வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தின்போது, பிரதமர் மோடி இசாகரில் உள்ள ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மந்திர் மற்றும் குருஜி மகாராஜ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்[ஊடகச் செய்தி].
மந்திரில் இருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக உணர்கிறேன்” என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை அவர் பாக்கியமாகக் கருதவில்லை?]
அவர் கோயில் வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.
“ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மடத்துடன் தொடர்புடைய அனைவரும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்குப் பங்களித்துள்ளனர்” என்று மடத்துடன் தொடர்புடையவர்களைப் பாராட்டினார்.
ஆனந்த்பூர் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை[தியானமாம். அதில் ஐந்து கொள்கைகளாம். நம்புங்கய்யா]ப் பற்றி அவர் பேசினார்.
இந்த இடத்துடன் தொடர்புடைய துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளையும் மரபுகளையும் பிரதமர் பாராட்டினார்.
"நமது இந்தியா, நமது சமூகம், ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இந்தப் பூமிக்கு வந்து[இவர் கடவுளால் அனுப்பப்பட்டு இங்கு வந்தது போல்] சமூகத்திற்கு ஒரு புதிய திசையை[???] வழங்குகிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.
"'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற மந்திரம்... எங்கள் அரசாங்கத்தின் கொள்கை[!?!?!]" என்று உலகறியப் பறைசாற்றியிருக்கிறார்.
ஒரு ‘மந்திரம்’ ஒரு பெரிய நாட்டிற்கான கொள்கையா?
ஒரு மந்திரத்தை நாட்டின் கொள்கையாக அறிவித்த முதல் பிரதமர் உலகில் இவராகத்தான் இருக்கமுடியும்.
இந்த நாட்டின் கதி?!