ஞாயிறு, 19 மே, 2024

புனைகதைகளாலும் போலிச் சாமியார்களாலும் பிரபலமான திருவண்ணாமலை!!!

திருவண்ணாமலை.

இந்த மலை சிவலிங்க வடிவத்திலிருக்கிறது என்று எவனோ சொல்லிப்போனான். அங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, போய்த் திரும்புகிறவர்களும் அதையே சொல்லித் திரிகிறார்கள். அண்மையில் அங்குச் சென்றிருந்த நான் கண்டது மரங்களே இல்லாத, சிறு சிறு புதர்களும் முள் மரங்களும் உள்ள சிவலிங்கத்தைக் கொஞ்சமும் ஒத்திராத ஒரு மலையைத்தான்.

‘முக்கோணம் நெருப்பு தத்துவத்தை குறிக்கும். திருவண்ணாமலை மேல் நோக்கிய ஒரு முக்கோணம்’ என்று இன்னொரு பொய்யன் கதைத்திருக்கிறான். ஊன்றிக் கவனித்தபோது முக்கோணம், செங்கோணம், குறுங்கோணம் என்று எந்தவொரு கோணத்திலும் திருவண்ணாமலை காட்சியளிக்கவில்லை.


அது நந்தி படுத்திருப்பது போல் இருக்கிறது என்கிறார்கள். கால்களைக் காணோம்; காதுகளும் இல்லை; தலையும் இல்லை. ஒரு பக்கம் சற்றே நீண்டு மறுபக்கம் உயர்ந்து காணப்படுகிறது. அது நந்தி போலவுமில்லை, குந்தியிருக்கும் குந்திதேவி போலவும் இல்லை.


அடிவாரத்திலிருந்து மேல் நோக்கி நடந்தால் ‘குரு நமச்சிவாயர்’ குகையைக் காணலாம். முழு முதல் கடவுள் சிவனே நமச்சிவாயர் வடிவெடுத்து வந்து அங்கு வாழ்ந்தாராம். பார்த்தவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இதைப் பலரும் நம்புகிறார்கள்[அதே சிவபெருமான்தான் இப்போது ஞானி ‘பசி’பரமசிவம் ஆக இந்த மண்ணில் அலைந்து திரிகிறார் என்றால் நம்புவார் உண்டா? ஹி... ஹி... ஹி!!!]


இன்னும் இப்படிப் புனைந்துரைக்கப்பட்ட ஏராளக் கதைகள் வெறும் கரடுமுரடாகக் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைத் தெய்வம் தங்கியிருக்கும் புனிதத் தலம் ஆக்கிவிட்டன.


இந்த இடம் இன்று உழைத்துப் பிழைக்க விரும்பாத சோம்பேறிகளின் புகலிடம் ஆகிவிட்டது[வயதானவர்கள்&நிராதரவானவர்கள் எண்ணிக்கை குறைவு].

மண்டபங்களிலும், சாலை ஓரங்களிலும் காவி உடுத்துத் தாடி வளர்த்து நூற்றுக்கணக்கானவர்கள் தங்கியிருக்கிறார்கள்; எங்கோ போகிறார்கள்; வருகிறார்கள்.


திருவண்ணாமலையின் சுற்றுப்[கிரிவலம்]பாதையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். அது உண்மையோ பொய்யோ, அடிக்கு ஒரு சாமியார் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இதில் வசதியுள்ளவர்கள் ஆசிரமம் அமைத்து[பொது இடத்தில்தான்] தங்கியுள்ளார்கள். அது இல்லாதவர்கள் நடைபாதையில் படுத்துக்கிடக்கிறார்கள்.


கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கடைகள். வியாபாரிகள் காட்டில் 365 நாட்களிலும் அடைமழைதான்.


திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் ஆசிரமங்களும் தன்னார்வலர்களும் இந்த வேடதாரிகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் இவர்களின் தேவைகள் பூர்த்தியாகின்றன.


காலையில் பாபு சாமி ஆஸ்ரமம், மதியம் ரமணாஸ்ரமம், விசிறிச் சாமியார் ஆஸ்ரமம், மாலையில் திருநேர் அண்ணாமலை சந்நிதானம், வெள்ளிக்கிழமையில் மசூதியில் பிரியாணி. பௌர்ணமி தோறும் அன்னதானம். தினமும் வருகையாளர்கள் வழங்கும் பாக்கெட் சாதம். ஆக.....


வேளாவேளைக்கு வயிறு புடைக்கச் சாப்பிடுகிறார்கள் சாமியார்கள். பட்டினி என்னும் பேச்சுக்கே இடமில்லை. கஞ்சா, மது என்று போதை ஏற்றிச் சொர்க்கச் சுகம் அனுபவிப்பவர்களும் உள்ளனர்.


இந்தப் புனிதத் தலம் சோம்பேறிகளின் புகலிடம் மட்டுமல்ல, மனநிலை பாதித்த பைத்தியங்களை நடமாடும் சாமிகளாக்கி வழிபடும் கிறுக்கர்களை உருவாக்கும் இடமாகவும் உள்ளது.


‘திருவண்ணாமலை தொப்பி அம்மா’ என்று தேடுபொறியில் தட்டச்சு செய்தீர்களேயானால், தலையில் தொப்பியுடன், அழுக்கேறிய அலங்கோல உடையில் ஒரு பைத்தியக்காரி[இவளைப் பற்றியக் காணொலிகளைக் கணக்கிடுவது அத்தனை எளிதல்ல] மனம்போன போக்கில் அலைவதையும், முட்டாள் மனிதர்கள் அவளைக் குனிந்தும் விழுந்தும் கும்பிடுவதையும், அவள் தின்று வீசி எறிந்த எச்சில் பண்டத்தைப் பக்திப் பரவசத்தோடு பங்கிட்டு உண்பதையும்[*காணொலி முகவரி கீழே] காணலாம்{இவளைப் படம் பிடித்து[வீடியோ] யூடியூபில் வெளியிட்டுக் காசு பண்ணுகிறார்கள் சில கயவர்கள் என்பதும் அறியத்தக்கது}.

பதிவு பெரிதும் நீளும் என்பதால், திரட்டப்பட்ட தகவல்களில் பல இடம்பெறவில்லை.


*https://x.com/i/status/1786457300091203898 https://x.com/_kabilans/status/1786457300091203898  > தொப்பி அம்மா.


ஆதார முகவரிகள்:


https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/the-video-of-a-saint-who-is-boozing-near-thiruvannamalai-temple-gone-viral/tamil-nadu20220915212527036036966 > ‘தண்ணி’ அடிக்கும் சாமியார்.


https://www.dinakaran.com/intensitywork-criminalbackground-thiruvannamalai-kriwalabathi-200people-oneday/ > காவல்துறை விசாரணை.


https://www.nakkheeran.in/special-articles/special-article/thiruvannamalai-girivalam-devotees


https://brseetha.blogspot.com/2017/07/blog-post_4.htm

https://temple.dinamalar.com/news_detail.php?id=4156

https://ta.quora.com/


சனி, 18 மே, 2024

இத்தனை அப்பாவியா அமித்ஷா?!

யாரேனும் தென் மாநிலங்களைத் தனி நாடு என்ற தொனியில் பேசினால் அது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நாட்டை இனியும் யாராலும் பிரிக்க முடியாது. மூத்த தலைவர் ஒருவர் வட இந்தியா, தென் இந்தியா என்று பிரிக்கலாம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை நிராகரிக்கவில்லை[இந்து தமிழ்].

பிரிவினை பற்றி ஒருவர் பேசியிருப்பது நம்மைப் போன்ற பரந்துபட்ட பொது அறிவுள்ள அறிவுஜீவிகளுக்கே[ஹி... ஹி... ஹி!!!] தெரியாது. இந்தியக் குடிமக்கள் உட்பட ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் தெரியாது.

ஊடகப் பேட்டி ஒன்றில் அமித்ஷு இப்படிப் போட்டு உடைக்காமல் இருந்திருந்தால், இந்தப் பிரிவினைப் பேச்சு காற்றோடு கலந்திருக்கும்.

இதற்கு முன்பு[ஆங்கிலேயரால் ‘ஏக இந்தியா உருவாக்கப்பட்ட நிலையில்] இந்தியாவை யாரோ பிரித்தார்கள் என்று எண்ணும் வகையில், “இனியும் இந்தியாவை யாராலும் பிரிக்க முடியாது” என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

“இத்தனை அப்பாவியாக இருக்கிறாரே உள்துறை அமைச்சரான இந்த அமித்ஷா என்பதை நினைத்தால், நம் மனம் வெகுவாகக் கவலைப்படுகிறது!


* * * * *

https://www.hindutamil.in/news/india/1249171-considering-south-as-separate-country-highly-objectionable-shah-counters-ktr.html

‘முஸ்லிம்’... தேர்தல் வெற்றிக்கு, ‘பாஜக’ கையாளும் மந்திரச் சொல்?!?!

“மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11ஆவது இடத்தில் இருந்து இன்று 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது[முதலாவது என்றே சொல்லியிருக்கலாமே?] பெரிய பொருளாதார நாடாக மாறும்” -நட்டா[இந்து தமிழ்]

நட்டாவின் கணக்குப்படி, 11ஆவது இடத்துக்கும் 5ஆவது இடத்துக்கும் இடையிலுள்ள 6 இடங்களைக் கடந்து முன்னேற இந்தியாவுக்கு[மோடி ஆட்சியில்]10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேற[பொருளாதார வளர்ச்சியில்] இடைப்பட்ட ஓர் இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. அதாவது ஓர் இடத்தைக் கடக்க 3 ஆண்டுகள் தேவை என்கிறார் ஜெ.பி. நட்டா.

6க்கு 10 என்றால், 1க்கு 3 தேவையா?

என்ன கணக்கு இதெல்லாம்?

இந்தப் புள்ளிவிவரக் கணக்குக்கு ஆதாரம் வைத்திருக்கிறாரா அவர்?

ஆதாரம் உள்ளதோ இல்லையோ, மோடியைப் புகழ்வதற்கு இப்படியெல்லாம் கணக்குக் காட்டியிருக்கிறார்.

அவரின் இந்தக் கணக்கை விமர்சிப்பது நம் நோக்கமல்ல.

உரையின் இறுதியில், கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கக் கர்னாடக அரசு முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்காவிட்டால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாக நம்புகிறார்களா ‘பாஜக’ தலைவர்கள்?

“ஐயோ பாவம் மோடி கூட்டம்” என்று பரிதாப்படுவதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை!

                                   *   *   *   *   * 

https://www.hindutamil.in/news/india/1249639-if-modi-becomes-pm-india-will-become-world-s-3rd-largest-economy-in-3-years-jp-nadda.html


ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையாமலிருக்க.....[அனுபவப் பகிர்வு]

வெள்ளி, 17 மே, 2024

வயித்துப் பசியும் காதல் பசியும்![உண்மைக் கதை]

ண்பகல் இடைவேளையில், விடுதியில் உணவுண்டுவிட்டுக் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு மரத்தடியில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் தாமரை.

“தாமரை” -குரல் கேட்டு நிமிர்ந்தாள். 

அவளின் வகுப்புத் தோழன் செல்வம்  நின்றுகொண்டிருந்தான்.

அவளருகில் அமர்ந்து, “எனக்கு வசதியான குடும்பம். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும்கிற அவசியம் இல்ல. உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்னு பல தடவை சொல்லியிருக்கேன். நீ சம்மதிச்சா, என் பெற்றோர் அனுமதியோடு உன்னைக் கல்யாணம் பண்ணிக்குவேன்.  சந்தோசமா வாழலாம். சம்மதம் சொல்லு தாமரை” என்றான்.

“சொல்லுறேன். என் அம்மா கல்லூரியில் படிக்கும்போது, உன்னை மாதிரி வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சக மாணவன் அம்மாவை வற்புறுத்திக் கல்யாணம் கட்டிகிட்டான். நான் ஒருத்தி பிறக்கும்வரை அம்மாவுக்கு எந்தக் குறையும் வைக்கல. அப்புறம், குடி, கூத்தி, கள்ள உறவுன்னு அவன் நடத்தையே மாறிடிச்சு. கடுமையா கண்டிச்ச அம்மாவை வீட்டைவிட்டே விரட்டியடிச்சிட்டான்…..”

 சற்று நேரம் யோசித்த பின்னர் தொடர்ந்து பேசினாள்.

“பெத்தவங்களோட கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாம அவனோடு ஓடிப்போன அம்மா நிராதரவா நின்னா. ஆனாலும், வாழ்ந்து காட்டணும்கிற லட்சியத்தோடு, வீடுகளில்  வேலைக்காரியா உழைச்சா…..

ஒரு வாடகை வீட்டில் இருந்துட்டு, வேளா வேளைக்குச் சாப்பிடாம சேமிச்ச பணத்தில் என்னைப் படிக்க வைத்தாள்; நான் நல்லா படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா வறுமையிலிருந்து விடுபடலாம்னு நம்பினாள்.

செல்வா, நீ நம்ப மாட்டே, இந்தக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கின அப்புறம்தான் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பிடுறேன். படிச்சி ஒரு வேலை தேடிகிட்டா, என் அம்மாவுக்கும் வயிறாரவும் வாய்க்கு ருசியாவும் சாப்பாடு போட முடியும்.

முதல் தேவை வயித்துக்குச் சோறு. அப்புறம்தான் காதல் கல்யாணம் எல்லாம். என்னை மன்னிச்சுடு நண்பா.”

தடைபட்ட புத்தக வாசிப்பைத் தொடரலானாள் தாமரை.

புதன், 15 மே, 2024

மோடியின் மலைப்பூட்டும் மன வலிமை!!![நக்கல் பதிவல்ல]

பிற உயிரினத்தைப் போலவே, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடிப் பெறுவதற்கும், இனவிருத்தி செய்வதற்கும் பிறந்தவன் மனிதன்; ஆசாபாசங்களுக்கிடையே பல்வேறு உணர்ச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகிறவன்.

அவற்றில், ‘பாலுணர்ச்சி’ முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும், இதைக் கட்டுப்படுத்தவே பெரிதும் போராடுகிறான் அவன்.

இளமைப் பருவத்தில், இதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தையும் அதற்கான வழிவகைகளையும் போதிய அளவு அறியாததால் அதனுடனான போராட்டம் கடுமையாக உள்ளது.

திருமண வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு, புதிய புதிய கடமைகளைச் சுமப்பதாலும், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்வதாலும், அந்த உணர்ச்சியின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது[விதிவிலக்குகள் உள்ளன] என்று சொல்லலாம்.

மனிதன் மணவாழ்க்கை[குடும்பஸ்தன்] என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு, அதாவது, மனைவியிடமிருந்து விலகிச் சென்று[மணவிலக்குப் பெற்றோ பெறாமலோ] தனியனாக வாழும்போது அதன் தாக்குதல் மிகப் பல மடங்கு[இளமைப் பருவத்தைக் காட்டிலும்] அதிகமாகிறது, அவன் ருசி கண்ட பூனை என்பதால்.

ஆக.....

மேற்கண்ட மூன்று நிலைகளில்[இளம் வயது>குடும்ப உறவு>தனிமை], அந்தத் தாப உணர்ச்சியுடன் அதிகம் போராடுவது குடும்பத் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியனாக வாழும்போதுதான்.

அதன் தாக்குதலால் மிகவும் பலவீனப்பட்டு, அது தொடர்பான பல குற்றங்களைச் செய்வதும் தவிர்க்க இயலாததாகிறது.

இந்நிலையை இயன்ற அளவுக்குத் தவிர்க்க.....

‘மடைமாற்றம்’ தேவப்படுகிறது. அதாவது, அவன் தன் ஆற்றலைக் கடின உழைப்பு, பொதுத் தொண்டு, பக்திமார்க்கம்[மனப்பூர்வமானது] போன்றவற்றில் முனைப்புடன் செலுத்துவது மிகு பயன் நல்குவதாக அமையக்கூடும்.

இவ்வாறு, அதி தீவிரமாகச் செயல்பட்டு, சாதனைகள் நிகழ்த்திப் பிரபலம் ஆனவர்கள் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அத்தகையவர்களில் ஒருவராவார்.

குடும்பஸ்தராகி மிகக் குறுகிய காலத்திலேயே மனைவியைப் பிரிந்து[பிரிவு ஏன், எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம அறிய முயற்சிப்பது அநாகரிகம்; குற்றச் செயல்] ‘தனியராக’ வாழ்ந்துகொண்டிருப்பவர்.

