எனது படம்
எந்தவொரு கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், இந்நாளில் அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

சனி, 24 ஜனவரி, 2026

“நானும் தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்”... எடப்பாடி! எப்படி வளர்த்தார்? இப்படி...

நாங்கள்[எடப்பாடி&தினகரன்] ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே அது போய்விட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெவித்துள்ளார்[ஊடகச் செய்தி***]

இன்னும் கொஞ்சம் சொல்ல நினைத்ததையும்[கீழ்க்காண்பது] அவர் சொல்லியிருக்கலாம்.

ஜெயலலிதா வளர்த்ததால்தான், அண்ணன் தம்பிகளாக நாங்கள் காலமெல்லாம் ஒருவர் மீது ஒருவர் பாச மழை பொழிந்து வளர்ந்தோம்.

ஒன்றாகத்தான் ஊர் சுற்றுவோம்; ஒன்றாக ஒரே தட்டில்தான் சாப்பிடுவோம்; ஒரே கட்டிலில்தான் இறுகக் கட்டிப்பிடித்துப் படுத்துத் தூங்குவோம்; ஒன்றாகத்தான் கழிப்பறை(கக்கூஸ்)யில் ‘ஆயி’ போவோம்.

தெய்வத் தாயை[ஜெயலிலிதா]ப் பார்க்கும்போதெல்லாம், ஒன்றாகவே குப்புறக் கவிழ்ந்து விழுந்து, அன்னையின் பாதக் கமலம் தொழுது ஆசீர்வாதம் பெறுவோம்.

பதவி ஆசையும் பண ஆசையும் எடப்பாடியை எப்படியெல்லாமோ பேசத்தூண்டுது! ஹி... ஹி... ஹி!!!

======================

***https://www.toptamilnews.com/thamizhagam/admk-edappadi-palanisamy-press-meet/cid18153682.htm