செவ்வாய், 7 ஜூன், 2016

அய்யோ பாவம் ‘பசி’பரமசிவம்!!! ..........தமிழ்மணம் மன்னித்திடுக.

‘நான் கேள்வியின் நாயகன்’ http://kadavulinkadavul.blogspot.com/2016/06/blog-post_6.html என்னும் தலைப்பில் நேற்று[06.06.2016] புதிய பதிவொன்று எழுதித் தமிழ்மணத்தில் இணைத்தேன்.

நேற்று முழுக்க அது முகப்புப் பக்கத்தில் வெளியாகவில்லை. அத்துடன், தமிழ்மணப் பட்டியலின் இயக்கமும்[பட்டியல் நகரவில்லை. என் கணினியில் மட்டும் இது நேர்ந்திருக்கலாம்?] தடைபட்டிருந்தது. இரவு 11 மணிவரை அதே நிலைதான்.

இன்று[07.06.2016] காலை எழுந்ததும், நகரத் தொடங்கியிருந்த பட்டியலில் தேடியபோது, 7 ஆவது பக்கத்தில் என் பதிவு இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது. 

கிளிக் செய்தபோது, பதிவுக்குப் பதிலாக.....
Sorry!

The Page you were looking for could not be found. The page may have been removed from our Blog. Please go further with below options.

Back    Home Contact என்ற இந்த அறிவிப்பே தென்பட்டது.

பதிவு, கடவுளின் இயக்கம் குறித்தது. பதிவுடன்.......

நண்பர் மகேஷ் அவர்கள் maheshswis@gmail.com எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலையும்[‘காக்கா பிடிக்கத் தெரியாத கர்னாடக முதலமைச்சரும் உதவியாளர்களும்’ என்னும் பதிவு பற்றியது] அதற்கு நான் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் இணைத்திருந்தேன்.

இந்நிலையில், நான் கேள்வியின் நாயகன்’ என்னும் என் பதிவு, என் தளத்திலிருந்து [கடவுளின் கடவுள்]  முற்றிலுமாய் அகற்றப்பட்டுள்ளது. நேற்று, என் கணினியில் தமிழ்மணம் பதிவுப் பட்டியல் நகராமல் நிலைகொண்டிருந்ததும் அறியத்தக்கது].

பதிவுலக நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. இப்பதிவும் நீக்கப்படக்கூடும் என்பதால் மின்னஞ்சல்கள் இத்துடன் இணைக்கப்படவில்லை.

மேற்கண்ட என் பதிவை இணைத்ததால் தமிழ்மணத்தில் நேர்ந்த பாதிப்பிற்கு[?] மிகவும் வருந்துகிறேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.
===============================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக