பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 25 ஜூன், 2023

‘த.நா.’ வரும் ‘வடக்கச்சி’களின் ‘தொழில்’ சுத்தம்! வரவேற்கப்படுவார்களா?!

ட மாநிலக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர்[முழு விவரம் சேகரித்தால் அவர்கள் பலராகவும் இருத்தல்கூடும்] சென்னைக்கு வேலை தேடி வருவது போல வந்து, ‘விபச்சாரம்’ செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் இந்தத் தொழிலுக்கு, ‘குடும்ப விபச்சாரம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் நம் ஊடகக்காரர்கள்.

வட நாட்டுப் பெண்கள் செய்யும் இந்தத் தொழிலை, ‘விபச்சாரம்’ என்பதற்கு மாறாக ‘பாலியல் தொண்டு’ என்று சொல்லத்தோன்றுகிறது.

இவர்கள், ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கிறார்கள்[அந்த ஒரு நாளில் ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் ஒழுக்க நெறி பின்பற்றப்படுகிறது! ஹி... ஹி... ஹி!!!].

கட்டணம் ‘வெறும்’ ஐயாயிரம்[24 மணி நேரத்துக்கு] ரூபாய் மட்டுமே.

வாடிக்கையாளருக்கு அவர்களே காலைச் சிற்றுண்டி கொடுக்கிறார்கள்.

பகலில், பிரியாணியுடன் சுவையான விருந்து படைத்து, ஒரு முழுநாளுக்கான  உல்லாசத்துக்கு அவரைத் தயார்ப்படுத்துகிறார்கள்.

எனவே, இத்தனைக் கௌரவமாகத் தொழில் செய்யும் இவர்களைப் ‘பாலியல் சேவகிகள்’ என்பதே ஏற்புடைத்தாகும்.


இவர்கள், சம்பாதித்த பணத்தை, அவ்வப்போது தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகிறார்கள்.


இடையிடையே, சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு[தமிழ்நாடு முழுதும் பின்னர் விரிவுபடுத்தப்படக்கூடும்] வந்து தொழிலைத் தொடர்கிறார்கள்.


காவல்துறையால் கைது செய்யப்பட்டுத் தண்டனை அனுபவித்தாலும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இவர்கள் பாலியல் சேவையைத் தொடர்ந்து செய்வது கனிக்கத்தக்கது[பாராட்டத்தக்கது?]


தொழில் தேடி இங்கு[தமிழ்நாடு] வந்த வட நாட்டவரை, ‘வடக்கன்ஸ்’ என்றார்கள் தமிழர்கள். அவர்களால் நம்மவர்களுக்கான வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகச் சொல்லி அவர்களைச் சாடவும் செய்தார்கள்; விரட்டியடிக்கவும் முனைந்தார்கள்.


அரசு அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. 


வடக்கிலிருந்து வரும் இந்த ‘வடக்கச்சிகளால் தங்களின் பாரம்பரியத் தொழில் பாதிக்கப்படும் என்றெண்ணி இங்குள்ள பாலியல் தொழில்காரிகள் அஞ்சுவார்கள் என்பதில் சந்தேகமில்லை; ஒன்றிணைந்து, தெருவில் இறங்கி, “இங்கு வராதீர் வடக்கச்சிகளே! வந்தால் விரட்டியடிப்போம்” என்று முழக்கமிட்டுப் போராடும் நாளும் வரக்கூடும்.


வடக்கிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு[வடக்கன்ஸ்]த் தகுந்த பாதுகாப்பளித்த தமிழ்நாடு அரசு, ‘தொழில் சுத்தம்’ காக்கும் ‘வடக்கச்சி’களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்!


வருகைதரும் ‘வடக்கச்சி’களை இரு கரம் குவித்து வவேற்போம்!


ஹி...ஹி... ஹி!!!

* * * * *

https://www.dailythanthi.com/News/State/if-you-pay-rs-5-thousand-you-will-be-treated-with-a-party-and-a-family-prostitution-again-in-chennai-992630