எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 27 மே, 2019

தமிழகத்தில் மோடியின் படுதோல்விக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சொல்லும் காரணங்கள்!

#தமிழகம் பற்றியும் இங்கு பா.ஜ.க.வை வளர்ப்பது பற்றியும் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இன்னும் அக்கறை காட்டியிருக்க வேண்டும். இந்நாள்வரை அவர்கள் நடந்துகொண்ட விதம், பா.ஜ.க.வை ஒரு வட இந்தியச் சார்புள்ள கட்சியாகவே தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, எல்லாத் திட்டங்களுக்கும் இந்திப் பெயரையே வைக்கிறார்கள். இதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகப் பா.ஜ.க.வை ஒரு அந்நியப்பட்ட[தங்களுக்குத் தேவையில்லாத] கட்சியாகவே எண்ணுகிறார்கள்.
உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிய மோடியால் தமிழகத்த்இல் ஒரு இடத்தைக்கூடை கைப்பற்ற இயலாமைக்குக் காரணம் மேற்குறிப்பிடப்பட்டவைதான்.

மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம்பெறவே இல்லை. காரணம்.....

காலை 10 மணிக்கு விமானத்தில் வந்திறங்கி, நட்சத்திர ஓட்டலில் தங்கி, ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லிக்குப் பறந்துவிடுவதுதான்.

இவர்கள் முதலில், இந்தியை மட்டுமே போற்றும் போக்கிலிருந்து விடுபடுவதோடு, வடஇந்தியர் என்னும் மனப்பான்மையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடுதல் மிக மிக முக்கியம். 

அடுத்து, தமிழக மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் முயற்சி செய்தல் வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும் வேண்டும். தமிழகம் வந்து, சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து, மனம் திறந்து அவர்களுடன் உரையாடுதல் அவசியத் தேவை.

இவ்வகையில் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை இவர்களால் கண்டிப்பாக வெல்ல முடியும்#

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி பி.எஸ்.ராகவன் அவர்கள் 'தமிழ் இந்து'[27.05.2019]வுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியே மேற்கண்ட கருத்துத் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக