எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 31 டிசம்பர், 2025

“தமிழ் மீது உலகமே அன்பு செலுத்துகிறது”... மோடியின் வஞ்சகப் புகழ்ச்சி!!!

தமிழ் மொழி மீது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்று ‘புகழ் மாரி’ பொழிவது இந்தப் பொய்மை விளம்பி[மோடி]க்கு வழக்கமாகிப்போனது.

உலகம் விரும்பும் தமிழை இவர் மட்டும் விரும்பவில்லை என்னும் உண்மை கீழ்க்காணும் ஐ.நா.வின் அறிக்கை[புத்தாண்டு வாழ்த்து> நகல் பதிவு] அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போலித் தமிழ்ப் பற்றாளன் விரும்பியிருந்தால்.....

இந்திய மொழியான இந்தியுடன், ஐ.நா.மன்றம் தமிழிலும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும்[இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை இந்த மோசடியாளனின் அரசு ஐ.நா.சபைக்குத் தெரியப்படுத்தவே இல்லை].

வாயளவில் தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசி, வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அள்ளி, அவர்களை அடிமைகளாக்கத் திட்டமிடும் ஓர் இந்திய அரசியல்வாதி இந்த நாட்டில் பிறந்ததில்லை.

இமாலயப் பொய்யன்!