எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

சனி, 10 ஜனவரி, 2026

"ஆண்களும் நாய்களும் ஒன்று”... நடிகை ஸ்பந்தனாவுக்கு ஆயிரம் கோடி வந்தனங்கள்!!!

 

மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].

இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.

இந்த நடிகைக்கு ஓர் ஆண்மகனாக நம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

இந்த அடாவடித்தனமான விமர்சனத்திற்காக இவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது நீதிப் ‘பெரும் பேரரசர்’ சுவாமிநாதன் போன்ற நீதிபதிகளின்(ஆண்கள்) கடமை என்றாலும், அவர்கள் தாங்களும் ஆண் வர்க்கத்தினரே என்பதை மனதில்கொண்டு, இவரைக் கைது செய்து விசாரித்து, இவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

இவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து அறிந்துகொள்ளவும் பேரார்வத்துடன் காத்திருக்கிறோம்.

தண்டனை எதுவாயினும், பெண்ணின வரலாற்றிலேயே மிக மிகத் துணிச்சலான நடிகையாக அறியப்படும் இவரை மனதாரப் பாராட்டுகிறோம்.

நடிகை திவ்யா பந்தனாவுக்கு நம் ஆயிரம் கோடி வந்தனங்கள்! ஹி... ஹி... ஹி!!!