எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 26 ஜூலை, 2025

அண்ணாமலை ராஜேந்திர சோழனின் வழிவந்தவரா?!

டபுலத்து அரசர்கள் தமிழினத்து மன்னர்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கங்கைவரை படை திரட்டிச் சென்று, பழித்தவர்களைத் தன் தாள் பணியச் செய்து, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்தவன் கங்கைகொண்ட மன்னனான ராஜேந்திர சோழன்.

அவனை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்படும்[கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆயிரமாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா] நிகழ்வில் கலந்துகொள்ளவரும் மோடியை, தன் கட்சித் தலைவன் என்ற வகையில் அண்ணாமலை வரவேற்பதோ, மரியாதை செலுத்துவதோ, கருத்துப் பகிர்வு செய்துகொள்வதோ தவறல்ல.

அவருடன் உரையாடும்போது தொண்டனுக்குரிய தன்னடக்கத்துடன் நடந்துகொள்வதும் தேவைதான். அதற்காக.....

உலகறிய, செவி மறைத்து வாய்பொத்திய கோலத்தில் அவர் காட்சிதருவது, மோடியிடம், “உன் அடிமைகளில் எனக்கு இணையானதொரு அடிமை உண்டா?” என்று கேட்பது போல் இருக்கிறது.

தன்மானச் சிங்கமான ராஜேந்திர சோழனின் பரம்பரையில் வந்தவரா அண்ணாமலை?

நாம் மட்டும் கேட்கவில்லை; ஒட்டுமொத்தத் தமிழினமும் கேட்கிறது.....

“தன்மானத் தமிழன் ராஜேந்திர சோழனின் இனத்தவரா இந்த அண்ணாமலை?”

“கடவுள் எங்கிருந்தாலும் வரவும்”... 001% கற்பனை கலந்த உண்மைக் கதை!

ய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உள்விளையாட்டு[+அரட்டை] அரங்கம்.

வெட்டிக் கதைகள் பேசிப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த கிழங்களில் ஒரு ‘கத்துக்குட்டி’, தனக்கான ஒரு சந்தேகத்தைச் சபையில் சமர்ப்பித்தது. அது.....

“சாமிக்குப் பூஜை செய்யும்போது அர்ச்சகர் மணி அடிக்கிறாரே, அது எதற்கு?”

உடனடியான பதில் இல்லை. எல்லோருமே தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டார்கள்.

மௌனம் கலைத்தார் நெற்றி நிறைய விபூதி பூசிய ஒரு கிழவர்; “பூஜை ஆரம்பம் ஆயிடிச்சி. எல்லோரும் சாமி தரிசனம் பண்ணுங்கன்னு தெரியப்படுத்துவதற்காக” என்றார்.

திருநீற்றுப் பட்டையின் நடுவே குங்குமப் பொட்டு வைத்திந்த ஒரு பழங்கிழம், “தும்மல், இருமல் போன்ற ஓசைகளோ, ஒழிக, தொலைஞ்சிபோ என்பனவாக அக்கம்பக்கத்தில் இருப்போர் சொல்லும் அமங்கல வார்த்தைகளோ சாமி மீதான பக்தர்களின் கவனத்தைச் சிதைக்காமலிருக்க” என்றது. 

ஒரு 'பொக்கை வாய்'க் கிழம், "பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு. காரணத்தை ஆராய்வது தப்பு” என்றது அழுத்தம் திருத்தமாக.

“இதெல்லாம் இல்லை. சிலையிலிருந்து வெளியேறி ஊர் சுற்றப்போன சாமியை, ‘பக்தர்கள் ரொம்ப நேரமா காத்திருக்காங்க, நீ எங்கிருந்தாலும் வந்துசேர்’ என்று எச்சரிக்கும் அவசர அழைப்பு” -இது அடியேன்.

சில முழுச் செவிடுகளைத் தவிர, அனைத்துக் கிழங்களும்[சங்கத்திற்குக் கிழவிகள் வருகை தராதது புரியாத புதிர்] ஒருங்கிணைந்து என்னை முறைத்ததுகள்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து ஒரு மாதிரியாகச் சமாளித்தேன் நான்.

ஹி... ஹி... ஹி!!!

தூ.குடி வி.நிலைய முனையத்தைக் காணொலி மூலம் திறப்பாரா தர்மச் சக்கரவர்த்தி?

//தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை[terminal]ப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் & சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

இதன் பொருட்டு இன்று இரவே மாலத்தீவிலிருந்து[5 நாள் சுற்றுலா முடிந்து] விமானம் மூலம் தமிழ்நாடு வருகிறார் ‘தர்மச் சக்கரவர்த்தி’ மோடி.

மோடியின் பயணங்கள், அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கானவை[அண்மையில் பாகிஸ்தானுடனான போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவை ஆதரித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது! ஹி... ஹி...ஹி!!!].

அவரின் தூ.குடி வருகை, அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் உலகச் சுற்றுப் பயணத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதி[2025 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அவர் தன் 5 நாள் சுற்றுலாவை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது].

எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், அதைத் தொடங்குவதற்கும் வசதியாக, தூத்துக்குடிக்கான பயணத்தை ரத்து செய்து, முனையத் திறப்பு நிகழ்வைக் காணொலி[நேரலை] வாயிலாக[குறைந்த அவகாசத்தில்] நம் தர்மச் சக்கரவர்த்தி மோடி அவர்கள் செய்துமுடிக்கலாம் என்பது நம் எண்ணம்; பரிந்துரையும்கூட.

* * * * *

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/police-security-increased-due-to-pm-modi-to-visit-thoothukudi//