எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 22 ஏப்ரல், 2024

‘உளறுவாயர்’... அண்ணாமலை மட்டுமல்ல, அண்ணல் மோடியும்தான்!!!


#காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். 

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்” என்றார்#[விகடன் செய்தி].

“அவர்கள்[முஸ்லிம்கள்] இந்தச் செல்வத்தை அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள்[மக்கள்] கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குக் கொடுக்கப் போகிறீர்களா?” என்றும் பேசியிருக்கிறார் மோடி.


தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கும் பங்குண்டு என்று எவரேனும் பேசியிருக்கலாம். பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.


மோடி சொல்வது போல் அவர்கள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை


எனவே,


தோல்வி பயத்தால் மன நிலை பாதிக்கப்பட்டுத்தான் மோடிஜி இப்படிப் பேசினாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.


மன நிலை பாதிக்கப்படவில்லை என்றால்…..


நம்ம ஊர் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையைப் போல் இவரும் ஓர் உளறுவாயர்தான் என்று நம்பத் தோன்றுகிறது!


ஹி… ஹி… ஹி!!!

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modis-muslim-remark-hate-speech-sparks-criticism