அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 20 ஏப்ரல், 2020

இதோ ஒரு கரோனா மாந்திரீகர்! அடுத்து...

உத்தரப் பிரதேசம், வாரணாசி பகுதியில் வாழும் ‘சஞ்சய் திவாரி’ என்னும் ஜோதிடர், ரூ11/= கட்டணத்தில், மந்திரம் சொல்லிக் கரோனா நோயை விரட்டியடிப்பதாகக் கூறிவந்துள்ளார். தன் கைபேசி எண்ணை இணைத்து விளம்பரமும் செய்துள்ளார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படவே, செய்தியறிந்த காவல்துறையினர் இவரைக் கைது செய்து, காவலில் வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இது, இன்றைய ‘செய்திப்புனல்’ செய்தி. [https://www.seithipunal.com/india/fraud-man-arrest-when-corona-virus-complete-solution-of\

இவர் ஒரு ஜோதிடர்.

கரோனாவின் கோரதாண்டவம் தொடருமேயானால்.....

இதைக் குணப்படுத்துவதற்கென்றே பெரிய பெரிய மகான்களெல்லாம் வருகைபுரிய இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் காவல்துறையால் கைது செய்ய முடியாது. காரணம்.....

அவர்கள் கடவுளின் அவதாரங்கள்!

corona-comedies
இந்த ஆள் https://kadavulinkadavul.blogspot.com/2020/04/blog-post_28.html கைது செய்யப்பட்டாரா?
========================================================================