எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 27 ஜூன், 2016

தலாய் லாமா!...இவர் வழியில் நாம் செல்லலாமா?

தலைப்பு இதுவாயினும், ‘தலாய் லாமா’ குறித்து ஏதும் எழுதுவது இப்பதிவின் நோக்கமன்று. இன்றைய ‘தி இந்து[27.06.2016]’, இவர் பற்றிய சிறு குறிப்புடன், இவர் உதிர்த்த 15 அரிய கருத்துகளைத் தொகுத்து[வணிக வீதி, மூன்றாம் பக்கம்] வழங்கியிருக்கிறது.
அவற்றில் சில, என்னை வியப்பில் ஆழ்த்தின; மகிழ்ச்சிப்படுத்தின; தலாய் லாமா மீதான பதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. ஒரு மதத்தின்[புத்தம்] தலைவரான இவர் சொன்ன அவை.....

1. கோயில்க[ள்]ளுக்கு அவசியமில்லை. சிக்கலான தத்துவங்கள் தேவையில்லை. நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நம் கோயில். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்.

2. மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், மனிதநேயம் இல்லாமல் வாழ முடியாது.

3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால் நல்லதே. அது இல்லாமலும் உங்களால் வாழ முடியும்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக