“குதிகால்[கன்றுத் தசை] நம்முடைய இரண்டாவது இதயமாம், இது நம் உடல் முழுவதும் இரத்தத்தை மேல்நோக்கிச் செலுத்துவதால்.” -சொல்கிறவர் ஒரு மருத்துவ அறிஞர்.
“நிலத்தின் ஈர்ப்புவிசையானது கால்களில் இருந்து ரத்தம் மேல்நோக்கிப் பாய்வதைக் குறைக்கிறது. குதிகால் தசைகளைப் பராமரிப்பதன் மூலம் இந்தக் குறையைப் போக்கலாம்” என்கிறார் அவர்.
பராமரிப்பு என்பது குதிகாலுக்குப் பயிற்சி கொடுப்பதுதான்.
நடக்கும்போதும் ஓடும்போதும் குதிக்கும்போதும் கால்களை நீட்டி மடக்கும்போதும் குதிகால் ரத்தக் குழாய்கள்[+நரம்புகள்] இறுக்கி அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்தம் மேல்நோக்கிப் பாய்கிறது; பரவுகிறது.
மேலும், இப்பயிற்சி, உடம்பின் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகள் தளர்ச்சியடைவதைத் தடுக்கிறது; பாதங்களில்[காலின் கீழ்ப் பகுதிகளில்] ரத்தம் உறைவதையும், அது வீங்குவதையும்கூட இது தடுத்துநிறுத்துகிறது; ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கிறது.
மேற்கண்ட பயிற்சிகளுடன்[நடப்பது, ஓடுவது...] முன்னங்கால்களில் நிற்பதையும், சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் தினசரிப் பயிற்சிகளாகச் செய்யலாம்.
மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் & இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பாரின் சாங்கோய் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இவை[https://www.hindustantimes.com/lifestyle/health/cardiologist-explains-you-have-2-hearts-when-1-heart-weakens-the-other-pays-the-price-second-heart-is-in-your-calf-101756350330855.html].
சில பயிற்சிகள்:



