எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

புதன், 31 டிசம்பர், 2025

“தமிழ் மீது உலகமே அன்பு செலுத்துகிறது”... மோடியின் வஞ்சகப் புகழ்ச்சி!!!

தமிழ் மொழி மீது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்று ‘புகழ் மாரி’ பொழிவது இந்தப் பொய்மை விளம்பி[மோடி]க்கு வழக்கமாகிப்போனது.

உலகம் விரும்பும் தமிழை இவர் மட்டும் விரும்பவில்லை என்னும் உண்மை கீழ்க்காணும் ஐ.நா.வின் அறிக்கை[புத்தாண்டு வாழ்த்து> நகல் பதிவு] அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போலித் தமிழ்ப் பற்றாளன் விரும்பியிருந்தால்.....

இந்திய மொழியான இந்தியுடன், ஐ.நா.மன்றம் தமிழிலும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும்[இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை இந்த மோசடியாளனின் அரசு ஐ.நா.சபைக்குத் தெரியப்படுத்தவே இல்லை].

வாயளவில் தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசி, வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அள்ளி, அவர்களை அடிமைகளாக்கத் திட்டமிடும் ஓர் இந்திய அரசியல்வாதி இந்த நாட்டில் பிறந்ததில்லை.

இமாலயப் பொய்யன்!