பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 25 மே, 2019

''தமிழ்நாடு சுடுகாடாகும்''.....ஹெச்.ராஜா!!!

தமிழநாட்டில் பா.ஜ.க. 100% தோல்வியைத் தழுவியதால், பாஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மேற்கண்டவாறு விஷம் கக்கியிருக்கிறார். கீழே காண்பது 'சமயம்'https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/tamil-nadu-people-need-to-support-bjp-h-raja/articleshow/69484775.cms இணையத்தில்  வெளியான செய்தி.
''பா.ஜ.க.வை விட்டுத் தமிழக மக்கள் விலகி இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக  மாறிவிடும்.....''[சமயம் செய்திகள், 24.05.2019]

தமிழ் மக்கள் ஒரு தொகுதியில்கூட[குறிப்பாக ஹெச்.ராஜா] பா.ஜ.க.வைத் தேர்ந்தெடுக்காததை மனதில் கொண்டு ''தமிழ் மக்கள் விலகியிருந்தால்...' [விலகியிருப்பதால் என்று சொல்ல நினைத்ததை இப்படிச் சொல்லியிருக்கிறார்] என்கிறார் இந்த பா.ஜ.க.பக்தர்.

மோடி, தனக்கு ஆதரவளிக்காத மாநிலங்களைப் புறக்கணிப்பாரோ இல்லையோ, அவர் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நாறவாயர் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

எந்தவொரு நடுவணரசும், மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை முற்றிலுமாய்ப் புறக்கணித்து ஆட்சி நடத்துவது சாத்தியமில்லை. தேர்ந்த அரசியல்வாதியான மோடியும் அத்தகையதொரு தவற்றைச் செய்திட மாட்டார் என்று நம்பலாம். எனவே.....

தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் தமிழ்நாடு சுடுகாடாக மாறுவதற்கான வாய்ப்பில்லை என்று உறுதிபடச் சொல்லலாம்.. ஆனாலும், தான் சார்ந்த கட்சியையும் தன்னையும் ஆதரிக்காத தமிழகம் சுடுகாடாக மாற வேண்டும் என்று எச்.ராஜா ஆசைப்படுவாரேயானால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது....

தன் எதிரிகளை அழிப்பதற்காகச் சிக்கல் சிங்கார வேலர் கோயிலில் 'சத்துரு சம்ஹார யாகம்'https://pasiparamasivam.blogspot.com/2019/03/blog-post.html  என்று ஒரு யாகம் செய்தாரே, அந்த யாகத்தை இப்போதும் செய்யலாம்.

செய்வாரா எச்சி.ராஜா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக