எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 21 டிசம்பர், 2022

ஆணின் ‘விந்தணு’வில் தோன்றியதா பிரபஞ்சம்!?!?!?

‘உயிர்களின் தோற்றம்’ குறித்து, மூன்று முன்னணி மதங்களும் மனம்போன போக்கில் கதை திரித்திருக்கின்றன. அவற்றைப் பதிவின் இறுதியில் வாசிக்கலாம். 


முன்னதாக, ‘பிரபஞ்ச[உயிர்கள்]த் தோற்றம்’ பற்றிப் பண்டைய எகிப்தியர்களிடையே வழங்கிய ஒரு சுவையான கதை:

#எகிப்தியப் புராணங்களின்படி முதல் எகிப்தியக் கடவுளான ஆடன் சுய இன்பத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. எனவே, சுயஇன்பம் பண்டைய எகிப்தில் புனிதமானதாகக் கருதப்பட்டது[சுய இன்பம் செய்த ஆடனுக்குக் கோயில் கட்டி விழாக்கள் எடுத்திருப்பார்களோ?!]. 

கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகப் ‘பாரோக்கள்’[?] மக்களின் முன்பு நைல் நதியில் சுயஇன்பம் செய்தனர். பாரோக்களைத் தொடர்ந்து மற்ற ஆண்களும் நைல் நதியில் சுயஇன்பம் செய்தார்கள்# 

அன்றைய எகிப்தியர் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்:

*பண்டைய எகிப்தில் திருமணச் சடங்கென்று எதுவுமில்லை. பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிவிட்டுத் தாங்கள் விரும்பும் ஆணின் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கிவிடுவார்கள். 

*விவாகரத்துச் செயல்முறை மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. தம்பதிகளில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறினாலே இருவரும் விவாகரத்துச் செய்ததாக அர்த்தம்.

*ஆண், பெண் இருவரும் திருமணம் ஆகாதவராக இருக்கும்பட்சத்தில் திருமணத்துக்கு முந்தைய உடலுறவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல் வேண்டும். விபச்சாரம் மன்னிக்க முடியாத குற்றமாக இருந்தது. அதற்கு மரண தண்டனைகூட வழங்கப்பட்டது.

*அவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்பினர்; இறப்புக்குப் பிறகு ஆன்மாக்கள் தங்கள் உடலைத் தேடும் என்றும் நம்பினார்கள். 

எனவே, ஆன்மாக்கள் தத்தம் உடல்களை அடையாளம் காண்டுகொள்ள வசதியாக, ஒவ்வொரு மம்மியிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினர்கள். https://tamil.boldsky.com/insync/pulse/unknown-facts-about-the-love-life-of-ancient-egyptians-in-tamil/articlecontent-pf269033-036498.html

உயிர்களின் தோற்றம்:

*கிறிஸ்தவ மதம்:

முதல் இரண்டு நாட்களில் பகல், இரவு, வானம், பூமி ஆகியவற்றையும்[பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாட்களைக் கணக்கிட்டது எப்படி?!], மூன்றாம் நாளில் புல், பூண்டு, மரஞ்செடிகொடி ஆகியவற்றையும், நான்காம் நாளில் விலங்குகளையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறப்பன ஆகியவற்றையும் படைத்தார் கடவுள் என்கிறது கிறித்தவ மதம்.

ஏழாம் நாளில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

*இஸ்லாம் மதம்:

முதல் இரண்டு  நாட்கள்... நீர், காற்று, பூமி.

3ஆம் நாள்... கடல்வாழ் உயிரினம், ஊர்வன முதலானவை.

4ஆம் நாள்... ஜான் என்னும் தேவதை[?]

5, 6ஆம் நாட்களில்... முதல் மனிதன் 'ஆதாம்'; முதல் பெண் 'ஏவாள்'.

*இந்து மதம்:

பரமாத்மாவால் படைக்கப்பட்ட 'பிரஹிமா[பிரம்மா]' ஒரு பிரஹ்ம ஆண்டு[16 லட்சம் கோடி ஆண்டுகள்]வரை வாழ்ந்து மானிடர், விலங்கு, பறவை முதலான உயிரினங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படைத்தார்.

===========================================================================

உயிரும் மயிரும்!!!

தோன்றுவதும் அழிவதுமாகப்  பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில், நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோமே, அது ஏன் என்று எண்ணி எண்ணி மயங்கி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை.....

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் இன்றியமையாத் தேவைகளாகும்.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி, குறிப்பாக, மனித உயிர்களின் உருவாக்கம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ‘உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, இயங்குவதற்குரிய ஓர் உடம்பைப் பெற்றுப்[இதைத்தான் உயிர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்] பின்னர் இந்த உடம்பு அழியும்போது, அதன் உள்ளே இருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் உயிரும் இல்லாமல்போகிறது.

ஆக, அணுக்களால் ‘உயிர்’ எனப்படும் ‘உடம்பு’ உருவாகிப் பின்னர் அழிவதென்பது, ஏறத்தாழ அணுக்களால் ஒரு மயிர் உருவாகி அழிவதைப் போன்றதுதான்.

எனவே, உடம்பைத் தவிர்த்து, உடம்புக்குள் உயிர் என்றோ, ஆன்மா என்றோ எந்தவொன்றும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம்!
=========================================================================