மனதைப் பக்தி மார்க்கத்தில் செலுத்தியது, முழு நேர அரசியல்வாதி ஆனது, ‘யோகா’ போன்ற உடல் நலனும் மன நலனும் பேணும் பயிற்சிகளில் ஈடுபட்டது போன்றவை ‘அந்த’ உணர்ச்சியின் கடும் தாக்குதலிலிருந்து விடுபட அவருக்குப் பெரிதும் உதவின என்று உறுதிபடச் சொல்லலாம்[மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் பரப்பவும், தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றவும் அவரின் பக்தி பயன்பட்டது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது].

* * * * *

முக்கியக் குறிப்பு:

‘பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவியின் வேலை & அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்’[இந்து தமிழ்].

https://www.hindutamil.in/news/india/1247463-owns-no-house-or-car-pm-modi-declares-assets-worth-rs-3-02-crore-1.html


திங்கள், 13 மே, 2024

ஆன்லைனில் [திரு]அண்ணாமலையாரின் திவ்வியத் தரிசனம்?

ண்ணாமலையார் கோயிலுக்குக்[திருவண்ணாமலை] குடும்பத்துடன் திடீர்ப் பயணம் மேற்கொண்டேன்; முதல் முறைப் பயணமும்கூட.

முட்டி மோதி, நெருக்கியடித்து வரிசைகளில் அண்ணாமலையாரைத் தரிசிக்க அங்குலம் அங்குலமாக நகரும் பக்தர்கள் கூட்டம் என் மனதை நெருடியது. அழுகிற, எதற்கோ அடம்பிடிக்கிற குழந்தைகளைச் சுமப்பவர்கள் வேறு. கணிசமான அளவில் சிறுசுகளும் பெருசுகளும்.


கண்ணில்பட்ட அத்தனை முகங்களுமே, “இத்தனைக் கூட்டமா?” என்று மலையளவுக்குக் கவலையைப் பிரதிபலித்தன. “எப்படியும் ஆண்டவனைத் தரிக்கத்தானே போகிறோம்” என்று அவர்கள் தங்களைத் தாங்களே ஆற்றுப்படுத்திக்கொள்வதையும் உணரமுடிந்தது.


பிரபலமான கோயில் என்றால் இந்தச் சிரமங்கள் தவிர்க்க இயலாதவைதான். ஆனாலும், புதிய நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இவற்றைப் பெருமளவில் குறைக்கலாமே என்று எண்ணினேன்.


அதிக அளவில் நோயாளிகளை எதிர்கொள்ளும் மருத்துவர்கள் பலரும், இணையம் வழியாக ‘முன் பதிவு செய்தல்[Appointment] முறையைக் கையாளுகிறார்களே, அதைப் பிரபலக் கோயில்[திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சபரிமலை போன்றவை] நிர்வாகங்கள் பின்பற்றினால் என்ன என்றொரு கேள்வி என்னுள் முகிழ்த்தது.


நோயின் தாக்கத்தைப் பொருத்து, உரிய அவகாசத்துடன் நோயாளிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்; நோயாளியும் பயனடைகிறார்[பெரும்பாலும்?]. 


கடவுளைத் தரிசிக்கவரும் பக்தரும் நோயாளிதான்; அதாவது மனநோயாளி. தான் நாடிவந்த சாமியைத் தரிசித்துச் செல்ல அவர் படும் தொல்லைகள் அளப்பரியன.


கோயில் நிர்வாகத்திடம், முன்கூட்டித் தரிசனத்திற்கான நேரத்தைப் பக்தர்கள் அறிந்துகொள்ளும் முறை[சந்திப்பு நேரம்>Appointment] பின்பற்றப்பட்டால், சிரமமின்றிச் அவர்கள் சாமியைத் தரிசித்துச் செல்வது சாத்தியப்படும்.


இம்முறை மூலம், ஒரு பக்தர் குறைந்தபட்சம் அரை நிமிடமாவது சாமியைத் தரிசித்து இன்புறலாம்.


தரிசனத்துக்கான நேரத்தை அதிகாலை முதல் இரவு பத்து மணிவரை என்று வரையறுத்தால் ஒரு நாளில் சில ஆயிரம் பேராவது[நடைமுறைப்படுத்தும்போது சரியான எண்ணிக்கை தெரியும்; குறைகளையும் சரி செய்யலாம்] பயனடைவார்கள்.


விசேட நாட்களில், முழு இரவும் பக்தர்களை அனுமதிக்கலாம்.


கோயிலிலும், ஊடகங்களிலும் உரிய முறையில் அறிவிப்புச் செய்வதன் மூலம் இந்த முறையைப் பக்தர்களுக்குப் பழக்கப்படுத்துவது எளிதானதுதான்.


முன்பதிவு செய்யாமல் வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோயில் மண்டபங்களில் காணொலித் திரைகளில் சாமியைக் கண்டு தரிசிக்க ஏற்பாடு செய்தால் பின்னர் அவர்களும் முன்பதிவு முறையைப் பின்பற்றுவார்கள்.


ஒரு தற்காலிகப் பக்தனின்[பச்சோந்தி] இந்தப் பரிந்துரையைப் பிரபலக் கோயில் நிர்வாகிகள் பரிசீலிப்பார்களா?

                                      *   *   *   *   *

[அடியேனின் நெற்றிதான்! ஹி... ஹி... ஹி!!!]
* * * * *

*****சற்றே குறைவான கருத்துப் பகிர்வுடன் பின்வரும் காணொலி[யூடியூப்] வெளியிடப்பட்டுள்ளது.


காணொலி:


சனி, 11 மே, 2024

விஞ்ஞானிகளை மருட்டும் ஓர் அஞ்ஞானி!!!

‘பிரபஞ்சம்[கோள்களையும் நட்சத்திரங்களையும் பிறவற்றையும் உள்ளடக்கியது] என்பது ஒரு புள்ளியிலிருந்து ஒரு பெரிய பெருவெடிப்பின் மூலம் உருவாயிற்று’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அன்றிலிருந்து இது விரிவடைந்துவருகிறதாம்.

இது விரிவடைகிறது என்றால், இதற்கு ‘விளிம்பு’ இருந்தாக
வேண்டும்.

விளிம்புக்கு அப்பால் எதுவும் இருப்பது உறுதி. அந்த ‘எதுவும்’ எப்படியிருக்கும்?

எதுவும் இல்லை என்றால், விளிம்புக்கு அப்பால் இருப்பது வெற்றிடமா?placeholderTheSimplySpace> ஆங்கில மூலம் கீழே*** இடம்பெற்றுள்ளது.

நம் சந்தேகம்:

‘விளிம்பு’ம், அதற்கு அப்பால் ‘எதுவும்’ இருந்தாக வேண்டும் என்பது வெறும் அனுமானங்களே; ஆதாரங்கள் இல்லை[விரிவடைவதால் விளிம்பு இருந்தாக வேண்டும் என்று நம்புகிறார்கள்].

இந்நிலையில்.....

“தோற்றம், விரிவடைதல், விளிம்பு, எல்லை, கனபரிமானம் என்று எந்தவொன்றும் தேவைப்படாமல், எக்காலத்தும் பிரபஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனுள்ளேதான் பெரு வெடிப்பு, சிறு வெடிப்பு நிகழ்வுகள் எல்லாம்” என்று சொல்லத் தோன்றுகிறது நமக்கு.

அறிவியல் ஆதாரம் ஏதுமற்ற அனுமானம் இதுவாகும்.

போதிய அளவுக்கு அறிவியல் கற்கவில்லையே என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.

“அன்பு கொண்டு வாசித்து நகருங்கள்; நகைக்க வேண்டாம்” என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள்!

அடுத்து இடம்பெறுவது இது தொடர்பானதொரு பழைய என் பதிவுக்கான சுட்டி> https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_5.html <பொழுது போகவில்லையென்றால் வாசியுங்கள்.

  + + + + +

***

placeholderTheSimplySpace

3mo

What Is beyond the Edge of the Universe?

Everything supposedly began with a huge Big Bang and our universe has been


expanding ever since. But what is beyond the edge of the universe? If everything


originated from a point that is now expanding, there must be an edge to the


universe - and if there is an edge, there must logically be something beyond it.


Science provides some exciting approaches to bring us closer to the ultimate end


of our world and the afterlife - but which one is right? 


வெள்ளி, 10 மே, 2024

மோடி தோற்றால்.....

இந்த இந்தியத் திருநாட்டில் பக்திப் பித்தர்கள் மிக அதிகம்[99.99%?] என்பதை ஏற்கனவே அறிந்துகொண்டிருக்கும் நம் பிரதமர் மோடி, 2024 தேர்தலில் அவர்களின் வாக்குகளை அள்ளுவதற்காக, தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருந்தும், மில்லியன் கணக்கில் ரூபாய் செலவு செய்து அயோத்தியில் பாலராமர் கோயிலைக் கட்டினார்.

பிராமண எதிர்ப்பாளர்களைக் கவர, பால ராமர் சிலையை அவரே பிரதிஷ்டை செய்தார்[இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத சாதனை இது].

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக்காரர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணித்ததைப் பரப்புரையின்போது மறவாமல் சாடினார். அதன் மூலம் ராம பக்தர்களின் வெறுப்புக்கு அவர்கள் ஆளாவார்கள் என்று நம்பினார்.

எவரும் எதிர்பாராத வகையில் ராமர் கோயிலுக்குச் சென்று, வேத மந்திரங்கள் முழங்க பால ராமனின் பாதங்களில் விழுந்து, தான் ராமனின் அதி தீவிரமான பக்தன் என்பதைக் காட்டிக்கொண்டார்.

தேர்தல் பரப்புரைக்கிடையே, செல்லும் ஊர்களிலுள்ள பிரபல சாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். இதன் மூலம், ராம பக்தர்கள் என்றில்லாமல் அனைத்துப் பக்தக் கோடிகளின் வாக்குகளும் தனக்கு[+கட்சி வேட்பாளர்கள்]ச் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்று நம்பினார்.

இ.கூட்டணியினர் மீதான உச்சக்கட்ட வெறுப்பில்.....

“இந்தியா கூட்டணிக்காரர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால், அயோத்தி ராமர் கோயிலைப் பூட்டிவிடுவார்கள்”[ஊடகச் செய்தி] என்று கடுமையாக மக்களை எச்சரித்திருக்கிறார்.

ஆக, மோடி தன் பரப்புரையின் மூலம், என்றென்றும் தான் ராமபிரானின் அடிமை என்பதை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பார்க்கும்போது, தன் வெற்றிக்கு முழுக்க முழுக்க ராமனையே அவர் நம்பியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

இந்நிலையில், அவர் தேர்தலில் தோல்வியைத் தழுவுவாரேயானால்.....

மனநிலை பாதிக்கப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அவலம் நிகழக்கூடாது.

இவரைப் போல ஆகச் சிறந்த பக்திமான் உலக அளவில் எவரும் இல்லை என்பதால் இவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

எனவே, ‘பாஜக’  வேட்பாளர்களை மிக அதிக அளவில் வெற்றி பெறச் செய்து, மீண்டும் மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது இந்நாட்டு மக்களின் கடமை ஆகும்.

வெல்க மோடி! வளர்க அவரின் ராமர் பக்தி!! 

                                   *   *   *   *   *

https://news7tamil.live/modis-claim-that-ram-temple-will-be-locked-once-congress-comes-to-power-is-a-blatant-lie-priyanka-gandhi-vadra.html#google_vignette

‘அந்தரங்க உறவு’... எச்சரிக்கை[+யூடியூப் காணொலி]!

ருகில் யாரும் இல்லாதபோதுதான் கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அது ‘அந்தரங்க’ உறவாயிற்று.

சில நேரங்களில் குழந்தைகள் இருந்தாலும்{விளையாடிக்கொண்டோ உறங்கிக்கொண்டோ[எதிர்பாராமல் உறக்கம் கலைவது நிகழலாம்] அதை அலட்சியப்படுத்தி   லீலையைத் தொடர்வதுண்டு.

இது ஆபத்தானது. 

குழந்தையின் வயது மூன்றுக்கும் குறைவாக இருப்பினும், இவர்களின் அ.உறவை அது பார்த்தால், அந்நிகழ்வை அதன் மூளை பதிவு செய்கிறது. வளர் பருவத்தில் அவ்வப்போது அது குழந்தையின் மனத்திரையில் தோன்றி, நடத்தையில் விபரீத விளைவுகளை உண்டுபண்ணும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆகவே, தம்பதியரே, ‘அது’ விசயத்தில் மிகவும் விழிப்புடன் செயல்படுவீர்!

                                        *   *   *   *   *

 விக்கிப்பீடியா:

‘குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் அது பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளை பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் அப்போது குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்று வயதிற்கு மேல்தான் அவை அவ்வப்போது நினைவோட்டமாக மனதில் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D

‘யூடியூப்’ காணொலி:

வியாழன், 9 மே, 2024

அயல் கிரகக் குடியேற்றம் அவசியமா? ‘யூடியூப்’ காணொலி காண்க!

                          
                           *   *   *   *   *

அமேசானில்[கிண்டில்] வெளியாகியுள்ள, ‘அறிவுஜீவி’யின்[ஹி...ஹி... ஹி!!!] 50 ஆவது நூல்[இந்தத் தளத்தில் வெளியான 9 பதிவுகளின் தொகுப்பு]:

செவ்வாய், 7 மே, 2024

அற்ப ஆயுள்! அதிகரிக்கும் சுகபோகங்கள்!!

ன்று கட்டை வண்டிப் பயணம்; 
இன்று விமானம்.
தகவல் அனுப்ப அன்று ஆள் தேவை: 

இன்று விதம் விதமாய்க் கைபேசியும் 

பிறவும்.

இன்னும்,

கண்டு களிக்கக் காணொலிகளும்

தொ.கா.சாதனங்களும்.

மேலும்,

உண்டு மகிழச் சுவை சுவையாய்ப்

புதிய உணவு வகைகள்;

உடலுறவுச் சுகத்தை நீட்டிக்கப்

புதிய புதிய மாத்திரைகள்.

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ 

சுகபோக வசதிகள் இருந்தும்

அத்தனைச் சுகங்களையும் நோயின்றி

அனுபவிக்க 

இப்போதுள்ள ஆயுள் போதாதே!

அறிவியலாளர்கள் சிந்திப்பார்களா?

அறிவாளர்களும்தான்.

                                                 

‘யூடியூப்’ காணொலி[குறைப் பிரசவம்]: 

https://www.youtube.com/shorts/8mhyaLuDOU0?feature=share

திங்கள், 6 மே, 2024

மோடியின் 100% வெற்றிக்கு உதவுபவை பாலராமன் பாதங்களா, வாக்காளர்களின் திருவடிகளா?

டைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில், மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்பாரோ அல்லவோ, அவர் மட்டுமேனும் வெற்றி பெறுவது மிக அவசியம். இல்லையேல், வெகுவாக மனம் உடைந்துபோவார் என்பது உறுதி.


பரப்புரையில் பல்வேறு உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டும்கூட மீண்டும் ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றுவதில் அவர் முழு நம்பிக்கை பெறவில்லை என்பதை, தான் முன்னின்று கட்டிமுடித்த அயோத்திப் பாலராமர் கோயிலுக்குச் சென்று, வேதமந்திரங்கள் முழங்க, நெடுஞ்சாண்கிடையாகச் சிலையின் முன்னால் விழுந்து வழிபட்டதன் மூலம் அறிய இயலுகிறது.

தேர்தலில் வெற்றியைத் தழுவினால், அதற்குப் பாலராமனின் கருணை என்று சொல்லிப் பெருமிதப்படுவார்.

தோற்றுவிட்டாலோ மௌனம் சாதிப்பார்; அல்லது, பழம்பிறப்புகளில் தான் செய்த பாவங்கள் காரணம் என்று சொல்லித் தன்னைத்தானே தேற்றிக்கொள்வார்.


நேர்ந்துகொண்டு, நினைத்த காரியம் நிறைவேறினால் அது கடவுளின் கருணை என்பதும், விளைவு நேர்மாறானது என்றால் பக்தர்கள் தாமே தம் மீது பழி சுமத்திக்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். மோடியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.


எனவே, பாலராமனைச் சரணடைந்ததால், அவர் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று உறுதிபடச் சொல்ல இயலாது.


அது 100% சாத்தியப்படுவதற்கான ஒரே வழி.....

இனியும் பாலராமன் சிலை முன்பாகவோ, வேறு சாமிகளின் சிலைகளின் முன்பாகவோ நீட்டிப் படுத்துப் பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து, தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்கள் அத்தனைப் பேரின் திருவடிகளிலும்[சற்றே குறைந்தாலும் பாதகமில்லை] விழுந்து கும்பிடுவது மிகவும் பலன் தருவதாக அமையும்.


செய்வாரா மோடி? 


செய்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்!


                                *   *   *   *   *

https://tamil.abplive.com/elections/prime-minister-modi-swami-darshan-at-ayodhya-ram-temple-video-going-viral-on-the-internet-181799