பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 22 மே, 2019

உடலுறவில் மிகையான கட்டுப்பாடுகள் தேவையா?

#கிரேக்கர்கள், ரோமானியர்கள் போன்றோரின் தலைமுறையில் வந்த ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாட்டு மக்கள் இன்றளவும் 'போர்க்குணம்' மிக்கவர்களாக இருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களிடையே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதில் மிகையான கட்டுப்பாடுகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்திய நாட்டில், வட இந்தியப் பஞ்சாபிகளும் தென்னிந்திய மலையாளிகளும்கூட உடலுறவு விசயத்தில் அதிக அளவிலான கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை; விதிக்கவும் இல்லை.

இக்காரணத்தால் இந்த இரு சமுதாய மக்களிடையே பெருமளவில் உடலுறவுக் குற்றங்கள் நிகழ்வதில்லை. இவர்கள் பொது வாழ்வில் பல துறைகளிலும் முன்னணி பெற்றிருப்பதும் அறியத்தக்கது,

தமிழகத்தைப் பொருத்தவரை உடலுறவு விசயத்திலும் இல்லற வாழ்க்கையிலும் கட்டுப்பாடுகள் மிக மிக அதிகம். 

பஞ்சாபியருடனும் மலையாளிகளுடனும் ஒப்பிடும்போது, தமிழர்கள் பல துறைகளில் பின்தங்கியிருப்பதற்கும், கோழைகளாய் வாழ்வதற்கும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழர்கள் கோழைகளே என்பதற்கு, தமிழர் - சிங்களர் இடையேயான போரில் இவர்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்ததே தலையாய சான்றாகும்#

கடும் விவாதத்திற்குரிய இக்கருத்து இடம்பெற்ற நூல்: 'தமிழர்', 'தமிழ்க் கோட்டம்' வெளியீடு; சென்னை; முதல் பதிப்பு: 2010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக