ஞாயிறு, 25 ஜனவரி, 2026

பெண்களின் நகை மோகம்... ‘நறுக்’ வைத்த உத்தரகாண்ட் கிராமம்!

//திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி[திருமணம் ஆனவர்கள்] ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம்; ஆரம், நெக்​லஸ் போன்ற விலை உயர்ந்த தங்க நகைகளைப் போட்​டுக்கொண்டு பெண்கள் தங்​கள் பணக்​காரத்​தனத்தை காட்​டு​வது கூடாது.

காரணம், தங்​கத்​தின் விலை நாளும் அதி​கரிப்பதோடு, ஏழைகளும் இந்த ஆடம்பரத்துக்கு அடிமைகளாகிக் கடனாளிகளாக ஆகிறார்கள்.

திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அதைத் தங்களின் பணக்​காரத்​தனத்தைக் காட்​டும் மேடை​யாக மாற்​றக் கூடாது. சமூகத்​தில் சமத்​து​வம் நிலவுவது அவசியம்//

உத்​த​ராகண்ட் மாநிலம், ‘ஜான்​சர் பவார்’ பகு​தி​யில் உள்​ள 'கந்​தார் 'கிராமத்துப் பெரியவர்கள் கூடி, மேற்கண்ட முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுகிறவர்களுக்குரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

இங்கெல்லாமும் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நம் பெண்கள் வரவேற்பார்களா, போர்க்கொடி தூக்குவார்களா?

https://www.hindutamil.in/news/india/1381083-women-banned-from-wearing-gold-jewellery-at-weddings-in-uttarakhand-village.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwobnZBA&utm_content=rundown#google_vignette