பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 18 மார்ச், 2019

பேய்களை விரட்ட.....

இன்றைய[21.03.2018] பத்திரிகைச் செய்தியின்படி, முச்சந்தியில் கொட்டப்படும் பூஜைப் பொருட்களைப் பார்த்து மக்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது.

மக்களே,

சாந்தி கழித்தல் என்னும் பெயரில் இவ்வாறு கொட்டப்படும் பூஜைப் பொருட்களைப் பார்த்து அஞ்சி நடுங்குவது பேய்கள்தான். காத்து, கருப்புகளை விரட்டத்தான் இம்மாதிரிப் பூஜைகளை மாந்திரீகர்களைக் கொண்டு நம் சகோதரர்கள் செய்கிறார்கள். மனிதர்களாகிய நாம் அஞ்சத் தேவையில்லை.

இன்னும் சொல்லப்போனால்.....

கருப்பு மை தடவிய எலுமிச்சை, சிவப்புப் பொடி, வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை, முச்சந்தி, நாற்சந்திகளில் கொட்டுவதோடு அருகில் சுடுகாடு, இடுகாடு போன்றவை இருந்தால் அங்கேயும் கொட்டலாம். அங்கு கொட்டமடிக்கும் அத்தனை பேய்களும் மாயமாய் மறைந்துவிடும்.

இச்செய்தியை உங்களின் தலையாய கடமையாகக் கருதி அண்டை அயல் மக்களிடமும் பரப்புக.

வாழ்க மக்கள் கூட்டம்! ஒழிக பேய்க் கும்பல்!!                                          இப்படிக்கு,
                                                                                                                          உங்கள் கூமுட்டை
=======================================================================

10 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே...
    தங்களது புதிய தளத்துக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தொடர்ந்து பயமுறுத்துங்கள் (எழுதுங்கள்)

    அன்புடன்
    கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
  2. வடக்கே இப்படி முச்சந்தியில் வைத்து வழிபடுபவர்கள் நிறையவே உண்டு. குறிப்பாக ஹோலி முடிந்த அடுத்த வாரம், பீஹார் மாநிலத்தவர்களில் ‘சட்’ பூஜா சமயம் என நிறைய பேர் இப்படி முச்சந்தி பூஜைகள் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு