அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 18 ஏப்ரல், 2024

“உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது”... நாறவாயன் அண்ணாமலை!!!

சின்னவதம்பசேரி கிராமத்தில் ஓட்டுச் சேகரித்த அண்ணாமலையிடம் பெண் ஒருவர், “நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். அப்படி இருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு இந்தக் காட்டான் அண்ணாமலை, "உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்” என்று அடாவடித்தனமாய்ப் பதில் சொல்லியிருக்கிறான்[மாலைமலர்&பிற ஊடகங்கள்].

நீட் தேர்வால் எந்த வகையிலெல்லாம் தமிழ் மாணவர்களுக்குப் பயன் விளைகிறது என்பதற்கு ஆதாரம் காட்டலாம்; குழந்தைகள் உயிரைப் போக்கிக்கொள்வது தவறு என்று அறிவுரை சொல்லலாம். இதற்கு மாறாக, “உயிரே போனாலும் நீட் ரத்து செய்யப்படாது” என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிடுகிறானே இந்தத் தற்குறி, இவன் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது யாருடைய உயிரை?

தமிழ்ப் பிள்ளைகளின் உயிர் என்றால், இந்தத் தமிழ் மண்ணின் மக்கள் இவனை இங்கு நடமாடவிடுவதே தவறு. “தொலைதூர, மனித நடமாட்டம் இல்லாத தீவுக்கு ஓடிப்போய்ப் பிழைத்துக்கொள்” என்று விடட்டியடிக்க வேண்டும்.

பிள்ளைகளைக் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றால், வேறு யாருடைய உயிரைக் குறிப்பிடுகிறான்?

மண்ணுக்குப் பாரமாகச் சுற்றித் திரியும் இவனுடைய உயிரையா, பச்சைப் பொய்களின் உறைவிடமான இவனுடைய தலைவன் மோடியின் உயிரையா?

இரண்டில் எதுவாயினும் இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. “பீடை[கள்] ஒழிந்தது[ன]” என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் மக்கள்.

பொது மக்கள் முன்னிலையில் எதைப் பேச வேண்டும், எதையெல்லாம் பேசக்கூடாது என்பதுகூடத் தெரியாத இந்த ஆறறிவுச் சூன்யனை இவனின் தலைவன் மோடி தமிழ்நாடு ‘பாஜக’ தலைவனாக நியமித்தது அந்த மனிதனின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறதா, அது இன்மையை வெளிப்படுத்துகிறதா?!

https://www.maalaimalar.com/news/state/we-will-not-cancel-neet-even-if-we-die-annamalai-speech-during-the-election-campaign-713786