செய்து வழிபட்டார்கள். என்ன செய்தும்.....

இவர்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் முடிவுகள் அமையவில்லை.

அரசியல்வாதிகளால் தமக்கு விளையும் நன்மைகள் குறித்து மட்டுமே சிந்தித்து வாக்களிக்கும் வழக்கமுள்ள நம் தமிழ் மக்கள், ஸ்டாலின் சார்ந்த கட்சிக்கும் ஏனைய தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களித்து மக்களவைத் தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட மிக மிக மிகப் பெருபாலான தொகுதிகளில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இனி நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் ஸ்டாலின் தலைமையிலான அணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

ஸ்டாலின் வாழ்க! 'நாத்திகர்' ஸ்டாலின் வாழ்கவே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக