வியாழன், 30 மார்ச், 2023

கண்ணகி, மார்பகம் அறுத்தது மதுரையை எரிக்க! ‘நங்கிலி’ அறுத்தது?!?!


அன்றையத் திருவாங்கூர் ராஜ்யத்தில் ‘முலக்கரம்’ என்று மலையாளத்தில் அழைக்கப்பட்ட ‘முலைவரி’ பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுமான பெண்களுக்கு விதிக்கப்பட்டதென்பது நாம் அறிந்ததே.

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானங்களில், சாதியில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல் சாதிக்கார ஆண்கள் அல்லது அரசு அதிகாரிகள் முன்னிலையில் தங்களின் மார்பை மறைக்கும் சேலைத் தும்பை[முந்தானை] அகற்றி, மார்பகங்களைக் காட்டி மரியாதையை வெளிப்படுத்தும் முறையும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

நம்மில் பலரும் அறியாத பேரவல நிகழ்வு ஒன்று உண்டு.

‘முலை வரி’ வசூலிக்க வந்த அரசு அதிகாரிகளின் முன்னிலையில், திறந்த மார்பகங்களுடன் நின்ற ‘நங்கிலி’ என்னும் பெண், வரி செலுத்த இயலாத பரிதாப நிலையை எடுத்துரைத்தும், அதிகாரிகள் வரி வசூலிப்பதில் கண்டிப்புக் காட்டியபோது.....


அந்தப் பெண் செய்த செயல் பெண்ணினத்தைக் காலமெல்லாம் கண்ணீர் சிந்த வைப்பது மட்டுமல்ல, ஆண் இனத்தவரை, வெட்கித் தலைகுனிய வைப்பதும் ஆகும்.


நங்கிலி, தான் செலுத்த வேண்டிய வரிக்குப் பதிலாக, வரிவிதிப்புக்குள்ளான தன் மார்பகம் ஒன்றை அறுத்து அதிகாரிகளிடம் கொடுத்தாள்; மரணத்தைத் தழுவினாள்.


பூமி, ஆறு என்று எதையெதையெல்லாமோ பெண்ணாக்கி, தெய்வ நிலைக்கு உயர்த்தி, அவளைத் தாங்கோ தாங்கென்று தாங்கிய அதே ஆடவர்கள்தான், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு இம்மாதிரியான[முலை காட்டல்; வரி செலுத்துதல்] கொடுமைகளை இழைத்து ஆனந்தப் பரவசத்தில் திளைத்திருக்கிறார்கள்.


இவையெல்லாம் வரலாற்றில் இடம்பெற்றவை.


உயர் சாதி ஆடவர் முன்னிலையில், முலை காட்டி நிற்பதோடு, அம்மணமாக முழு உடலையும் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் நிகழ்ந்திருக்கலாம். இது வரலாற்றில் இடம்பெறாதது.


வரலாற்றைத் தோண்டித் துருவி ஆராய்ந்தால் ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்!

* * * * *

{‘இந்து’ பத்திரிகையில் கட்டுரையின் சாரம் இது. இக்கொடுமை, ஆங்கில அரசின் முயற்சியால் பிற்காலத்தில்[19 ஆம் நூற்றாண்டின் இறுதி] தடை செய்யப்பட்டது}.

==================================================================================

<tamil-personalized-digest@quora.com>

==================================================================================

***ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கத்தக்க அதி சுவாரசியக் கதை இது. முகவரியைக் கிளிக்கி வாசியுங்கள்

https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_17.html