எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

'சப்கா சாத், சப்கா விகாஸ்'... “இந்த மந்திரம் நம் நாட்டின் கொள்கை” -மோடி!!!

வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி இசாகரில் உள்ள ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மந்திர் மற்றும் குருஜி மகாராஜ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்[ஊடகச் செய்தி].

மோடி இந்த இடத்தை, “அழியாத ஞானத்தை வெளிப்படுத்தும் ஆன்மீக மையம்” என்றார்.

மந்திரில் இருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக உணர்கிறேன்” என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை அவர் பாக்கியமாகக் கருதவில்லை?]

அவர் கோயில் வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

“ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மடத்துடன் தொடர்புடைய அனைவரும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்குப் பங்களித்துள்ளனர்” என்று மடத்துடன் தொடர்புடையவர்களைப் பாராட்டினார்.

ஆனந்த்பூர் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை[தியானமாம். அதில் ஐந்து கொள்கைகளாம். நம்புங்கய்யா]ப் பற்றி அவர் பேசினார்.

இந்த இடத்துடன் தொடர்புடைய துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளையும் மரபுகளையும் பிரதமர் பாராட்டினார்.

"நமது இந்தியா, நமது சமூகம், ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இந்தப் பூமிக்கு வந்து[இவர் கடவுளால் அனுப்பப்பட்டு இங்கு வந்தது போல்] சமூகத்திற்கு ஒரு புதிய திசையை[???] வழங்குகிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற மந்திரம்... எங்கள் அரசாங்கத்தின் கொள்கை[!?!?!]" என்று உலகறியப் பறைசாற்றியிருக்கிறார்.

ஒரு ‘மந்திரம்’ ஒரு பெரிய நாட்டிற்கான கொள்கையா?

ஒரு மந்திரத்தை நாட்டின் கொள்கையாக அறிவித்த முதல் பிரதமர் உலகில் இவராகத்தான் இருக்கமுடியும்.

இந்த நாட்டின் கதி?!