எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 20 ஆகஸ்ட், 2025

30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி நீக்கம்! 30 நாட்கள் உள்நாட்டில் இல்லாமலிருந்தால்?!

‘குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் ரத்து’ -கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில், இது தொடர்பான புதிய மசோதா இன்று மக்களவையில் தாக்கல்https://www.dinakaran.com/news/criminalcase_prison_primeminister_chiefminister_ministers_newbill/ 03:11 PM Aug 20, 2025.

முழு மனதுடன் வரவேற்கத்தக்க மசோதா இது.

தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!