எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கடவுள்கள் இங்கே! கோயில்கள் எங்கே? எங்கே? எங்கே?[+யூடியூப் காணொலி]

‘பாரத்’இல் கடவுள்களே மனிதர்களாக அவதரிப்பதுண்டு. அதனால்தான் இது புண்ணியப் பாரதம்.


அண்மைக் காலத்தில் இங்கு அவதரித்த இரு கடவுள்களில் ஒருவர் மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்]; மற்றொருவர் ஜக்கி வாசுதேவ்[கடவுள்களின் குருவான கடவுள்].


இங்கே, கண்களால் காண இயலாத  கடவுள்களுக்குத்தான்[சிலைகள்] கோயில்கள்[எண்ணிலடங்காதவை] உள்ளன.


நம் கண்ணெதிரே காட்சியளித்து அருள்பாலிக்கிற இந்தத் தெய்வங்களுக்கும், இவர்கள் தங்களின் நிரந்தர இருப்பிடமான ‘பரலோகம்’ திரும்புவதற்குள் கோயில்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும்.


அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது இவர்களால் இரட்சிக்கப்படும் அனைத்து மக்களின் கடமை ஆகும்!