பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 28 மே, 2019

அதென்னடா 'அந்த்யோதயா'?!?!

#தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்குப் புதியதாக 'அந்த்யோதயா' விரைவு ரயில் சேவை ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்# -இது இன்றைய 'தமிழ் இந்து'[28.05.2019] நாளிதழ்ச் செய்தி.
தாம்பரம் தமிழ்நாட்டில் சென்னை நகரின் ஒரு பகுதி. செங்கோட்டை தமிழ்நாட்டின் ஓர் ஊர்.

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள ஊர்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளவைதான்.

இவ்வூர்களில் வாழும் மக்கள் அனைவரும் தமிழ் மக்களே. இவர்களின் தாய்மொழி தமிழ். எனவே.....

தமிழ் மக்கள் வாழும் ஊர்களுக்கிடையே ஓடும் ர யிலுக்குத் தமிழில் பெயர் வைப்பதுதானே நியாயம்?

இந்த ரயிலுக்குப் பெயர் 'அந்த்யோதயா'வாம்!

இது என்ன அநியாயம்!

ரயில்களுக்குப் பெயர் சூட்டுதல் தொடர்பான துறையில் தமிழர் ஒருவர்கூட இல்லையா? இருந்தாலும், அவர் சூடுசொரணை அற்றவரா? அணுவளவுகூட மொழிப்பற்று இல்லாதவரா?

ஓ..... ஒன்று மறந்துவிட்டது!

இது 'இந்தி'ய தேசம்.

இங்கு இந்திக்காரர்கள் நினைப்பதுதான் நடக்கும்.

பித்துக்குளித்தனமாய் இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். 

இங்குள்ள தமிழர்கள் என்னை மன்னிப்பார்களாக!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக