எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

மோடி இந்த நாட்டின் பிரதமரா, இந்துமதப் பாதுகாவலரா?!?!

இஸ்ரேல் நாட்டில் கட்டுமான வேலை பார்ப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஹரியானாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட இளைஞர்கள், "இந்தியாவில் பட்டினியால் சாவதைவிடப் போரில் சாவது மேலானது" என்று கூறியுள்ளனர்[tamil.oneindia].

ஹரியானாவில் அரசு சார்பில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஹரியானவில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்ககைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் ‘மாஸ்டர் டிகிரி’வரை முடித்த இளைஞர்கள் அணிவகுத்து நின்றனர்.

வேலை தேடி வந்திருந்த ஜிதேந்தர் சிங்[வரலாறு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்], "ஹரியானாவில் வேலை வாய்ப்பு மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்தததுதான். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்புடன் அந்த அரசு போர் நடத்துகிறது. இதனால் உள்ள அச்சுறுத்தல் பற்றி நான் நன்கு அறிவேன். இருந்தாலும், பட்டினியால் இங்கு சாவதைவிட இஸ்ரேலில் வேலை செய்துகொண்டு சாவது எவ்வளவே மேல் என்று நினைக்கிறேன்" என்றார்.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்திலிருந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக வந்த மனிஷ் குமார் என்ற இளைஞர் கூறுகையில், "இஸ்ரேலில் கட்டுமான பணியில் ஈடுபடும் வேலைக்காக என்னை எனது ஏஜெண்ட் இங்கு அனுப்பினார். அவர் 1.5 லட்சம் பெற்றுக்கொண்டார்” என்றார்.

மேற்குறிப்பிடப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான் இளைஞர்கள் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதிலும் உள்ள பல இளைஞர்களின் நிலை இதுதான்.

மெத்தப் படித்தவர்கள் என்றில்லை, படிக்காதவர்களும் படிக்க வசதி இல்லாதவர்களும்கூட, தென் இந்தியா நோக்கி[குறிப்பாக, தமிழ்நாடு] கூட்டம் கூட்டமாக வேலை தேடி வருவது[கட்டுமானம், உணவு விடுதி, சாலை அமைத்தல் போன்றவற்றில்] இங்குள்ளவர்களை மிரள வைப்பதாக உள்ளது.

வறுமை, நோய், இன மோதல்கள் என்று எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன; நிறைவேற்றப்படுதற்குரிய நாட்டு நலப்பணிகளின் பட்டியல் மிக நீளமானது.

இவற்றில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஸ்ரீராமன் புகழ் பாடுவதிலும், பக்தி நெறி பரப்புவதிலும், நாட்கணக்கில் விரதம் இருப்பதிலும் தன் நேரத்தில் பெரும் பகுதியைச் செலவிடுகிறார் நம் பிரதமர்; புனிதப் பயணங்களும் மேற்கொள்கிறார்.

எதிர்க் கட்சிக்காரர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று எவரும் ராமனுக்குக் கோயில் கட்டுவதை எதிர்க்காத நிலையில், மேற்கண்ட, அவசியமில்லாத துரித நடவடிக்கைகளின் மூலம், தன்னை ஆகச் சிறந்த ஸ்ரீராம பக்தராக உலகறியச் செய்வதில் மோடி காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது; கவலையில் ஆழ்த்துகிறது.

இவர் இந்தியா என்னும் நாட்டின் பிரதமரா, இந்துமதத்தின் முழு நேரப் பாதுகாப்பாளரா[கோயில் பணியை இந்து அமைப்புகள் மட்டுமே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மோடி தலையீடு மிகத் தவறானது] என்று சந்தேகம் கொள்ளவைக்கிறது.

வேலை தேடி அலையும் இளைஞர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி காப்பாற்றுவாராக!

Dying in war is better than dying of starvation in India Haryana youths who attends interview for Israel jobs

“எங்க ஊர்ப் ‘பிடாரி அம்மன்’ஐத் தரிசிக்க வருவாரா பிரதமர் மோடி?”

 [‘ஆந்திரப் பிரதேசத்தின் லெபாக்‌ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்’ -இந்து நாளிதழ்]

அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ‘பிராண பிரதிஷ்டை’[?!] விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதை முன்னிட்டு, கடந்த 11ஆம் தேதி முதல் விசேஷ விரதத்தைக் கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லெபாக்‌ஷி வீரபத்ர சுவாமி கோயிலுக்குப் பிரதமர் மோடி வருகை தந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோயிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களைப் பக்தர்கள் பாடக் கேட்டார்.

லெபாக்‌ஷியின் சிறப்பு: ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது அதனைப் பார்த்த பறவையான ஜடாயு, அவரை மீட்கும் முயற்சியில் பலத்த காயமடைந்தது. சீதையைத் தேடி ராமர் அந்த வழியாக வந்தபோது அவரிடம் சீதையை ராவணன் கடத்திச் சென்றதைக் கூறி உயிர்விட்டது. இதனையடுத்து, ராமரால் ஜடாயு மோட்சம் பெற்றது. ஜடாயு மோட்சம் பெற்ற இடமே லெபாக்‌ஷி என்று கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசப் பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா செல்லும் பிரதமர் மோடி, அங்கு குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார்[கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே இந்தப் புனிதமான வழிபாட்டுப் பயணத்தை இவர் தொடங்கியிருக்கலாம் என்பது நம் எண்ணம்]. -இது சிறப்புச் செய்தி[‘இந்து தமிழ்’.

இவ்விரண்டு கோயில்களிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, நாமக்கல் அருகே உள்ள பிடாரி அம்மன் கோயிலுக்கும் வருகைபுரிந்து, அம்மனை மோடி அவர்கள் தரிசித்துச் செல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.
* * * * *
பிடாரி அம்மனின் சிறப்பு: சீதாப் பிராட்டியைக் கடத்தும் நோக்கத்துடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இராவணன், நாமக்கல்[வான் வழி] வழியாகத்தான் வான ஊர்தியில் பறந்து சென்றதாகவும், தீய நோக்கத்துடனான அவனின் வருகை பற்றி, நாமக்கல்-நாட்டாமங்கலம் சாலையில், 7 கல் தொலைவில் குடிகொண்டிருக்கும் ‘பிடாரி அம்மன்’ தன் வாகனமான ‘கொடுவாள் மூக்கன்’ என்னும் கருடன்[ராவணனின் ஊர்தியைக் கடந்து சென்ற ராட்சதக் கழுகு] மூலம் தகவல் அனுப்பி எச்சரித்தார் என்பது கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்தி.