எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

பிரபஞ்சப் பொய்யர்கள்!!!

நித்தியானந்தாவின், மேலே இடம்பெற்ற பொய்யுரையைக் கண்டித்தும் கிண்டலடித்தும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கதுதான். ஆயினும்.....

சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதியை, இட்டுக்கட்டிய கதைகளின் மூலம் கடவுள் ஆக்கும் முயற்சியில் சில வார இதழ்களும் நாளிதழ்களும் ஈடுபட்டுள்ளதை நோக்கும்போது நித்தியின் பொய்யுரையை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக