இந்தியாவில் நாத்திகம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை[ATHEISM IN INDIA — A DISMISSED IDENTITY].
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, எவரொருவரிடமும் அவர் ஆத்திகரா, நாத்திகரா, இவை குறித்த சிந்தனையே இல்லாதவரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுவதே இல்லை. அவர் எம்மதத்தவர் என்பதை மட்டுமே பதிவு செய்கிறார்கள்.
இதனால், கடவுள் வழிபாடு போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு வாழும் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாமல்போகிறது.
இதன் விளைவு, இங்கு வாழ்வோரில் மிக மிகப் பெரும்பாலோர் ஆத்திகர்களே[மூடநம்பிக்கையாளர்கள்] என்று மக்கள் நம்பும் நிலை உருவாகிவிட்டது.
இந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த பிரபலங்கள்[பிரதமர், குடியரசுத் தலைவர்+] கோயில்களுக்குச் சென்று வழிபடும்போதெல்லாம், ஊடகங்கள் அந்நிகழ்வுகளைப் படம்பிடித்து வெளியிடத் தவறுவதே இல்லை.
தமக்குரிய பணிகளின்போது, மத உணர்வைத் தூண்டுவதான செயல்களில் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுதல் கூடாது என்பது அரசியல் சட்ட விதிகளில் ஒன்று.
பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றவர்களும் அரசிடம் ஊதியம் பெறுபவர்களே[+அதீத அதிகாரம் படைத்தவர்கள்].
இவர்களின் கடவுள் வழிபாடு காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், மக்களிடையே சிந்திக்கும் அறிவு வளரும்[ஒருவர் நல்லவராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் வாழ்வதற்குப் பக்தி உதவாது. இது மனிதரை மூடராக மட்டுமல்ல, சுயநலம் மிக்கவர்களாகவும் ஆக்குகிறது> விரிவானதொரு ஆய்வு பின்னர் வெளிவரும்].
ஆகவே, அவர்கள் கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதும் தடை செய்யப்படுதல் வேண்டும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாட்டு அதிகார வர்க்கத்தவர்[ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள்] இந்தத் தவற்றைச் செய்வதில்லை என்பது நம் நம்பிக்கை.
