சனி, 12 ஏப்ரல், 2025

அண்ணாமலையை அவமானப்படுத்திய ‘உள்குத்து’ அமைச்சர் அமித்ஷா!!!

ஆகப் பெரிய மூடநம்பிக்கைக் கட்சியினரின் ஆயுட்கால அடிமையான அண்ணாமலை புத்திசாலியோ அல்லவோ, அவர் மிக மிக மிக நல்லவர்; அப்பாவி; சூதுவாது இல்லாதவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

[இத்தனைப் பணிவு எதற்கு அண்ணாமலை?]

அவமானங்களைப் பொருட்படுத்தாமல் ‘பாஜக’ வளர்ச்சிக்காக இவரளவுக்கு இதுவரை எந்தவொரு த.நா. பாஜக தலைவரும் பாடுபட்டதில்லை.

எவரொருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தாலும், இந்த மண்ணில் இக்கட்சி வளரவே வளராது என்பது புரியாத அமித்ஷா, அண்ணாமலையின் தலைவர் பதவியைப் பறித்தார்; இந்திய அளவில் உயர் பதவியொன்றில் அவர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்த அந்த ‘உள்குத்து’ அமைச்சர், தேசியப் பொதுக் குழு உறுப்பினராக அண்ணாமலையை நியமித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு உதவியாளருக்கு[பழைய பெயர் ‘பியூன்’] உள்ள அதிகாரம்கூட இந்த உறுப்பினருக்கு இல்லை என்பது 100% உண்மை.

அ.மலை மட்டும் உறுப்பினர் ஆக்கப்படவில்லை; எச்சில் ராஜா, தமிழிசை, பொன்னார், எல்.முருகன், வானதி என்று ஒரு பெரிய பட்டாளமே இந்த உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாவம் அண்ணாமலை.

‘பாஜக’வின் நம்பர் 2 தலைவர் அமித்ஷாவைவிடவும் வேறு எவரும் இவரை இந்த அளவுக்கு இழிவுபடுத்த இயலாது.

அண்ணாமலைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

* * * * *

https://minnambalam.com/annamalai-get-new-post-in-bjp-when-nainar-become-bjp-president/