அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 3 ஏப்ரல், 2024

காரியவாதி மோடி! அநாகரிகம் தவிர்த்த முத்தரசன்!!

காங்கிரசும் தி.மு.க.வும்தான் கச்சத்தீவை ‘ஸ்ரீலங்கா’வுக்குத் தாரை வார்த்ததாகக் குற்றம் சாட்டுவதன் மூலம், முக்கிய எதிரிகளான அவர்களை[2024 தேர்தல்]த் துவம்சம் செய்ய ஒரு வலுவான ஆயுதத்தை ஏந்தியிருக்கிறார் நம் இந்நாள் பிரதமர் மோடி.

காங்கிரசாரும் திமுகவினரும் குற்றவாளிகள்தான் எனினும், நாட்டை ஆளும் கடமை தவறாத உத்தமத் தலைவனான மோடியைப் பார்த்து.....

“கச்சத் தீவை மீட்டெடுப்போம்” என்று தேர்தல் நேரத்தில் வெற்று முழக்கம் செய்யும் நீர் உம்முடைய கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் இதைச் செய்யாதது ஏன்?” என்று ஒட்டுமொத்தத் தமிழர்களும் கேட்கிறார்கள்.

வாக்குக்காக வாய் கிழிய ‘மீட்புக் கோஷம்’ எழுப்பும் இந்த வேடதாரி மோடி மீது கடும் வெறுப்புக்குள்ளான தீவிர இனப்பற்றாளர்கள், “பத்து ஆண்டுகளாக யாருக்கெல்லாம் ..... ..... .....கொண்டிருந்தார்” என்று கேட்க நினைத்திருப்பார்கள்; ஆனால், கேட்கவில்லை.

காரணம், தமிழர்கள் பண்பட்ட மனம் படைத்தவர்கள்.

பொதுவுடைமைக் கட்சித் தலைவரான முத்தரசன் அவர்களும் ஒரு தமிழர் என்பதால்,  மற்றவர்கள் கேட்காமல் தவிர்த்த அந்தக் கேள்வியை, “மோடி யாருக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தார்”[படத் தலைப்பு] என்று கொஞ்சமும் பண்பாடு பிறழாமல் கேட்டிருக்கிறார்.

முத்தரசன் அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும்.