புதன், 25 ஜனவரி, 2023

“இங்கெல்லாம் பெரிய மனுஷங்களே இல்லையா பன்னீரு?!?!”

டைத் தேர்தல்[ஈரோடு கிழக்கு] வந்ததோ இல்லையோ, இங்குள்ள இரண்டு அடிமைகள், கூட்டணி சேரக் கட்சி கிடைக்காமலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமலும் படும் அல்லல் சொல்லும் தரமானதாக இல்லை.

அம்மா அமரர் லோகம் சென்ற அன்றே தற்காலிக முதல்வராக இருந்த பன்னீரு, மோடியின் இரு கரம் பற்றி, “உங்கள் தயவு எனக்கு எப்போதும் தேவை” என்பது போல மேன்மைமிகு மோடியின் இடுப்பு மட்டத்துக்கு வளைந்து குனிந்து[தனிமையில் சந்தித்திருந்தால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்திருப்பார்] சரணாகதி அடைந்தார்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சின்ன[அம்மா]த் தலைவி சசிகலாவின் கால்களில் விழுந்து  ‘திடீர்’ முதல்வரான எ.ப.சாமி, சமயோசிதமாகத் தலைமையை மாற்றி, மோடி அவர்களின் சேவகர் ஆனார். பதவி விலகும்வரையும் விலகிய பின்னரும் அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்... கொள்கிறார். அதன் பயனாக, இந்த இடைத் தேர்தலில் ‘பாஜக’ ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்.

இந்தவொரு சூழ்நிலையை மிகச் சரியாகக் கணித்த பன்னீரு,  எடப்பாடிஜி கனவு நனவாகிவிடுமோ என்று பயந்து, தான்தான் மேதகு மோடியின் ‘நம்பர் 1’ அடிமை’ என்பதை மெய்ப்பிப்பது போல், “மோடி இரண்டு அணியும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார். ஒரு பெரிய மனுஷன்[மோடி] நல்லது சொல்கிறார். அதைக் கேட்க வேண்டும்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்[தினகரன், 25.01.2023].

இச்செய்தி, தமிழ்நாட்டில் பெரியமனுஷங்களே இல்லையா என்று பன்னீரிடம் கேட்கத் தூண்டுகிறது.

‘இல்லை’ என்று பன்னீர் கருதினால், “இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பரட்சித் தலைவர் என் கனவில் காட்சியளித்துச் சொன்னார். சில நிமிடங்களுக்குப் பிறகு புரட்சித் தலைவி, தெய்வத்தின் தெய்வம் ஜெயலலிதா அம்மையாரும் சொன்னார்[கனவில்]” என்று சொல்லியிருக்கலாம்.

அப்படிச் சொல்லியிருந்தால் பன்னீரு நம் பாராட்டுக்கு உரியவராக இருந்திருப்பார்; இப்போது நம் பழிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இவரைப் போன்றவர்களுக்கு வாக்களித்து மக்கள் வெற்றி பெற்றிடச் செய்தால், தாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையே பிற இனத்தாருக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக மாற்ற முயற்சி செய்வார்கள் என்பது உறுதி!



===================================================================================