எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 6 மே, 2025

‘இந்தியா-பாகிஸ்தான் போர்’... தேவை வீடுதோறும் பதுங்கு குழி!!!

26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்த தீவிரவாதிகளைக் கைது செய்ய முடியுமோ முடியாதோ, அவர்களைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவதாகச் சபதம் செய்திருக்கிறார் நம் பிரதமர் மோடி.

எப்பாடுபட்டேனும் தாம் மேற்கொண்ட சபதத்தை நிறைவேற்றிக் காட்டுவார் நம் பிரதமர்.

அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துமுடித்து, நம் பரம்பரை எதிரி பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கு முன்னரான ‘போர் ஒத்திகை’யை நாடெங்கும் நடத்திமுடிக்க ஆணை பிறப்பித்திருக்கிறார் அவர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நகரங்களிலும் ஊர்களிலும், நம் பகைவனின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான ஒத்திகைகள் நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.

எல்லைப்புற ஊர்களில் மட்டுமே ஒத்திகை நடத்துவது போதாது என்பது நம் எண்ணம்.

“இந்தியா தாக்கினால் நாங்கள் அணுகுண்டுகள் வீசுவோம்” என்று பாகிஸ்தான்காரன் சொல்லியிருப்பதாலும், அவன் சொன்னபடியே அவன் வீசும் அக்குண்டுகள் இந்தியா முழுவதும் பேரழிவை உண்டுபண்ணும் என்பதாலும் ஒட்டுமொத்த இந்தியர்களும் தத்தம் வீடுகளில் பதுங்கு குழிகளைத் தோண்டி வைத்து, போர் ஒத்திகையின்போது குழிகளில் பதுங்குவதற்கான பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம் ஆகும்.

ஆனாலும், 

அவன் அணுகுண்டுகள் வீசுவதற்கு முன்னால், நம் பிரதமர் அவர்கள் அடுத்தடுத்து அணுகுண்டுகளை[அவனிடம் 130 குண்டுகள் மட்டுமே இருப்பு வைத்துள்ளான். நம்மிடம் அதனினும் பல மடங்கு குண்டுகள் உள்ளன] வீசிப் பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவார் என்பது உறுதி.

வாழ்க நம் பிரதமர்! வெல்க இந்தியா!! ஒழிக பாகிஸ்தான்!!!

‘உடனடி ஒத்திகைகள்’... 1.‘பாக்.-இந்தியா’ போர்! 2.மோடிக்குப் பாராட்டு விழா!!

//மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலங்களில் மே 7ஆம் தேதி போர்ப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமானத் தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்//-https://www.dinamalar.com/news/india-tamil-news/central-government-orders-states-to-start-war-preparedness-drills/3923061//

உ.து.அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் ‘பாக்.-இந்தியா’ இடையே போர் மூளும் என்பது உறுதியாகிவிட்டது.

போரில் வெற்றி நமதே[இந்தியாவுக்கே] என்பதும் நூற்றுக்கு நூறு உறுதி.

வெற்றிக்கனியைச் சுவைத்த சூட்டோடு, நம் பிரதமர் மோடியின் அறிவாற்றலையும் ஆளுமைத் திறனையும் போற்றும் வகையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்த விழா இதுவரை உலக அளவில் எந்தவொரு தலைவருக்கும் நடத்தப்பட்டதையும்விடவும் மிக மிக மிகச் சிறப்பாக அமைதல் அவசியம்.

எடுத்த எடுப்பில் அவ்வாறானதொரு விழாவை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் முன்கூட்டியே ஒத்திகை பார்ப்பது நல்லது.

ஆகவே, ‘பாக்.-இந்தியா’ போருக்கு ஒத்திகை நடத்தும் அத்தனை மாநில அரசுகளும், மோடிக்கான பாராட்டு விழாவுக்கும் ஒத்திகை நடத்திட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

வாழ்க மோடி! வெல்க ‘பாரத்’!!