சாலைகள் என்பவை முழுக்க முழுக்கப் போக்குவரத்துக்கானவை[மனிதர்கள், வாகனங்கள்+].
அரசியல்வாதிகளும் பக்தி முற்றிப்போன அரைவேக்காடுகளும் இதை ஆக்கிரமிப்பதால், மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய இயலாமல் அல்லாடுவது அடிக்கடியான நிகழ்வாகிவிட்டது.
அரசியல்வாதிகளை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தும் ஆட்சியாளர்கள் ஆன்மிகவாதிகள் செய்யும் அடாவடித்தனங்களைக் கண்டுகொள்வதில்லை.
காரணம், கட்டுப்படுத்தினால், தேர்தல்களில் அவர்கள் தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்னும் அச்சம்.
இதன் விளைவு, சாமி ஊர்வலம் என்னும் பெயரால் இவர்கள் போடும் ஆட்டமும் குத்தாட்டமும் சகிக்க இயலாதவை.
இவர்கள் அடிக்கும் கொட்டங்களால், வாகன விபத்துகள் நேர்வதும் சிலரோ பலரோ உயுரிழப்பதும் வழக்கமாகிவிட்டது.
அண்மையில் கர்னாடகா மாநிலத்தில் நடத்தப்பட்டப் பிள்ளையார் ஊர்வலத்திற்குள் ஒரு பெரிய வாகனம்[கண்டெய்னர் லாரி] புகுந்ததால் 9 பேர் உயிரிழக்கப் பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்[செய்தி பல மணி நேரங்களுக்கு முன்னரானது என்பதால், உயிரிழப்புகள் பின்னர் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது].
யானைத் தலையும் தாழி வயிறுமாக ஒன்றரைத் தந்தத்துடன் ஒரு கடவுளைக் கற்பித்தவன் படு அயோக்கியன் என்றால், இந்தக் கோமாளிக் கடவுளை உலக அளவில் பிரபலமாக்கிக் கொண்டாடி வழிபடும் பக்திப் பித்தர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இவன்கள் உருப்படாமல்போவதுடன், பக்தியில்லாதவர்களுக்கும் அதில் தீவிர ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இவர்கள் செய்யும் இடையூறுகளுக்கு அளவே இல்லை[சாமி ஊர்வலங்களிக்கென்று சாலைகளை ஒட்டிப் பக்கவாட்டுகளில், நடைபாதைகளை விரிவுபடுத்திச் ‘சிறு குறு’ பாதைகள் அமைக்கலாம். இதன் மூலம் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்வதைத் தவிர்க்கலாம்].
இவர்கள் திருந்தும் நாளும் வருமா?
பக்தி வேடம் புனைந்து, தங்களைப் பரம யோக்கியர்களாக வாக்காளர்களை நம்பச் செய்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும், பக்தியை வளர்த்துத் தங்களின் பத்திரிகை விற்பனையை அதிகரித்துப் பணம் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்களும் உள்ளவரை.....
ஊஹூம்!
