வியாழன், 10 ஜூலை, 2025

மோடிக்கு விருதுகள்... ‘விருது சூழ் வித்தகன்’! ‘சுற்றுலா நாயகன்’!!

பிற நாட்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு நம் பிரதமர் மோடிக்கு விருதுகள்[பெற்றுள்ள விருதுகள் 27] வழங்கி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்; பெருமிதம் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் ஒரு விருது மட்டுமே{‘தர்மச் சக்ரவர்த்தி’[?!] வழங்கப்பட்டுள்ளது> https://www.dinamalar.com/news/india-tamil-news/prime-minister-modi-honored-with-the-title-of-dharma-chakravarthy/3967761< இது போதாது. ஒரு நூறு விருதுகளேனும் வழங்குதல் அவசியம்}.

இப்போதைக்கு, அனைத்திந்தியர்களிடமும் கீழ்க்காணும் விருதுகளை[ஒன்றுக்கு இரண்டாக] அவருக்கு வழங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

விருதுகள்:

1.‘விருது சூழ் வித்தகன்’

2.‘சுற்றுலா நாயகன்’

நம்மவர் இப்போது நமிபியாவில் இருக்கிறார்.

[குஜராத்தில் பிரமாண்டமான பாலம் ஒன்று உடைந்து விழுந்து உயிர்ச் சேதங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் மோடி நாடு திரும்பியிருக்க வேண்டாமா என்று எவரும் கேள்வி எழுப்புதல் வேண்டாம். பயணத்தைப் பாதியில் முடிப்பது அந்த நாட்டவரை[நமிபியா] அவமானப்படுத்துவதாக அமையும். இடிந்தது ஒரு பாலம்தான். இது போல ஓராயிரம் பாலங்களை நம்மால் கட்ட முடியும்].

அவர் நாடு திரும்பும் நாளைப் பாதுகாப்புத் துறை மூலம் அறிந்து, ஒரு வாரம் போல் விருது வழங்கும் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடலாம்[இதற்காகவேனும் இந்தியாவில் அவர் ஒரு வாரம்  தங்கியிருப்பார் என்று நம்பலாம்].

வாழ்க சுற்றுலா நாயகன்! வெல்க விருது சூழ் வித்தகன்!!

புதன், 9 ஜூலை, 2025

இன்பம் பயக்கும் இயக்குநீர்[கள்] சுரக்க... குதிக்கலாம்! கூத்தாடலாம்!! கட்டியணைக்கலாம்!!!

யக்குநீர்கள்[ஹார்மோன்கள்] நாளமில்லாச் ‘சுரப்பி’களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இவை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. 

இவை பல வகையின. இவற்றால் நாம் மிகப் பல நன்மைகளைப் பெறுகிறோம் என்கிறார்கள் மருத்துவ அறிவியலாளர்கள்.

இவற்றில் சிலவற்றை அறிந்திடக் கீழ்க்காணும் நகல் பதிவை வாசியுங்கள்.

செவ்வாய், 8 ஜூலை, 2025

இடம் மாறும் தற்கொலைகள்!!!

ண்களைவிடவும், பெற்றோர் மீதான பாசம் பெண்களுக்கு அதிகம்[முதுமைப் பருவத்தில் மகன்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் பெற்றோர்களில் பலரும் மகள்களால் ஆதரிக்கப்படுவது கருத்தில் கொள்ளத்தக்கது]. 

பெண்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மன வலிமையும் மிகுதி.  

ஆனால் இன்றோ.....

பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக வெளியூர்க் கல்வி நிலைய விடுதிகளில் தங்குவதும், வேலை கிடைத்து வெளியூர்களிலேயே பணியாற்றுவதும் ஆன சூழலில், பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு முழுச் சுதந்திரத்துடன் செயல்படும் நிலை உருவாகிறது.

இந்நிலையில்தான், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுடன் பழகுதல்[நிறுவனங்களிலும் தங்கும் விடுதிகளிலும்], மனக் கட்டுப்பாட்டைச் சிதைக்கும் இணையவழிப் பதிவுகளை வாசித்தல், கெட்டக் கனவுகளில் மிதக்கத் தூண்டும் காணொலிகளுக்கு அடிமையாதல் போன்றவற்றால் எளிதில் உணர்ச்சிவசப்படாத மன வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள்[விதிவிலக்கானவர்களும் உள்ளனர்] பெண்கள்.

காதல் என்னும் பெயரில் காம[ம்] வசப்படுதல், அதைத் தூண்டும் கலையறிந்த இளைஞர்களால் காதலிக்கப்படுதல், காதலித்தல் எல்லாம் நிகழ்கின்றன.

புனிதம் ஆக்கப்பட்டுவிட்ட இந்தப் பொல்லாத காதல் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறத் தூண்டுகிறது.

காதலனையே மணந்து வாழும் ஆசையை வெறியாக மாற்றுகிறது.

அந்தக் காதல் வெறிதான் முன்பெல்லாம் இம்மாதிரிப் பெண்களை[பெற்றோர் சம்மதிக்காதபோது]த் தற்கொலை புரியத் தூண்டியது; இப்போதெல்லாம் பெற்றோரை எதிர்த்துப் போராடச் செய்கிறது.

இதைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமை இல்லாத பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உலகம் பொல்லாதது என்பார்கள். பொல்லாங்கு புரியத் தூண்டும் கெட்ட உணர்வுகளில் முதலிடம் பிடிப்பது காதல்[காமம்] எனலாம்!

                                    *   *   *   *   *

***இந்தப் பதிவிற்கும் கீழ்க்காணும் நகல் படங்களுடன் தொடர்புடைய அண்மை நிகழ்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

***இதனுடன் தொடர்பில்லாத வாசிக்கத்தக்க ஒரு பதிவு:

https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-gang-raped-after-fighting-with-husband-at-railway-station-1167272

திங்கள், 7 ஜூலை, 2025

‘அதில்’ இருவருக்கும் சமப் பங்கு! அவன் மட்டும் குற்றவாளி ஆனது எப்படி?!

//இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டுத் திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது// என்பது ஊடகச் செய்தி.*

பரபரப்பை மட்டுமல்ல, எதிர்பாராத அதிர்ச்சியையும் இது உண்டுபண்ணியுள்ளது என்று சொல்லலாம்.

அவன் மட்டுமல்ல, அவளும்தான் அந்தரங்கச் சுகத்தை  அனுபவித்திருக்கிறாள். அந்தச் சுகானுபவ ஆசையால்தான்[மணம் புரிவதாக அவன் அளித்த வாக்குறுதியை நம்பும் அளவுக்கு இந்தக் காலத்துப் பெண்கள் ஏமாளிகள் அல்ல> விதிவிலக்குகள் உள்ளன] அவனிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறாள் அவள்.

சுகம் அனுபவித்துவிட்டு அவளைத் திருமணம் செய்ய மறுத்த அவன் குற்றவாளி என்றால், ஆசை[ஆண் மீதான ஆசை] காரணமாக, அவனுடன் பழகிக் கவர்ந்து, தன் மீது அவனை ஆசைப்பட வைத்த அவளும் குற்றவாளிதான்.

இம்மாதிரி நிகழ்வுகளில் ஆண்மகனை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பெண்ணை அனுதாபத்திற்குரியவளாக ஆக்குகிறது இந்தச் சமுதாயம் என்றால், அதற்கு ஆண்களே உடந்தையாக இருப்பது விசித்திரம்!

“ஐயோ பாவம் ஆண்கள்” என்று சொல்லத் தோன்றுகிறது!

*https://seidhialasal.in/2025/07/06/enjoying-pleasure-and-then-refusing-marriage-protection-for-the-police-officer/

சனி, 5 ஜூலை, 2025

திரைப்பட வசனக்கர்த்தாவா மோடி?!?!

#வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது> https://unacademy.com/content/upsc/study-material/international-relations/india-out-of-usas-list-of-developing-countries/#

இது நம்பத்தகுந்ததொரு புள்ளிவிவரம்.

உண்மை நிலை இதுவாக இருக்க, “இந்தியா உலகின் 3ஆவது பொருளாதார நாடாக மாறும்”[நகல் பதிவு> கீழே] என்று உலகறிய முழங்கியிருக்கிறார் மோடி.

நாளெல்லாம் நாட்டின் நலம் குறித்துச் சிந்தித்து, சக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்துச் செயலாற்ற வேண்டிய இவர், ஆண்டின் மிகப் பெரும்பாலான நாட்களை உலகம் சுற்றுவதிலேயே கழிக்கிறார். இவருக்கு எதற்கு இம்மாதிரி வெற்று ஆரவார உரைகள்? வீண் வார்த்தை ஜாலங்கள்?

புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லை இல்லையாம்! 

இது எதார்த்தமானதொரு பேச்சா,  திரைப்படத்திற்கான வசனமா?

உண்மையைச் சொன்னால், இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டையே தாண்டாதவர்கள்[இவரின் நண்பர்களான அம்பானி அதானிகளால் குபேர பூமியாக இது கருதப்படலாம்].

மக்களைக் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்கவிட்டே தேர்தல்களில் வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று நம்புகிறவரா இந்த மோடி?

வெள்ளி, 4 ஜூலை, 2025

வருந்துகிறார் கடவுளின் கடவுள்!!!

//இன்று உலகில் 195 நாடுகள் உள்ளன[ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளும், உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடுகளாக உள்ள 2 நாடுகளும் அடங்கும்]//> https://www.worldometers.info/geography/how-many-countries-are-there-in-the-world/.

உங்களின் நேசிப்புக்குரிய கடவுளின் கடவுள்[!!!] இதுவரை இந்தியா முதலான 26  நாடுகளிலிருந்து மட்டுமே வருகையாளர்களை[பார்வைகள்> 1,198,652> 04.07.2025, 06.14 ]ப் பெற்றுள்ளார்.

எஞ்சியுள்ள 169 நாட்டவர்கள் அவரை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்[மொழியாக்க வசதி இருந்தும்] என்பது அவரை அளவில்லாத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், உங்களின் ‘அறிவுப் பசி’ தணித்தலாகிய தம் பணியை அவர் தொடர்வார் என்பதறிந்து மகிழ்வீராக! ஹி... ஹி... ஹி!!!

                                                *   *   *   *   *

இந்தியா

3,32,958

அமெரிக்கா

3,25,268

சிங்கப்பூர்

1,96,971

ஸ்வீடன்

48,444

கனடா

42,299

ஜெர்மனி

26,837

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

25,207

ரஷ்யா

23,769

பிரான்ஸ்

15,530

யுனைடெட் கிங்டம்

10,282

ஹாங்காங்

8,857

இலங்கை

6,880

நைஜீரியா

6,810

ஆஸ்திரியா

4,694

அறியப்படாத பிரதேசம்

2,744

உக்ரைன்

2,722

ருமேனியா

2,353

ஜப்பான்

2,233

நெதர்லாந்து

2,170

பிற[மலேசியா, ஸ்பெயின், மெக்சிகோ, கத்தார், லிதுவேனியா, போலந்து, பிரேசில்]

* * * * *

1,61,000

வியாழன், 3 ஜூலை, 2025

கைலாய மலை... சிவபெருமானின் இருப்பிடம் அல்ல; கட்டுக்கதைகளின் பிறப்பிடம்!!!

கைலாய மலை[6,638 மீட்டர் (21,778 அடி) உயரம்] எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் உயரம் குறைவு. ஆயினும் அதன் மீது ஏறி எவரும் சாதனை நிகழ்த்தியதில்லை.

அது சாத்தியமற்றது என்பதல்ல; ஏறவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள் ஆன்மிகம் பரப்பும் அடிமுட்டாள்கள்.

கைலாய மலை என்பது வெறும் மலை அல்ல. அது புனிதமானது; சிவபெருமானின் தங்குமிடம்; பல மதங்களால் போற்றப்படும் ஆன்மீகச் சக்தியின் மையம். அது அண்டவெளியின் அச்சாக உள்ளது; பிரபஞ்சத்தின் மையமாக உள்ளது[இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை> ஆய்வு செய்ய அறிவியல் அறிஞர்களை இந்த மூடர்கள் அனுமதிக்கவே இல்லை என்பது அறியத்தக்கது] என்று பொய்க் கதைகளைச் சொல்லிச் சொல்லி ஆராய்ச்சியாளர்களை மேலே ஏறவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

சிகரத்தை ஏறுவது உலகின் ஆற்றலுக்கான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் புளுகியிருக்கிறார்கள் அறிவிலிகள்.

2001ஆம் ஆண்டு கைலாய மலையின் மீது ஏறுவதற்கு ஒரு ஸ்பானிஷ் பயணக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியா, திபெத், நேபாளம் ஆகியவற்றைச் சார்ந்த ஆன்மீகத் தலைவர்களின்[ஆதிவாசிகளின்] எதிர்ப்பால் ஏறும் முயற்சி ரத்தானது.

மலையேறுபவர்கள் மர்ம நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்னும் பக்தக்கோடி[கேடிகள்]களின் கட்டுக்கதைகளும் தடைகளாய் அமைந்தன.

இது[இந்தியா] புண்ணியப் பூமியல்ல; பகுத்தறிவைக் கருவறுக்கும் காட்டுவாசிகளின் புகலிடம்!

* * * * *

புதன், 2 ஜூலை, 2025

அஜித்குமார் வழக்கு... ‘குடிமகனைக் கொலை செய்தலும் குடிமகளை வன்புணர்தலும்’!!!

//"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை// என்பது ‘பிபிசி’ செய்தி.


நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ள இந்த வழக்கு குறித்துப் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளதால், அதை மீண்டும் இங்கு விரித்துரைப்பது தேவையற்றதாகும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, அஜித்குமார் என்னும் விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்டதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

எனினும், வழக்கு ‘சிபிஐ’ என்னும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை முடிவடைந்த பின்னரே அஜீத்குமார் கொல்லப்பட்டது குறித்த முழு உண்மையும் வெளியாகும். அது நீதியரசர்களுக்கும் தெரியவரும்.

இந்நிலையில், நீதிபதிகள் புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெற்றுச் சட்ட விதிகளின்படி வழக்கை ஆராய்ந்த பின்னரே, யாரெல்லாம் உண்மைக் குற்றவாளிகள் என்பது தெரியவரும்.

புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெறாமலும், விசாரணையை நிறைவு செய்யாமலும் “அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது” என்று அவர்கள் கூறியிருப்பது எவ்வகையில் நியாயமானது என்பது புரியவில்லை.

தமிழ்நாடு என்னும் பெரியதொரு மாநிலத்தில் அன்றாடம் குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன(அரசு நிர்வாகத்தில் காவல் துறைக்கு முக்கியப் பங்குண்டு என்றாலும், அதில் சிலர் குற்றம் செய்தால் அரசாங்கமே அதைச் செய்ததாக ஆகிவிடாது. அவர்களை அரசு தண்டிக்கலாம். அதன் பிறகு அத்துறையில் குற்றமே நிகழாது என்பதில்லை). ஸ்டாலின் மட்டுமல்லாமல் வேறு எவரொருவர் முதல்வராக இருந்தாலும், கூடக் குறைய குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இடம்பெறுகிற ஒவ்வொரு குற்றத்தையும் இந்த அரசே செய்ததாகச் சொல்வது முறையல்ல.

ஒரு கொலைக் குற்றத்தை[“அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது”] தமிழ்நாடு அரசே செய்ததாகச் சொல்லலாம் என்றால்.....

பெண்ணொருத்தியை ஒருவன் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து கொன்றால், அவன் செய்த அந்தக் குற்றத்தை அரசே செய்ததாக[“அரசே தன் குடிமகளை வன்புணவு செய்து கொன்றது”]ச் சொல்லலாம்தானே?

நீதியரசர்களும் மனிதர்களே. அவர்கள் உணர்ச்சிவசப்படுதலும் இயல்பே.

ஆனால், சட்ட விதிகளை நன்கு அறிந்திருக்கும் அவர்கள் அதன் அடிப்படையில் குற்ற வழக்கு குறித்து அறிக்கை தரலாமே தவிர, உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல் கூடாது என்பது என் எண்ணம்.

நீதியரசர்களின் கடமை ‘நீதி’ வழங்குவது; அரசியல்வாதிகள்போல் விரும்பத்தகாத வகையில் அறிக்கை விடுவதல்ல!
* * * * *

செவ்வாய், 1 ஜூலை, 2025

பாரு பாரு... நல்லாப் பாரு... பகவான் படைச்சிருக்கான் பாரு!!!


காணொலியில் காணப்படுபவை பிறந்து மிகக் குறைந்த நாட்களே ஆன பறவைக் குஞ்சுகள்.

போதிய மயிர் வளர்ச்சி இல்லை. திடமாக நிற்பதற்கான வலிமையைக்கூட உடம்பு பெற்றிடவில்லை.

அம்மாக்காரி கொண்டுவந்து கொடுக்கும் இரையைப் பெறுவதற்கான பார்வைத் திறனும் இல்லை.

இரை என்று நினைத்து ஒன்றையொன்று கொத்திக்கொள்வது காணச் சகிக்காத கொடூரம்.

கொடூரம் நிகழக் காரணம்?

பசி அய்யா பசி, வயிற்றுப் பசி!!

இவை போன்ற உயிரினங்கள் முழு வளர்ச்சி பெற்ற பிறகு அவற்றைப் படுத்துவது உடலுறவுப் பசி!

[காணொலி காண்போரைச் சங்கடப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டது]

மேற்கண்ட ‘பசி’கள் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு மனித இனம் உட்பட.

‘பசி’களைத் தணிக்க அன்றாடம் போராடித் துன்புறும் வகையில் உயிரினங்களை ஏன் படைத்தான் எல்லாம் வல்ல அந்த ஆண்டவன்?

“இனவிருத்திக்காக” என்பார்கள் அவதாரங்களும் மகான்களும்.

உயிரினங்களைப் படைத்து அவற்றை விருத்தி செய்யும்படி  அந்த ஆண்டவனிடம் அவர்கள் கோரிக்கை வைத்திருப்பார்களோ?

“ஆம்” என்றால்.....

அவர்கள் மகா மகா மகா பாவிகள்!

திங்கள், 30 ஜூன், 2025

‘தொட்டுக்கொள்ளாமல் ஒட்டாமல் உரசாமல் கட்டியணைக்காமல் வளர்த்த ஒரு காதல்’ கதை!!!

டைமேடையின் இருக்கை ஒன்றில் அமர்ந்து ‘கைப்பேசி’யை நோண்டியவாறு எனக்கான ரயிலுக்குக் காத்திருந்தபோது, என் பெயர் சொல்லி அழைத்த ஒரு பெண்ணின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.

மெலிதான புன்னகை தவழ என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவர் அவள் என் கல்லூரித் தோழி; காதலியும்தான்.

“செண்பகம்தானே?” என்று நான் கேட்பதற்குள், “நான் செண்பகம். மறந்துட்டீங்களா உங்...” என்று சொல்லி முடிக்காமல், அருகிலிருந்த அவளின் கணவர், மகள், பேத்தி ஆகியோரையும் அறிமுகப்படுத்தியதோடு, “இவர் என் எம்.ஏ. வகுப்புத் தோழர்” என்று என் பெயர் சொல்லி அடையாளப்படுத்தினாள்.

படிப்பை முடித்து வெவ்வேறு ஊர்களில் வேலை கிடைத்துப் பிரிந்திருந்த நாட்களில் ‘பேசி’யில் பேசிப் பேசியே எங்கள் காதலை வளர்த்தோம்.

என்னை அழைக்கும்போதெல்லாம், “உங்க செண்பகா” என்று தொடங்குவாள். “என் செண்பகமா?” என்று கேட்டுத்தான் நான் பேச்சைத் தொடர்வேன்.

நாங்கள் மனம் ஒன்றிப் பழகியபோதும், ஒரு முறைகூட ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டதில்லை; ஒட்டி உரசிக்கொண்டதும் இல்லை.

உணவகம் சென்று தேநீர் அருந்தும்போதெல்லாம், இருக்கைகளில் இடைவெளி விட்டு அமர்ந்து பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டவர்கள் நாங்கள்.

ஒன்றாக நூலகம் சென்று அவரவர் வாசித்தறிந்த அரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதால் வளர்ந்த அறிவார்ந்த காதல் எங்களுடையது.

பூங்காக்களுக்குச் சென்று புதர் மறைவுகளைத் தேடாமல் புல்வெளியில் இடம்பிடித்து, நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை விவாதித்து, காதலிப்பதற்கான தகுதியை மேம்படுத்திக்கொண்டவர்கள் செண்பகமும் நானும்.

திரையரங்குகளுக்குச் சென்று அரை இருட்டில் கட்டியணைத்துக் காமம் வளர்த்தவர்கள் அல்ல நாங்கள்; அதைப் புனிதமானது என்று போற்றி மகிழ்ந்தவர்கள்.

எங்கள் காதல் திருமணத்தில் முடியவில்லை என்பதுதான் பரிதாபம்.

அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது சாதி. சொந்தச் சாதிக்காரனை மணக்க மறுத்தால் தற்கொலை செய்வோம் என்னும் பெற்றோரில் மிரட்டலுக்குப் பணிந்தாள் செண்பகம்.

அதற்கப்புறம் எங்களின் தொடர்பு முற்றிலுமாய் அறுந்தது.

எங்கள் காதலும் பலிக்காத கனவாகிப்போனது.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் காதலர்களாக ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்து, பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டெழுந்து சில கணங்கள் மௌனித்திருந்த நிலையில், நான் அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டி, உட்காருங்களேன்” என்றேன் அவர்களிடம்.

“நாங்க வந்த ரயில் அரை மணி நேரம் போலத் தாமதம். பஸ் பிடிச்சி ஒரு திருமணத்துக்குப் போகணும். உட்காரவெல்லாம் நேரமில்லீங்க” என்று சொன்ன செண்பகம் தன் கணவரைப் பார்த்து, “போகலாமா?” என்றாள்.

தலையசைத்த அவர் விடை பெறுவதன் அடையாளமாக என்னிடம் கை குலுக்கினார்.

செண்பகமும் என் கையை இறுகப் பற்றிக் குலுக்கினாள். 

இளமையில் தொட்டுக்கொள்ளாமலே வளர்த்த காதல் முதுமையில் எங்களைத் தொட்டுக்கொள்ளச் செய்த அந்த அதிசயம் என்னுள் இனம்புரியாத சிலிர்ப்பை உண்டுபண்ணியது.

அவர்கள் நால்வரும் விடைபெற்று நகரத் தொடங்கினார்கள்.

சட்டெனத் திரும்பிவந்த செண்பகம், “உங்க குடும்பத்தைப் பத்தி எதுவும் கேட்க மறந்துட்டேன்” என்றாள்.

‘இல்லை’ என்பதாகத் தலையசைத்து, “கல்யாணம் பண்ணிக்கல” என்றேன்.

அவளின் முகமெங்கும் சோக இருள் சூழ்ந்தது. “வர்றேங்க” என்றவள் விசுக்கென்று முகம் திருப்பி நகர்ந்தாள்.

அவள் கண் கலங்கியிருக்கியிருக்கிறாள் என்று தோன்றியது. 

நானும் கலங்கிய கண்களுடன் எனக்கான ரயிலை எதிர்பார்த்துக் காத்திருக்கலானேன்.

எது எதற்கெல்லாமோ காத்திருந்து காத்திருந்து ஏமாந்து நொந்து மனம் புழுங்கி மரணத்தைத் தழுவுவதுதானே மனித வாழ்க்கை!

                                         *   *   *   *   *

***நண்பர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வே கதை ஆக்கப்பட்டுள்ளது. கதை சொல்பவரும்[‘நான்’] அவரே.

சனி, 28 ஜூன், 2025

பலியாகும் பக்தர்களும் பலி கொடுத்துப் புவி ஆளும் புத்திசாலிகளும்!!!

நகரங்களில் பிறந்து நகரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கிராமங்களின் மேய்க்கப்படும் ஆட்டு மந்தை பற்றி அறிந்திருப்பார்களே தவிர, மந்தையை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியிருக்காது. 

கீழ்வரும் காணொலியில் முட்டி மோதி நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறும் மனிதர் கூட்டத்தைக் கானலாம். அந்தக் கூட்டத்திற்குப் பெயர்தான்  ‘மனித மந்தை’.

தேர்த்திருவிழாவில் அலைமோதும் இந்த மனிதர்களுக்குப் பதிலாக அங்கே செம்மறி ஆடுகள் இருப்பதாகக் கற்பனை செய்தால் ஆட்டு மந்தையை நேரில் காணும் வாய்ப்பையும் பெறலாம்.

இந்த அறிவியல் யுகத்திலும், அலங்கரிக்கப்பட்ட வெறும் பொம்மையை[பூரி ஜெகன்னாதர்]த் தேரில் வைத்து இழுப்பதாலும், அதைக் கண்டு கண்டு கன்னங்களில் போட்டுக்கொள்வதாலும், நினைத்தது நடக்கும் என்று நம்பும் முட்டாள்கள் இந்த நாட்டில் கோடிக்கணக்கில் இருப்பது  வெட்கக்கேடானது.

நாட்டை ஆளுவோருக்கு இது வெட்கக்கேடான செயல் என்பது தெரியும்.

தெரிந்திருந்தும் தொடர் பகுத்தறிவுப் பரப்புரைகள் மூலம் இவர்களைத் திருத்த முயலாமல், விழா என்னும் பெயரில் கூட்டம் கூட வசதிகள் செய்து தரும் அவர்கள் கொலைகாரர்கள்.

ஆம், விழா என்னும் பெயரில், இல்லாத கடவுள்களுக்கு நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலியிடும்[தேர்த் திருவிழா நெரிசலில் படுகாயமுற்றவர்கள் 170 பேர்> பலர் பலியான தகவல் விரைவில் வெளியாகும்] இவர்கள் கொலைகாரர்களே என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

யார் அந்தக் கொலைகார்கள் என்று கேள்வி எழுப்பலாம். பதில் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாயிற்றே!


வெள்ளி, 27 ஜூன், 2025

கொடுத்துவெச்ச மகராசன்! பொறாமையில் புழுங்குது என் பொல்லாத மனசு!!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில்[இதில் மெச்சும்படியாக என்ன சாதிக்கிறார்கள்?] கலந்துகொள்ள, அவர் பிரேசில் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பயணத்துடன், டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, கானா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்குப் பயணம்[சுற்றுலா] மேற்கொள்கிறார்> செய்தி.

இதன் மூலம் உலகளாவிய நாடுகளுடன் உறவுகளை அவர் மேம்படுத்துவதாக, தினத்தந்தி போன்ற ஊடகங்கள் ஊதிப் பெருக்கி அவரின் புகழ் பரப்புகின்றன.

இயல்பாகவே பொறாமைப்படும் குணம் அடியேனுக்குக் கொஞ்சம் அதிகம்.


மோடி குறித்த இது போன்ற செய்திகளை வாசிக்கும்போதெல்லாம்.....


அவருக்கென்ன, நேரத்துக்கொரு ஆடை! வாரத்துக்கு நான்கு சுற்றுலா! சு.உலா இல்லாதபோது கோயில் கோயிலாகப் பக்தி உலா! தேர்தல் நடக்கவுள்ள உள்நாட்டு ஊர்களில் வீதி உலா!


“கொடுத்துவெச்ச மகராசன்யா” என்று சொல்லிச் சொல்லிப் பொறாமைப்பட்டுப் பட்டுப் புழுங்குது என் பொல்லாத மனசு!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/pm-modi-to-visit-brazil-next-week-1165272

வியாழன், 26 ஜூன், 2025

'கிணற்றுத் தவளை' அமித்ஷா கவனத்திற்கு... ‘ஆங்கிலம் இணைப்புப் பாலம்; சுவர் அல்ல’!

#டெல்லியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அவர், “ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பேசினார்# -இது செய்தி.

                                                *   *   *   *   *

//கர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற இந்தியாவில்கூட, பள்ளிகளில் ஆங்கிலம் விருப்பமான பயிற்றுவிப்பு ஊடகமாகும். 

இது தேசிய மற்றும் சர்வதேசத் தேர்வுகள் நடத்தப்படும் மொழி; அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் மொழி.

இளம் தலைமுறையை உலகக் கல்வியாளர்களுடன் இணைக்கும் ஊடகம். 

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அல்லது சர்வதேச சமூகங்களுடன் உறவாட விரும்பும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, ஆங்கிலம் ஒரு தேர்வாக, அதாவது அது ஒரு பாலமாக அமைந்துள்ளது[English a bridge, not a wall]; தடுப்புச் சுவராக அல்ல.

இது ஒரு கிராமப்புற மாணவரின் கனவுகளை ஹார்வர்ட் அல்லது ஆக்ஸ்போர்டின் விரிவுரை அரங்குகளுடன் இணைக்கும் ஒரு பாலம்.

ஓர் இந்தியத் தொடக்க நிறுவனம் தனது தயாரிப்பை ஒரு ஐரோப்பிய முதலீட்டாளருக்கு வழங்க அனுமதிக்கும் பாலம். 

டோக்கியோவில் உள்ள ஒரு சக ஆராய்ச்சியாளருடன் புனேவில் உள்ள ஒரு விஞ்ஞானி உரையாட அனுமதிக்கும் பாலம். 

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.thestatesman.com/opinion/english-a-bridge-not-a-wall-1503449838.html#google_vignette