எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

பிரபஞ்சப் பொய்யர்கள்!!!

நித்தியானந்தாவின், மேலே இடம்பெற்ற பொய்யுரையைக் கண்டித்தும் கிண்டலடித்தும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கதுதான். ஆயினும்.....

சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதியை, இட்டுக்கட்டிய கதைகளின் மூலம் கடவுள் ஆக்கும் முயற்சியில் சில வார இதழ்களும் நாளிதழ்களும் ஈடுபட்டுள்ளதை நோக்கும்போது நித்தியின் பொய்யுரையை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக