எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 27 ஜூன், 2016

தலாய் லாமா!...இவர் வழியில் நாம் செல்லலாமா?

தலைப்பு இதுவாயினும், ‘தலாய் லாமா’ குறித்து ஏதும் எழுதுவது இப்பதிவின் நோக்கமன்று. இன்றைய ‘தி இந்து[27.06.2016]’, இவர் பற்றிய சிறு குறிப்புடன், இவர் உதிர்த்த 15 அரிய கருத்துகளைத் தொகுத்து[வணிக வீதி, மூன்றாம் பக்கம்] வழங்கியிருக்கிறது.
அவற்றில் சில, என்னை வியப்பில் ஆழ்த்தின; மகிழ்ச்சிப்படுத்தின; தலாய் லாமா மீதான பதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. ஒரு மதத்தின்[புத்தம்] தலைவரான இவர் சொன்ன அவை.....

1. கோயில்க[ள்]ளுக்கு அவசியமில்லை. சிக்கலான தத்துவங்கள் தேவையில்லை. நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நம் கோயில். கருணையே தத்துவம். இதுவே என் எளிய மதம்.

2. மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழ முடியும். ஆனால், மனிதநேயம் இல்லாமல் வாழ முடியாது.

3. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால் நல்லதே. அது இல்லாமலும் உங்களால் வாழ முடியும்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக