எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 8 டிசம்பர், 2025

இப் பகிர்வு ‘நீதிப்பேரரசர்’ ஜி.ஆர்.சாமிநாதன் பார்வைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது!

மிகப் பெரும்பான்மை மக்களை[மெத்தப் படித்துச் சட்டத்திட்டங்களை அறிந்தவர்கள் உட்பட] எவ்வாறெல்லாமோ ஆட்டிப்படைத்துப் பெரும் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை, சாமானியர்கள் சாடி எழுதினால் கண்டுகொள்வாரில்லை.

ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாகிப் பலராலும் அறியப்பட்டவர்கள் அவற்றைக் கண்டித்தால், அது மிக எளிதாக மக்களைச் சென்றடையும்.

நாளிதழில் வெளியான, மிகு மதிப்பிற்குரிய ஒரு முன்னாள் நீதிபதியின் இது குறித்த உரை[நகல் பதிவு] இங்கே பகிரப்படுகிறது, கணிசமான அளவிலேனும் இது முட்டாள்களைத் திருத்தும் என்னும் நம்பிக்கையுடன்.


ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தேனாறும் பாலாறும் ஓட 11,000 ஆண்டுகள் அயோத்தியை ஆண்டானா ராமன்!?!?!

//தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறையக் கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்//[இந்து தமிழ்*]

நாகேந்திரனாரிடம், ராமன் குறித்த பல சந்தேகங்களில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறோம்.

*ராமன் திரேதா யுகத்தில் 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தான் என்கிறார்கள் அயோத்தி ராமனின் அடிமைகள். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாற்று நிகழ்வுகளுக்கே போதிய ஆதாரம் இல்லாத நிலையில் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இவன் பிறந்தான் என்பதற்கு உரிய ஆதாரங்களைப் பட்டியலிடுங்கள் நயினாரே. இவன் எப்படி ஆட்சி புரிந்தான் என்பதை ஆராய்வது அப்புறம்.

*வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8, சுலோகம் 12ஐ ஆதாரமாகக் காட்டி, ராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தான் என்னும் செய்தி ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது[http://www.ttamil.com/2020/03/blog-post_3.html]. இதை மறுப்பதற்கான ஆதாரம் ஏதும் உம்மிடம் உள்ளதா?

*11,000[பதினோராயிரம்] ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் கதைத்திருக்கிறார்கள் புளுகர்கள். 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பாகட்டும் பின்னராகட்டும் ஒரு மனிதன்[கடவுள் அவதாரம் என்னும் கதையெல்லாம் வேண்டாம்] இத்தனை ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா என்பது பற்றியும் சிந்தியும். ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதென்றால் ராம ராஜ்ஜியம், லட்சுமணன் ராஜ்ஜியம் என்று இனியும் உளறாதீர்.

*உம்முடைய ஆறு அறிவுகளையும் பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க இயலுமா என்று யோசியும் நயினாரே.

தேவைப்பட்டால் ராமன் ஆட்சிபுரிந்து சாதித்துக் கிழித்தவை பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/nainar-nagenthran-slams-dmk?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwjObsBA&utm_content=rundown

அன்று நிகழ்ந்த ‘அந்த’த் தவறுதான் இன்று சங்கிகளின் ஆதிக்கத்திற்கு வழிகோலியது!

ங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பாடுபட்ட தலைவர்களில் பலரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

காந்தி தீவிர ராமபக்தர். ராஜாஜியும் கடவுள் பக்தரே.

சர்தார் வல்லபாய்ப் படேல் பகுத்தறிவாளர் & மதச்சார்பற்றவர் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.

ஜவகர்லால் நேரு மட்டுமே வாழ்நாளெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவராக, அதாவது நாத்திகராக வாழ்ந்தவர்.

மேற்கண்டவர்களும் பிற தலைவர்களும் முழுக் கவனத்தையும் நாடு சுதந்திரம் பெறுவதில் செலுத்தினார்களே தவிர, இந்த நாட்டு மக்களை ஆட்டிப்படைத்த மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் எள்ளளவும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

ஆகச் சிறந்த பகுத்தறிவாளரான நேரு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் மூடநம்பிக்கை ஒழிப்பில் கவனம் செலுத்தாத நிலையில், போராட்டங்களில் பங்கு பெற்ற பெரியார் மட்டுமே மூடநம்பிக்கை ஒழிப்பில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

இடைக்காலத்தில் புற்றீசலாகப் பெருகிய புராணங்களாலும் இதிகாசங்களாலும், மக்கள் மனங்களில் வேரூன்றிவிட்ட மூடத்தனங்களை ஒழிப்பதில் பெரியாரால் ஓரளவுக்கு மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

‘ஈவெரா’ பெரியாரைப் போல இன்னும் சில பெரியார்களேனும் இந்த நாட்டில் உருவாகியிருந்திருந்தால், மக்களில் பெரும்பான்மையோரை மூடநம்பிக்கைகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுவித்திருப்பார்கள்.

இந்தியாவிற்கான கேடுகாலமோ என்னவோ அது நிகழவில்லை.

அது நிகழாததால், புராணக் கதைகளில் இடம்பெற்றுள்ள மாந்தர்களையே கடவுள்கள் ஆக்கி, அவர்களுக்குக் கோயில்கள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும், மதவெறியைத் தூண்டியும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்து, சங்கிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்; இன்றளவும் அதைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கம்பெற்றால், அல்லது ஆக்கப்பட்டால் மட்டுமே சுயநலச் சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிப்பது சாத்தியமாகும். 

மோடி காட்டில் மழை! அது 2047வரை தொடர்ந்து பெய்யும்?

சனி, 6 டிசம்பர், 2025

”சாமியே சரணம் ஐயப்பா”... அவனின் ஆபாசக் கதை அறியாத அப்பாவிப் பக்தர்களுக்கு...

லை அலையாய்ச் சபரிமலை நோக்கிப் பக்தர்கள் பயணிப்பதும், அவ்வப்போது[அடிக்கடி?] வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, சிலரோ பலரோ மரணத்தைத் தழுவுவதும் வழக்கமாகிவிட்ட நிகழ்வாகும்.

காரணம், அவர்கள் ஐயப்பனின் பிறப்பு குறித்து அறிந்துகொள்ளாமலோ, அது குறித்துச் சிந்திக்காமலோ இருப்பதுதான். 

கதை தெரிந்தால் அவர்களில் சிலரேனும் திருந்துவார்கள் என்னும் நப்பாசையில் அது இங்குப் பதிவு செய்யப்படுகிறது[கதை தெரிந்தும் சிந்தித்துத் திருந்தாத செம்மறிக் கூட்டம் நமக்கு ஒரு பொருட்டல்ல].

கதை:

ரக்கன் ஒருவன்[பஸ்மாசுரன்] சிவபெருமானை வழிபட்டு ஆண்டுக்கணக்கில் தவம் இருந்தான்.

தவத்தை மெச்சிய அப்பாவிப் பரமசிவன், “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, “நான் யார் தலையில் கை வைத்தாலும் அது வெடித்துச் சிதற வேண்டும்” என்று அவன் கோரிக்கை வைக்க, இந்தச் சாமியும் அந்த வரத்தைக் கொடுக்க, சோதித்துப் பார்க்கிறேன்” என்று சொல்லி, இவரின் தலையில் கைவைக்க முயன்றான் அரக்கன்.

தன் தவற்றைத் தாமதமாகப் புரிந்துகொண்ட இவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள அண்டவெளியில் ஓடுகிறார். அரக்கன் விரட்டுகிறான். அவர் அயராமல் ஓடுகிறார். அரக்கன் விடாமல் துரத்துகிறான்.

இந்த இருவரின் ஓட்டத்தால் அண்டவெளியே அதிருகிறது.

இந்த அவல நிகழ்வைத் தேவலோகத்திலிருந்து வேடிக்கை பார்த்த முப்பத்து முக்கோடித் தேவர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் விஷ்ணு பகவானைத்  தேடிப்போய் சிவனைக் காப்பாற்றுமாறு முறையிடுகிறார்கள்.

காக்கும் கடவுளான விஷ்ணுக் கடவுள் பேரழகியாக[மோகினி] வடிவெடுத்து, சிவனை விரட்டிச் செல்லும் அரக்கன் முன் தோன்றி, கவர்ச்சி காட்டி நடனமாடினார்[ள்]

மோகினியை மோகித்த அரக்கன் கட்டுக்கடங்காத காம வெறியுடன் அவளைத் தழுவிச் சுகம் காண முற்பட்டபோது, “உன் உடம்பு நாறுகிறது, அழுக்குப்போக நீராடிவிட்டு என்னுடன் சல்லாபிக்க வா” என்று மோகினி சொல்ல, புத்தி கெட்ட அந்தப் பொல்லாத அரக்கன் நீர்நிலையைத் தேடுகிறான்; எதுவும் தென்படவில்லை[மாயவன் விஷ்ணு நிகழ்த்திய மாயாஜாலம் அது].

அரக்கன் அது குறித்து மோகினியிடம் முறையிட, அவளு[ரு]ம், “குளிக்காவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தலையில் தடவி வா என்று சொன்னதோடு, சிறிது தொலைவில் கையளவுக் குழியில் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரைத் தேக்கிவைத்தாள்[ர்]. 

மாயவன் செய்த சூது அறியாத அந்தக் காமுகன் கையளவு நீரை அள்ளித் தன் தலையில் தேய்க்க அவன் தலை வெடித்துச் சிதறியது[மாறுபட்ட நிகழ்வுகளுடனான கதைகளும் உள்ளன].

இதற்குப் பிறகுதான் அந்த அசிங்கம் அரங்கேறியது.

விஷ்ணு நடத்திய லீலையை, மறைந்திருந்து மனம் பதறப் பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரக் கடவுள், அழகி மோகினி உருவில் இருப்பவர் சக கடவுளான விஷ்ணு என்பதை மறந்து அவரைக் கட்டித்தழுவி உடலுறவு கொண்டார்[ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளாலேயே காமத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அடக்கடவுளே!]; அய்யப்பன் பிறந்தார்[//மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியைக் காணச் சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியைக் கண்டார். அவருக்கு மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினியை அடைய எண்ணினார்; மோகினியுடன் அவர்[சிவன்] உடலுறவு கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவரே ஐயப்பன் ஆவார்//[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF]

வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!

//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*

இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?

என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.


மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;


“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”

                                         *   *   *   *   *

*https://tamil.oneindia.com/news/madurai/tamimun-ansari-attacks-judge-gr-swaminathan-over-lamp-at-the-thiruparankundram-temple-755755.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links

‘தீ’யைத் ‘தீபம்’ ஆக்கிய அந்த அயோக்கியர்கள் யார்?!

ற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.

அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

இரவு நேர இருட்டில் வெளியே செல்லும்போது, தடிமனான நீண்ட குச்சிகளில் துணியைச் சுற்றி, தீயைப் பற்றவைத்துத் தீப்பந்தம்[தீவட்டி] ஆக்கிப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலக்கட்டத்திலும் ‘தீ’ தீ என்றே கருதப்பட்டது.

சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.

குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.

இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.

அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.

மக்களும் அதை நம்பினார்கள்.

கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.

வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!

வியாழன், 4 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் பிரச்சினை... நயினார் பக்தியை மெச்சி ஓடோடி வந்து உதவிய இறைவன்!!!

"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].

மனிதர்களுக்கு இடையேயான வழக்கில்[தி.ப.குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது] இறைவனே முன்வந்து தீர்ப்பளித்தது இதுவரை உலகம் கண்டிராத அதிசய நிகழ்வாகும்.

குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.

நயினார் அவர்களே, 

நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.

ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.

வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.

உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.

இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!

‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!

பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.

அவரின் இறப்பு வருந்தத்தக்கது என்றாலும் இது இயற்கை நிகழ்வுதான் என்பதை நினைவுகூர்ந்து ஆறுதல் பெறலாம்.

“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.

அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.

இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away

புதன், 3 டிசம்பர், 2025

காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!

திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது:

//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].

அடியேனும்[போலி நாத்திகன்] திருமலை வெங்கடேசப் பெருமாளின் ஆயுட்காலப் பக்தன் என்பதால், மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போதே ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளானேன்.

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் என்னுள் அளப்பரிய பெரும் சோகம் பரவியது. காரணம்.....

கடந்த கொஞ்சம் ஆண்டுகளாக, “சொர்க்கத்தின் வாசலை மட்டும் காட்டுகிற திருப்பதி தேவஸ்தானத்தார் சொர்க்கத்தை எப்போது காட்டப்போகிறார்கள்?” என்று கேட்டுக் கேட்டுக் கேட்டு என் மனம் வெகுவாக ஏங்கியதுதான்.

கோரிக்கை வைத்தாலும் அதை அவர்கள் ஏற்பது சந்தேகமே என்பதால், இந்த இருள் மனத்தவனின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அருள் வடிவான திருவேங்கடவனின் திருவடிகளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்[மானசீகமாக].

போற்றி போற்றி திருப்பதி வெங்கடாசலபதி போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!!

செவ்வாய், 2 டிசம்பர், 2025

திரு அண்ணாமலையாரும் திரு காடாத் துணியும்!!

கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையின் மலையின் உச்சியில், பிரமாண்டமான கொப்பரையில் எண்ணை ஊற்றி, காடாத் துணியில் திரி செய்து தீ பற்றவைத்துத் ‘கார்த்திகை மகா தீபம்’ என்று சொல்லி வழிபடுவதை வழக்கமாக்கியுள்ளார்கள் நம் மக்கள்.

மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத் துணிக்கு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாகிவிட்டதொரு பழக்கம்.

மனிதரைப் போலவே பிற உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு; அறிதல் அறிவும் உண்டு.

உணர்தலும் அறிதலும் இல்லாத சடப்பொருள்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட துணியும் ஒன்று. காடாத்துணி துணிகளில் ஒரு வகை. இதைத் தேவைக்கேற்ற வகைகளில் வடிவமைத்து மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தீபம் ஏற்றப் பயன்படும் இந்தச் சடப்பொருளான காடாத் துணி, சிறப்புப் பூஜை செய்யாவிட்டால், கோபித்துக்கொண்டு தன்னில் தீ பற்ற அனுமதிக்காதா?

நம்மவர்களில் பெரும்பாலானதொரு கூமுட்டைக் கூட்டம் ஆடு, மாடு, குரங்கு, கழுகு, பாம்பு, மூஞ்சூறு, நாய், பேய் போன்றவற்றைக் கடவுள்களாக்கிக் கொண்டாடி,  தங்களைப் படு படு முட்டாள்களாக உலகுக்கு அடையாளப்படுத்துவது போதாதா?  

உலகில் வெகு வேகமாக அறிவியல் வளரும் நிலையில், இதைப் போன்ற செயல்களின் மூலம், தங்களை முட்டாள்களாகவே நிலைநிறுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறது இக்கூட்டம்.

அண்ணாமலையாரால்[இருந்தால்] மட்டுமே இவர்களைத் திருத்த இயலும்.

திங்கள், 1 டிசம்பர், 2025

அண்டவெளியில் உள்ள அனைத்தும் உருவாகக் காரணம் அணுக்களே; ஆண்டவன் அல்ல!

*** //அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உருவாக்கும் சிறிய அலகுகள்// -https://education.nationalgeographic.org/resource/nuclear-energy/

***//atoms are now understood to be fundamental building blocks of matter…..// -https://medium.com/starts-with-a-bang/the-atom-lost-its-original-me aning-and-thats-good-for-science-bc39e828e75b

முக்கிய அறிவிப்பு:
கடவுளின் ‘இருப்பு’ நிரூபிக்கப்படாத நிலையில், அணுக்களே அனைத்துப் பொருள்களும் உயிர்களும் உருவாகக் காரணமாக உள்ளன’ என்னும் நம்பிக்கையில்[நம்பிக்கைதான்], தேடி எடுத்த ஆதாரங்களை இணைத்து எழுதப்பட்டது இந்தப் பதிவு[என் அமேசான் கிண்டில் நூலொன்றில் இடம்பெற்றுள்ளது]. தவறுகள் இருக்கக்கூடும்.

வாசிப்போரின் 'படைப்பு’ குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதே இதன் உள்நோக்கமாகும்.

ஞாயிறு, 30 நவம்பர், 2025

பாவத்திற்குச் சம்பளம் தருபவர் ‘இல்லாத’ கடவுள் அல்ல; மனிதர்களே!

                        *‘பாவத்தின் சம்பளம் மரணம்’[கடைசிப் பத்தி]

மேலே கண்டது[செய்தி> தமிழ் முரசு> 30.11.2025]போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது சமுதாயத்தில் இடம்பெறுபவைதான் என்றாலும், வாசிப்போரைக் கடும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்குபவை அவை.

விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு ஆறறிவுடன் வாழத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் ஒன்றுபட்ட ஒரு சமூகமாக இணைந்தார்கள்.

ஒற்றுமையுடனும் மன அமைதியுடனும் வாழ்வதற்காகப் பல நெறிமுறைகளை வகுத்தார்கள்; கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அக்கட்டுபாடுகளில், ஓர் ஆணும் பெணும் இணைந்து அந்தரங்கச் சுகம் அனுபவிக்க விரும்பினால், திருமணம் செய்துகொண்டு என்றென்றும் பிரியாமல் வாழ்தல் வேண்டும் என்பதும் ஒன்று[அது சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது, புனிதமானது என்பதெல்லாம் ஒருவகை மூடநம்பிக்கையே].

ஆக, திருமணம் என்பது வெறும் ஒப்பந்தமே என்பதால், கணவன் மனைவிக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்து அவற்றைச் சீர் செய்ய இயலாதபோது இருவரையும்[குழந்தைகள் இல்லாமலிருந்தால்] உடனடியாகப் பிரிந்து வாழ அனுமதிப்பது ஏற்புடையது.

குழந்தைகள் இருந்தால், அவற்றின் எதிர்காலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால்தான், சமூக ஆர்வலர்கள் திருமணம் ஆனவர்கள் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சில ஆண்டுகள் கழித்தே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்[சட்டம் இயற்றலாம்] என்கிறார்கள்.

பிரிந்து வாழும் உரிமை எளிதாக்கப்பட்டால்,  மனைவி துரோகம் இழைக்க நேரும்போது, அது தனக்கு அவமானம் என்று கணவன் அவளைத் தாக்குவதும் கொலை செய்வதும்[+மனைவி கணவனைக் கொல்வது] பெருமளவில் நிகழாது எனலாம்.

இது தொடர்பாக, ஆட்சியாளர்கள் ‘அறிஞர்கள் குழு’ அமைத்து ஆராய்ந்து விரைந்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

சனி, 29 நவம்பர், 2025

நம் பிரதமருக்கு உலகின் உயரமானதொரு[600 அடி] தங்கச் சிலை வைப்போம்!

//தெற்குக் கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550ஆவது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர[உலகின் அதிக உயரமான ராமரின் வெண்கலச் சிலை] ராமரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார்.....

சிறப்பு அஞ்சல் தலை & நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்துவருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் & புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு & ஆன்மிகப் பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன//[செய்தி*]

ஆன்மிகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் கோயில்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல் என்று மோடி ஆற்றிய/ஆற்றும் பணிகள் அளப்பரியன.

உலகச் சுற்றுலாச் செல்வதற்குச் செலவழிக்கும் நேரத்து இணையாக இதற்குச் செலவழிக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

மேலும், 100% கற்பனைப் படைப்பான ராமாயணத்தின் கதாநாயகன் ராமனை ஒரு கடவுளாக[ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்டவன்] மக்களின் மனங்களில் பதியச் செய்ய.....

வெளியூர்ப் பயணங்களில், ஆங்காங்கே உள்ள  பிரபலமான கோயில்களுக்குப் பரிவாரங்களுடன்  செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் இவருக்கு மலர் மாலை அணிவித்துக் கிரீடம் சூட்டி வரவேற்பதையும், தான் குனிந்து தரை தொட்டு, அல்லது குப்புற விழுந்து சாமி கும்பிடுவதையும், நாட்டு மக்கள் கண்டு மெய் சிலிர்க்கும் வகையில் காணொலியாக்கி, அவற்றை ஊடகங்களில் வெளியிடுதல் போன்ற இவர் ஆற்றிய/ ஆற்றும் இறைத் தொண்டு அளவிடற்கரியது.

சுருங்கச் சொன்னால், இவர் பக்தி நெறி பரப்புவதற்கென்றே கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓர் ஆன்மிக ஞானி  என்று உறுதிபடச் சொல்லலாம்.

இத்தகையதொரு அர்ப்பணிப்பாளர் இந்நாள்வரை இந்த மண்ணில் அவதரித்ததில்லை என்பதால்.....

ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் வகையில், 600 அடி[உலகிலேயே அதிக உயரமானது> வல்லபாய் படேல் சிலை 597 அடி]யில், தங்கத்தால் ஆனதொரு சிலையை நிறுவுவது இந்தியக் குடிமக்களின் கடமை ஆகும்.

வெள்ளி, 28 நவம்பர், 2025

நாள்தோறும் முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதாக அஞ்சி அதை உண்பதைப் பெரும்பாலோர் தவிர்க்கிறார்கள்.

உண்மையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கோலின், செலினியம், ஃபோலேட், இரும்பு போன்ற தாதுக்களும், பயோட்டின், பி12, ஏ, டி, ஈ கே போன்ற வைட்டமின்களும், தசைகள் & இணைப்புத் திசுக்களுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்தது முட்டை. இதில் லுடீன், ஜீயாக்சாண்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.

முட்டையில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, பெரும்பாலும் முட்டையால் கொழுப்பு அதிகரிக்காது; இது கண்புரை உருவாவதைத் தடுக்கிறது; மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; தசைகளை வலுப்படுத்துகிறது; ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்துகிறது. இதனால் HDL[நல்ல கொழுப்பு] அளவு கூடுகிறது.

வெள்ளை, பழுப்பு என்னும் இரு நிறங்கள் கொண்ட முட்டைகளும் உடம்புக்கு நன்மை பயப்பனவே.

முட்டையை வேகவைத்தோ பாத்திரத்தில் வறுத்தோ ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்;  வதக்கிய கீரை, தக்காளி, காளான்கள், வெங்காயம் போன்ற காய்கறிகளைச் சேர்த்தும் உண்ணலாம்.

ஆக, தினமும் முட்டை உண்பதால் பல நன்மைகள் உண்டே தவிர, தீமைகள் இல்லை என்பது அறியத்தக்கது.

                                              *   *   *   *   *

https://www.msn.com/en-in/money/topstories/what-happens-when-you-eat-eggs-daily-for-two-weeks-harvard-trained-gastroenterologist-explains/ar-AA1R135j?ocid=winp2fp&cvid=692953a61e9c4c12a5a72f2ff1e031a9&ei=15

வியாழன், 27 நவம்பர், 2025

தைராய்டு புற்று நோய்... ஒரு ஊசி மருந்து ரூ3.55 லட்சமாம்? அடக் கடவுளே!

பிரபல கன்னட நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் ராய், தனது 55ஆவது வயதில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்று வயிற்றுக்கும் பரவியதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார் என்பது செய்தி*

அவரின் மறைவு குறித்த செய்தியில், தைராய்டு சிகிச்சைக்கான மருத்துவச் செலவு பற்றிய விவரமும் கீழ்க்காணும் வகையில் வெளியாகியிருந்தது.

ஒரு ஊசிக்கு ரூ.3.55 லட்சம் செலவாகும். ஒரு சுழற்சிக்கு மூன்று ஊசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, மொத்தம் ஒவ்வொரு 63 நாட்களுக்கும் ரூ.10.5 லட்சம் செலவாகும். முழுமையான சிகிச்சைக்கு ரூ.70 லட்சம்வரை தேவைப்படும்.

இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைப்பது அரிது என்னும் நிலையில்***, சாமானியர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கே வழியில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

ஆகவே, “அயல் கிரக ஆராய்ச்சி, உயிர்களைப் பலிகொள்ளும் கொடூர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, சொகுசுப் பயணத்திற்கான நவீன வாகனங்களை உற்பத்தி செய்வது போன்றவற்றிற்கு அறிவியலைப் பயன்படுத்தாமல், புற்றுநோய் போன்ற எளிதில் குணப்படுத்த இயலாத நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதை பயன்படுத்துவது மனித இனத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்” -இப்படிச் சொல்ல வேண்டியவர்கள் அறிவியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகளின் ஆட்சியாளர்கள்.

*https://www.msn.com/en-in/health/other/harish-rai-death-kgf-actor-passes-away-at-55-after-battling-cancer/ar-AA1PUnWK?ocid=msedgdhp&pc=NMTS&cvid=690def20f09044e496834cf6724e90b2&ei=54

                                 *   *   *   *   *

***//தைராய்டு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதைத் திறம்பட நிர்வகிக்கலாம். தைராய்டு கோளாறுகள் உள்ளவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைச் சீராகப் பராமரிக்கத் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்// -கூகுள் AI 

புதன், 26 நவம்பர், 2025

'மசுரு' விதி!

டி மின்னலுடன் மழை பொழிகிறது. தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான்.  சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறத

பேய் மழையின்போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

மின்னல் அடிக்கும்போது ஆறறிவுள்ள ஒரு மனிதன், தன் இருப்பிடத்திலிருந்து போதிய பாதுகாப்பின்றி ஏன் வெளியே வரவேண்டும்? மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா? அறிந்திருந்தும் தவறிழைத்துத் தன் பார்வையை அவன் பறி கொடுத்தான் என்றால், அதற்குக் காரணம் ’விதி’ என்கிறோம்.

பருவ காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை. இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று. அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது.

மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அவ்வளவுதான். மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத் தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?
யார் நுழைத்தது?

கடவுளா?

ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப் பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?

ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா? மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?

சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு சேர்த்ததும் அவர்தானா?

பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச் சிதறுவது..... எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக் கொள்வது.... காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப்பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி 'வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.

இவை எல்லாமே கடவுளால் உருவாக்கப்பட்ட ‘விதி’ காரணமாக நடை பெறுகின்றனவா?

அளவிடற்கரிய அண்டவெளியில் இடம்பெற்ற அத்தனை பொருள்களும் உயிர்களும் விதிக்கப்பட்டபடிதான் தோன்றி இயங்கி மறைகின்றனவா?

ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும். எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப்படுகின்றனவா?

அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு, அணு, அணுப்புள்ளி என்று எல்லாவற்றுக்குமா? 

ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற 'மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா? 

இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்குச் சரியான விடை அறிந்து சொன்னவர் எவருமில்லை.

சொல்லப்படும் பதில்கள் எல்லாம் அனுமானங்களே. 

அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது பெருந்தன்மை.

விதி மீதான நம்பிக்கைதான் அடுக்கடுக்கான மூடநம்பிக்கைகளுக்கு மனிதன் அடிமையாகக் காரணமாக அமைந்தது என்பதை நாம் மறத்தலாகாது.

மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.

அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாக..... இன்பமாக வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய இந்த அறிவு பயன்பட வேண்டும்; கடவுள், விதி, தலை எழுத்து என்று ஏதேதோ சொல்லி, அவை பற்றிக் கற்பனைக் கதைகள் படைத்து, பொய்கள் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.

செவ்வாய், 25 நவம்பர், 2025

ராமர் ‘கைவசம்’ இருக்க 2047வரை காத்திருப்பது தேவையா மோடி?!

த்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசினாராம். என்னவெல்லாம் பேசினார்[+ நம் விமர்சனம்]?*

மோடி: அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....

நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.

மோடி: அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.

நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.

மோடி: வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......

நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.

மோடி: கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.


நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***


மோடி: நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.


நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].


*https://www.dinamalar.com/news/india-tamil-news/pm-modi-ayodhya-visit-this-flag-represents-the-resurgence-of-indian-civilisation-says-pm-modi/4091708


***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:

பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.

மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.

உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.

மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.

https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india

திங்கள், 24 நவம்பர், 2025

“இந்துக்கள் இல்லையென்றால் உலகம் அழியும்”... ஞானி மோகன் பகவத்!!!

னித நாகரிகம் என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது.

பழைய நாகரிகங்கள், காலவெள்ளத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகிப் புதிய நாகரிகங்களாக உருவாவது இயற்கை.

மனிதர்கள் ஓர் இனத்தை[மனித இனம்]ச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் வாழும் நாட்டுச் சூழ்நிலைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அவர்களின் நாகரிகமும் மாறுபடும்; அழிதலும் நிகழும்.

மாறுதலுக்கு உள்ளாகாத, அல்லது அழியாத மனித நாகரிகம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்னும் நிலப்பகுதியில்[ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா என்றொரு நாடு உருவானது. ‘பாரதம்’ என்னும் பெயரில் ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை] நிலவிய வேறு வேறு நாகரிகங்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

வேறு வேறு நாகரிகங்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில், ‘இந்துச் சமூகம்’ என்ற ஒன்று என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. பல்வேறு இனங்கள் மட்டுமே உள்ளன.

இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதச் சார்புடையவர்களை ஒதுக்கி, எஞ்சியுள்ளவர்களை[பல இனத்தவர்] ‘இந்துக்கள்’ ஆக்கியவர்கள் இந்து ஆதிக்க வெறியர்கள்.

வரலாறு இதுவாக இருக்க.....

“மணிப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முக்காலமும் அறிந்த ஞானி மோகன் பாகவத், “..... யுனான்(கிரீஸ்), மிஸ்ர்(எகிப்து), ரோம் என அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரீகத்தில் ஏதோ[?] உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம்” என்று அருளுரை ஆற்றியிருக்கிறார்.

ஏதோ ஒன்று இருக்கிறதாம். அந்த ஏதோ ஒன்று எது? அது இந்துமத வெறி.

மேலும், “பாரதம் என்பது அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் இந்துச் சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்துச் சமூகம் மையமானது” என்றும் கதையளந்திருக்கிறார்.

உலகின் தோற்றம் குறித்த உண்மை அறியப்படாதது போலவே, இதன் அழிவு எப்போது நிகழும் என்பதும், அது எவ்வகையானதாக இருக்கும் என்பதும் எவருக்கும்[விஞ்ஞானிகள் உட்பட] தெரியாது. அழிவு நிகழுமாயின், இந்துச் சமூகமோ விந்துச் சமூகமோ வேறு எந்தச் சமூகமோ எதனாலும் உலகை நிலைநிறுத்த இயலாது.

‘ஆர் எஸ் எஸ்’ என்னும் கும்பலின் ஆதிக்கம் நீடித்தால், உலகம் அழிகிறதோ அல்லவோ, இந்து மதம் அழியும் என்று வேண்டுமானால் உறுதிபடச் சொல்லலாம்.

https://www.hindutamil.in/news/india/without-hindus-world-will-not-exist-rss-chief-mohan-bhagwats-bold-claim