அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 8 ஏப்ரல், 2024

வேண்டாம் தலைவர்களின்[தலைவலிகள்] ‘ரோடு ஷோ’! வேண்டும் அழகிகளின் அணிவகுப்பு!!

“தலைவர் வாழ்க” முழக்கங்களுடன் கட்சித் தொண்டர்கள்[காசு கொடுத்து வரவழக்கப்பட்டவர்கள் உட்பட] பின்தொடர, மாலையும் கழுத்துமாக வாயும் சிரிப்புமாக, வீதியின் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் குடிமக்களை இரு கரம் குவித்துக் கும்பிட்டுக்கொண்டே கட்சித்தலைவர்கள் வாகனப் பவனி வருவதைத்தான் இப்போதெல்லாம் ‘ரோடு ஷோ’ என்கின்றன ஊடகங்கள்.

இந்த ‘ரோடு ஷோ’ தலைவர்களுக்கு[வேட்பாளர்கள்] வாக்குகளை அள்ளித் தருமா என்றால், கிள்ளித் தருவதுகூட இல்லை என்பதே உண்மை.

காரணம்.....

“அதென்ன ரோடு ஷோ? போய்த்தான் பார்ப்போமே” என்று வேடிக்கை பார்க்க வந்தவர்களில் பலரும், போலிப் புன்னகையுடன் ‘ஷோ’ காட்டும் தலைவரை ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் பார்த்துச் சலித்தவர்கள் என்பதால், சற்று நேரம் நின்றுவிட்டு வெறுப்புடன் வீடு திரும்புகிறார்கள்[பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டவர்கள் நீங்கலாக].

தலைவருக்கு ஓட்டுப் போடுவது பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை என்பதால், லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்து ரோடு ஷோ நடத்துபவர் பெறும் பயன் ஏதுமில்லை; வாக்குகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.

ஆகவே, இனியேனும் ‘ரோடு ஷோ’ வரும் தலைவர்கள்[வேட்பாளர்கள்] வாகனத்தில் உடன் பயணித்து ‘ஷோ’ காட்டும் குட்டித் தலைவர்களுக்குப் பதிலாகத் தங்களைச் சுற்றி வயசுக் குட்டிகளை நிறுத்திக் கை அசைக்க வைக்கலாம்.

இளம் குட்டிகளின் அசைவுகளை[கை அசைவு... ஹி... ஹி... ஹி!!!]ப் பார்த்து ஜொள்ளுவிடும் ‘ஷோக்கு’ப் பேர்வழிகளில் சிலரின் வாக்குகளேனும் தலைவருக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்.

ஆகவே, தலைவர்களே, வேட்பாளர்களே,

உங்களின் ‘ரோடு ஷோ’க்களை இனி கவர்ச்சிக் கன்னிகளின்  அணிவகுப்புகளாக மாற்றிடுவீர்!

                                             *   *   *   *   *

அறிவிப்பு:

கோவையில் மோடி ‘ரோடு ஷோ’, திருச்சியில் நட்டா ‘ரோடு ஷோ’, நாமக்கல்லில் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’, மோடியின் சென்னை ‘ரோடு ஷோ’[நடக்கவிருப்பது] என்றிப்படி, பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த ‘ரோடு ஷோ’க்களே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டின என்பது அறியத்தக்கது.