ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பிரதமர் ‘மோடி’க்குக் கல்கி பகவான்[மகா விஷ்ணு] எழுதிய கடிதம்!

corona-comedies
'பாரதப் பிரதமர் மோடிஜியின் கவனத்திற்கு, அவசர, அவசிய செய்தி! கரோனா என்னும் கொடிய விஷக் கிருமியை உலகம் முற்றிலும் ஒழிப்பதற்கு மகா விஷ்ணுவின் கலியுக அவதாரமான தெய்வீக மகாகுரு ஸ்ரீ சுவாமிகள் (கல்கி அவதாரம்) இறை நிலையில் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடிஜியை நேரில் சந்திக்க விரும்புகிறார். அழைக்கின்றார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லவும், தீர்வு செய்யவும் தயாராக இருக்கிறார். மோடிஜி இந்த[த்] தெய்வீக மகா குருவை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கும்படி உலக மக்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

மேலும் விவரங்களுக்கு, ஏ.எஸ்.எஸ்.ஸ்ரீராஜராஜேஸ்வரி (ஜோதிடரின் மனைவி), சிவகாசி" -இவ்வாறான ஒரு கடிதத்தை இந்த ஆளின் சீடர் ஒருவர் பிரதமருக்கு அனுப்பியிருக்கிறாராம்[இந்து தமிழ், 19.04.2020]

//எண்கணிதப்படி இதோட (CORONA) கூட்டு எண் 7. உயிர் பலியும், கட்டுக்கு அடங்காத நிலையையும் கொடுக்கும் என்பதே அதன் பலனாகும்.

அதுவே, கரோனா ( KOROONAA) என்று எழுதினால் கூட்டு எண் 5 வரும். சாந்த நிலையை, உயிர்[ப்] பலி இல்லாத நிலையை உருவாக்கும் என்பதே இதன் பலன். எனவே, இந்தியாவில் அதன் பெயரை கரோனா என்று மாற்றி, அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வேண்டும். 130 கோடி மக்களும் புதிய பெயரை உச்சரித்து, கோடிக்கணக்கான பத்திரிகை[ப்] பிரதிகளிலும் அந்தப் பெயர் அச்சிடப்படும்போது அதன் பலனை நாம் கண்கூடாகப் பார்ப்போம். கரோனாவின் ரத்த வெறியும் அடங்கி, பரமசாதுவாகிவிடும்// என்கிறானாம் இந்த ஆள்.

கடவுளின் பெயரால் எதைச் சொன்னாலும் நம்புகிற மூடர்கள் நிறைந்த நாடு இது என்பதால், தன்னைக் கல்கி அவதாரம் என்று சொல்லி, இந்த நாட்டின் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறான்ர் இந்த ஆசாமி.

பிரதமர் விரும்பினால்.....

ஒரு தேதியை அறிவித்து,  "எண் கணிதம் ஒருபுறம் இருக்கட்டும், கல்கி அவதாரம்னு சொல்லிக்கிற நீ, முதலில் கரோனாவைப் பூண்டோடு அழித்துக் காட்டு"  என்று இந்த நபருக்கு அறிவுறுத்தலாம். அதைச் செய்யத் தவறினால்.....

கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இந்தப் பொய்யனுருக்கு அதிகபட்சத் தண்டனை கிடைக்க வழி செய்யலாம். அது, இம்மாதிரி அண்டப் புளுகர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும்.

இந்த ஆள் கடிதம் எழுதியது உண்மையா? அது பிரதமருக்குக் கிடைத்திருக்குமா? ‘ஆம்’ எனின், நம் பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?

காத்திருப்போம்.

கொசுறுச் செய்தி: கலைஞர் மு. கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, ‘காவிரிப் பிரச்சினை தீர, தமிழ்நாடு மாநிலம் என்பதை, தமிழ்நாடு ஸ்டேட் என்று மாற்ற வற்புறுத்திக் கடிதம் எழுதினாராம் இந்த எண்கணிதப் புளுகன்ர்.