எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 6 ஜூலை, 2019

இந்தி 39%.....பிற இந்திய மொழிகள் 51%

அண்மையில் நடந்து முடிந்த இந்திய நாட்டின் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், பதவியேற்பதற்குத் தேர்வு செய்த மொழி பற்றிய விவரத்தை இன்றைய தினத்தந்தி[06.07.2019] நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இந்தி மொழியில் பதவி ஏற்றவர்கள் 39% மட்டுமே. ஆங்கிலத்தில் 10 பேர். இதர இந்திய மொழிகளில் பதவியேற்றவர்கள் 51% ஆவர்.

51% விழுக்காடு எண்ணிக்கையிலான மக்களவை உறுப்பினர்கள் ஆற்றிட வேண்டிய தலையாய கடமைகள்.....

*நடுவணரசு இந்தியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துதல்.

*ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழிகளையும்[இந்தி உட்பட] தொடர்பு மொழியாக்குதல்.

தத்தம் தாய்மொழிமீது பற்றுக்கொண்ட உறுப்பினர்கள் தாமதம் சிறிதுமின்றி, ஒருங்கிணைந்து செயல்படுதல் உடனடித் தேவையாகும். உரிய முறையில் ஒத்துழைப்புத் தருவது மாநில மொழிகளில் வெளியாகும் அனைத்து ஊடகங்களின் கடமையாகும்.

நன்றி: தினத்தந்தி[06.07.2019] நாளிதழ்
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக