எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 20 ஏப்ரல், 2020

இதோ ஒரு கரோனா மாந்திரீகர்! அடுத்து...

உத்தரப் பிரதேசம், வாரணாசி பகுதியில் வாழும் ‘சஞ்சய் திவாரி’ என்னும் ஜோதிடர், ரூ11/= கட்டணத்தில், மந்திரம் சொல்லிக் கரோனா நோயை விரட்டியடிப்பதாகக் கூறிவந்துள்ளார். தன் கைபேசி எண்ணை இணைத்து விளம்பரமும் செய்துள்ளார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படவே, செய்தியறிந்த காவல்துறையினர் இவரைக் கைது செய்து, காவலில் வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இது, இன்றைய ‘செய்திப்புனல்’ செய்தி. [https://www.seithipunal.com/india/fraud-man-arrest-when-corona-virus-complete-solution-of\

இவர் ஒரு ஜோதிடர்.

கரோனாவின் கோரதாண்டவம் தொடருமேயானால்.....

இதைக் குணப்படுத்துவதற்கென்றே பெரிய பெரிய மகான்களெல்லாம் வருகைபுரிய இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் காவல்துறையால் கைது செய்ய முடியாது. காரணம்.....

அவர்கள் கடவுளின் அவதாரங்கள்!

corona-comedies
இந்த ஆள் https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_28.html கைது செய்யப்பட்டாரா?
========================================================================