எனது படம்
வாலிப வயதினர் குற்றம் புரிந்தால் வயதைக் காரணம் காட்டி சமூகம் அவர்களை மன்னிப்பதுண்டு. அதையே ஒரு வயோதிகர் செய்யும்போது வசவு மழை பொழியும். எந்தவொரு அகவையராயினும் அவ்வப்போது தம் வயதை நினைவுகூர்ந்தால், வயதுக்கு ஒவ்வாத குற்றங்களில் அவர் ஈடுபடுவதைத் தவிர்க்க அது உதவும்!

சனி, 24 ஜனவரி, 2026

மோடி பிரதமரா ‘நாலாந்தர’ அரசியல்வாதியா?!?!?

//தொடர்ந்து பேசிய மோடி, “தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என்பது குழந்தைக்கும்[!?!?!]கூடத் தெரியும்[தெருவில் திரியும் சொறி நாய்கள், பன்றிகள், எருமைகள் போன்றவற்றிற்கும் தெரியும் என்று பேசியிருக்கலாம்> ஆறறிவுள்ள ஒரு மனிதனின் பேச்சா இது?]. திமுக ஒரு CMC கவர்ன்மென்ட். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர்” என்றார்//***

[படம்> உதவி: இணையம்]
மோடி ஏதோ ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் படிப்பறிவில்லாத ஆதிவாசியல்ல; ஏக இந்தியாவை ஆளும் ஏகப்பட்ட அதிகாரம் படைத்த பிரதமர்.

தமிழ் நாடெங்கும் ஊழல் பரவிக்கிடப்பதும், குற்றங்கள் பெருகியிருப்பதும், போதை மாத்திரை விற்பனைத் தொழில் அதிகரித்திருப்பதும்[CMC] உண்மை என்றால், தமிழ்நாட்டை ஆளும் ‘தி.மு.க.’ அரசை இவர் கலைத்திருக்கலாமே?

அதைச் செய்யவிடாமல் இந்த அவதாரியை[“நான் கடவுளின் அவதாரம்” என்று புளுகிய குற்றத்தை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாதது உலக அதிசயங்களில் ஒன்று]த் தடுத்தது யார்? யாரெல்லாம்? எது? எதுவெல்லாம்?

கலைத்த பிறகு நடைபெறும் தேர்தலில் 0005% ஓட்டுகூடப் பெற இயலாது[தனித்து நின்றால்] என்பதை இவர் சந்தேகமறப் புரிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.

மனம்போனபடியேல்லாம் தி.மு.க. அரசு[ஆட்சியில் நிறைகளுடன் குறைகளும் உள்ளன> இவர் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கிறார்] மீது குற்றங்கள் சுமத்தி[இதற்கென்றே ஆளுநன் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருக்கிறார் ஓர் அடாவடிப் பேர்வழி] அதற்கு மக்களிடமுள்ள கணிசமான செல்வாக்கைக் குறைத்த பிறகு தேர்தலைச் சந்திப்பது இவரின் திட்டம்.

மேலும், போதைப் பொருள் வணிகம் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதல்ல; நாடெங்கும் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பது. அதைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்குண்டு.

மத்திய அரசு எனப்படும் ஒன்றிய அரசின் முதலாளி மோடிதான். தன் கடமையைச் செய்யத் தவறும் இவரும் தண்டனைக்குரியவர்தான். இவர் தண்டிக்கப்படுவது எப்போது?

அது எப்போதேனும் நடக்கலாம்; நடக்காமலும் தடுக்கப்படலாம்.

ஆனாலும், பிரதமர் பதவி என்பது பெரிதும் மதிக்கப்படுதற்குரியது.

அந்த மதிப்புக்குப் பங்கம் நேராமல் காப்பது இவருக்குரிய கடமைகளில் ஒன்று.

இதை மறவாமலிருப்பது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல மோடிக்கும் நல்லது.

* * * * *

***https://www.puthiyathalaimurai.com/tamilnadu/pm-modi-criticizes-dmk-as-a-cmc-government