எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 20 ஆகஸ்ட், 2025

30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி நீக்கம்! 30 நாட்கள் உள்நாட்டில் இல்லாமலிருந்தால்?!

‘குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் ரத்து’ -கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில், இது தொடர்பான புதிய மசோதா இன்று மக்களவையில் தாக்கல்https://www.dinakaran.com/news/criminalcase_prison_primeminister_chiefminister_ministers_newbill/ 03:11 PM Aug 20, 2025.

முழு மனதுடன் வரவேற்கத்தக்க மசோதா இது.

தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!