பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 26 மே, 2019

'சண்டி யாகம்' செய்த காங்கிரசாரும் 'சத்துரு சம்ஹார யாகம்' செய்த எச்.ராஜாவும் இனியேனும் திருந்துவார்களா?!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு, தேர்தலில் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்காகத் தமிழகக் காங்கிரசாரும், தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்களைத் தோல்வியுறச் செய்வதற்காகச் 'சத்துரு சம்ஹார' யாகத்தை[சத்துரு - எதிரி; சம்ஹாரம் - அழிப்பது] 2019 மார்ச் மாதம் இறுதியில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவும செய்து முடித்தார்கள்.

மேற்கண்டவர்கள் செய்யும் யாகங்கள் மூடத்தனமானவை. அவற்றால் கிஞ்சித்தும் பயனில்லை என்று நான் வெவ்வேறு பதிவுகள் மூலம்  நம்பர் 1 பதிவரான நான்[ஹி...ஹி...ஹி!] சுட்டிக்காட்டினேன். 

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்காரர்களோ எச்.ராஜாவோ இதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடியே யாகங்களைச் செய்து முடித்தார்கள்.

செய்த யாகங்களால் பயன் ஏதும் விளைந்ததா என்றால் இல்லை என்பதே உரிய பதிலாக இருக்க முடியும்..

ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. நம்ம ராசாவுக்கு நேர்ந்ததும் அதுவே.

இம்மாதிரி யாகங்களால், மழை பெய்வித்தல், சுனாமி போன்றவற்றால் விளையும் சீரழிவுகளைத் தடுத்தல் என்று எந்தவொரு பயனும் விளைந்ததில்லை என்பது வரலாறு.[அரிதாக எப்போதாவது தற்செயலாக விளையும் பயன்களைக் கணக்கில் கொள்ளுதல் கூடாது]. 

மேற்கண்ட நிகழ்வுகளும் இக்கருத்துக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்.

எச்.ராஜா, காங்கிரசார் என்றில்லை, இனி யாகம் செய்து காரியம் சாதிக்க நினைப்போர் எவராயினும் அம்முயற்சியைக் கைவிடுதல் வேண்டும் என்பது என் பரிந்துரையாகும்.
==================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக