எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 22 ஏப்ரல், 2024

இது புத்திமதியா, புத்தி உள்ளவர்கள் பின்பற்றும் வாழ்க்கை நெறியா?

ணவன் மனைவியருள் ஒருவரோ, இருவருமோ தங்களின் துணைக்குத் துரோகம் இழைத்தவராக இருக்கலாம்.

இருந்தாலும்.....

துரோகம் செய்தவர் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினாலோ, துரோகம் நிகழ்ந்ததற்கான சூழல் தவிர்க்க இயலாததாக இருந்தாலோ, இருவரும் இணை பிரியாமல் வாழ்வது சாத்தியம்தான்.


போதிய ஆதாரங்கள் இருந்தும், குற்றம் புரிந்தவர், துரோகமே செய்யவில்லை என்று சாதிக்கும்போதும், “ஆமாம், நான் துரோகிதான், உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று சவால் விடும்போதும் குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறுகிறது!

‘யூடியூப்’இல்.....